தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 100 நாட்களாக அந்த பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
போராட்டத்தின் 100-வது நாளில் நடந்த போலீசின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்களில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும் இந்த அராஜக செயலை கண்டித்து தமிழகம் முழுவதும் கடை அடைப்புகளும், போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டிவி நடிகை நிலானி, உண்மையில் தூத்துக்குடியில் நடப்பது திட்டமிட்ட படுகொலை என்று வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர்.
அந்த வீடியோவில் அவர் போலீஸ் உடை அணிந்திருந்தார்.
இந்த உடையை அணிவதற்கே ரொம்ப கேவலமாக இருக்கிறது. படப்பிடிப்பில் இருப்பதால் என்னால் போராட்டத்தில் பங்கேற்க முடியவில்லை. என பேசியிருந்தார்.
எனவே நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Actress Nilani facing arrest over her controversial video on Tuticorin police violence