தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் பல்வேறு கேள்விக்கு பதிலளித்தார்.
“ஆடை அணிவது அவரவர்களின் தனி மனித உரிமை. நம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சென்றிருக்கிறார். அங்கு அவர் கோட் சூட் அணிந்திருக்கிறர்.
அது ஒரு குளிர் பிரதேசம். எனவே அதற்கு ஏற்பதான் உடை அணிய வேண்டும். இதனை கிண்டல் செய்பவர் மனநோயாளிகள்.
ஆயிரம் இருந்தாலும் அவர் நம் தமிழகத்தின் முதலமைச்சர். அதனை எப்படி இழிவாக பார்க்க முடியும்.
பெருந்தலைவர் காமராஜ் ரஷ்யா செல்லும்போது வேட்டி சட்டையுடன் சென்றார். அது இன்னும் பெருமையாக இருந்தது.
பின்னர் ரஜினி, விஜய் சிம்பு குறித்த கேள்விகளை கேட்டனர்.
சினிமாவில் ரஜினிகாந்திற்கு அடுத்த நிலையில் விஜய் இருக்கிறார். அவர் தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவார்.
யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள், விஜய் கட்சி ஆரம்பித்தால் அதை வரவேற்பேன்.
சிம்பு படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை. அதுதான் அவரது பெரும் பிரச்சினையாக இருக்கிறது.” என பதிலளித்தார் சீமான்.
Seeman talks about EPS Rajini Vijay and Simbu