தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சீனுராமசாமி இயக்கிய தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நாயகனாக அறிமுகமானார் விஜய்சேதுபதி.
அதனைத் தொடர்ந்து தர்மதுரை, இடம்பொருள் ஏவல் உள்ளிட்ட படங்களிலும் இருவரும் இணைந்து பணிபுரிந்தனர்.
விஜய்சேதுபதியின் ஆழமான நட்பு கொண்டவர் என்ற முறையில் அவருக்கு மக்கள் செல்வன் என்ற பட்டத்தையும் அளித்தார் சீனுராமசாமி.
தற்போது மாமனிதன் என்ற படத்திலும் இருவரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் விஜய் சேதுபதி பற்றி தனது ட்விட்டர், மற்றும் முகநூல் பக்கங்களில் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அதில் விஜய்சேதுபதி மீன்குழம்பு சோற்றை சீனுராமசாமிக்கு ஊட்டிவிடும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
“கவளம் பெற்றேன். மூன்று கவளங்கல் கூடுதலாக ஊட்டியும் விடப்பட்டது. சட்டென்று சார் ஆ.. காட்டுங்க என்றான். இது தன்னியல்பில் வருவது.
உள்ளத்தில் எளியவனே இதை செய்ய முடியும். நான் அதை சேதுவிடம் கற்க தொடங்கி நாளாச்சு’’ என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் “பிறருக்கு உணவிட்டு பரிமாறி மகிழ்ச்சியடைபவர்களில் திரு,அஜித், விஜய் சேதுபதியை பார்த்து நெகிழ்ச்சியடைகிறேன்.
அது தனித்து வந்தவர்களின் மனிதாபிமானம்’ என சீனுராமசாமி பதிவிட்டுள்ளார்.
Seenu Ramasamy compared Ajith and Vijay Sethupathi