தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல அரசியல்வாதியும் மதிமுக கட்சித் தலைவருமான வைகோ கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார்.
அதுபோல் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும் ஒரு வாரம் காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் விரைவில் குணமடைய வேண்டி சீனுராமசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காலத்தின் நாயகர்களே விரைந்து வருக
இருவரோடும் பழகுவதற்கு பாக்கியம் பெற்றவனின் அழைப்பு இது.
நீங்கள் தந்த ஊக்கமதை ஒருக்காலும் மறவேன்.
‘கலிங்கப்பட்டியின் சிங்கம்’ தலைவர் வைகோ அவர்களும்
என் ‘தென்கிழக்குச்சீமை’ இயக்குனர் பாரதிராஜா அவர்களும்
தொற்று நீங்கி நலமாக விரும்புகிறேன்.
என பதிவிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு பின் குணமாகி பாரதிராஜா வீடு திரும்பி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்….
கொரோனா தொற்று ஏற்பட்டு ஒரு வாரகாலமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். என் நண்பன் டாக்டர் நடேசனின் நேரடி கண்காணிப்பில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நலமுடன் இன்று(டிச., 31) இல்லம் திரும்பிவிட்டேன். நடேசன், சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என் உடல்நிலை பற்றி நலம் விசாரித்த நண்பர்கள், திரைத்துறையினர், அரசியல் பெருமக்கள், உறவுகள் ஆகியோருக்கும் நன்றி. பொதுமக்கள் தொடர்ந்து முகக்கவசங்கள் அணிந்து பொதுவெளியில் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
Seenu Ramasamy tweet on Vaiko and Bharathi Raja health