ஆட்சியாளர்களுக்கு வருங்கால அக்கறை இல்லை.; ‘இராவண கோட்டம் – தமிழர் நாட்டம்’ என சீமான் பாராட்டு

ஆட்சியாளர்களுக்கு வருங்கால அக்கறை இல்லை.; ‘இராவண கோட்டம் – தமிழர் நாட்டம்’ என சீமான் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி, பிரபு, இளவரசு, தீபா, சஞ்சய் உள்ளிட்ட பல நடித்திருந்த திரைப்படம் ‘இராவணக்கோட்டம்’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்த இந்த படத்தை கண்ணன் ரவி என்பவர் தயாரித்து இருந்தார்.

இந்த படம் வெளியாகி பலரின் பாராட்டை பெற்ற நிலையில் இந்தப் படத்தை பார்த்த நாம் தமிழர் கட்சி சீமான் நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டு இந்த படத்தையே பாராட்டியுள்ளார்.

அந்த பதிவில்…

’இராவண கோட்டம்’ திரைப்படம் கண்டேன். நான் பிறந்து வளர்ந்த இராமநாதபுரம் மாவட்ட மண்ணையும் மக்களையும் அங்குள்ள சிக்கல்களையும் அதனதன் இயல்பு மாறாமல் இப்படம் நேர்த்தியாகப் பதிவு செய்திருப்பது கண்டு மகிழ்ந்தேன், நெகிழ்ந்தேன்.

’இராவண கோட்டம்’ எனத் தலைப்பிட்டு, இது போன்ற ஒரு கதைக்களத்தை திரைப்படமாக்கத் தெரிவு செய்யவே தெளிவான புரிதலும் துணிவும் வேண்டும். அத்தகைய தெளிவோடும் துணிவோடும் இது திரைப்படமாக வேண்டிய தேவையையும் நோக்கத்தையும் அடைகாத்து, தரமான ஒரு படைப்பாக்கித் தந்துவிட்ட என் அன்புத் தம்பி இயக்குநர் விக்ரம் சுகுமாரன் அவர்களை உளமாரப் பாராட்டுகிறேன்.

இராமநாதபுரம் மாவட்டத்தின் நிலவியல் தன்மைக்குள் கதை மாந்தர்களாக நடிகர்களைப் பொருத்திய விதம், இராவண கோட்டத்தின் நேர்த்திக்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர், ஒப்பனைக் கலைஞர், ஆடை வடிவமைப்பாளர், இயக்குநர், எனத் துறை சார்ந்த கலைஞர்கள் ஒவ்வொருவரும் இப்படைப்பிற்காக அவரவரின் பங்களிப்பை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

பசுமை படர்ந்த நிலக் காட்சிகளை அழகுறக் காட்சிப்படுத்துவது எளிது. ஆனால், இதுபோன்ற வறண்ட நிலப்பரப்பின் காட்சிகளை அதன் இயல்பு கெடாமலும் அதே நேரம் இரசிக்கும்படியும் படமாக்குவது சவால்கள் நிறைந்தது. அவ்வகையில் காட்சிகளின், கதை மாந்தர்களின் போக்கறிந்து நிலவியலையும் ஒரு கதாப்பாத்திரம் போலக் காட்சிகள் எங்கும் நிறைத்திருக்கிற ஒளிப்பதிவாளர் அன்புத் தம்பி வெற்றிவேல் மகேந்திரன் அவர்களுக்கும் இதற்காக அவருக்குத் துணையாக இருந்த ஆடை வடிவமைப்பாளர், ஒப்பனைக் கலைஞர், கலை இயக்குநர், ஆகியோருக்கும் உளம் நிறைந்த பாராட்டுகள்.

உருக்கமான காட்சிகளிலும் சரி; பரபரப்பான சண்டைக் காட்சிகளிலும் சரி; அதனதன் உணர்வுகள் குலையாமல் சரியாகப் பார்வையாளர்களுக்குள் கடத்திவிடுகிறது லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு. இயக்குநரின் உணர்வோடு ஒத்து பயணித்தால் மட்டுமே இது சாத்தியமாகும். படத்தொகுப்பாளர், தம்பி லாரன்ஸ் கிஷோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

உண்மைக்கு நெருக்கமான இதுபோன்ற கதைக்களத்தில் நிகழும் சண்டைக் காட்சிகள், அசலானவையாக இருந்தால் மட்டுமே படத்தின் நம்பகத் தன்மை கூடும். இந்த பொறுப்புணர்ச்சியின் எல்லை புரிந்து சண்டைக் காட்சிகளைத் திறம்பட அமைத்திருக்கிற தம்பி ராக் பிரபு அவர்களுக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

தம்பி ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும்கூட கதை சொல்லிகளாக அமைந்திருப்பது இராவண கோட்டத்திற்குப் பெரும் பலம். இசையமைப்பாளர் தம்பி ஜஸ்டின் பிரபாகரன் அவர்களுக்கும், உணர்வுப் பூர்வமான பாடல்களை மண்ணின் மணம் கூட்டி எழுதியுள்ளப் பாடலாசிரியர்கள், ஏகாதசி மற்றும் கார்த்திக் நேத்தா ஆகியோருக்கும் பேரன்பின் பாராட்டுகளும் உளம் நிறைந்த வாழ்த்துகளும்.

’இராவண கோட்டம்’ திரைப்படத்தை தான் ஏற்று நடித்த கதாப்பாத்திரத்தால் ஒரு தூண்போலத் தாங்கி நிற்கிறார் என் அன்பு அண்ணன் இளைய திலகம் பிரபு அவர்கள். தம்பி விக்ரம் சுகுமாரனால் உருவாக்கப்பட்ட கதாப் பாத்திரங்களைச் சரியாக உள்வாங்கி அவற்றுக்குத் தங்களின் ஈடு இணையற்ற இயல்பான நடிப்பாற்றலால் உயிருட்டியிருக்கும் என் அன்பு அண்ணன் இளைய திலகம் பிரபு அவர்களையும், பேரன்பு மிக்க மாமா இளவரசு அவர்களையும், வணங்கி, வாழ்த்தி மகிழ்கிறேன்.

கதை நாயகியாக ஆனந்தியும், உடன் நடித்திருக்கிற தீபா சங்கர், பருத்தி வீரன் சுஜாதா, ஆகியோரும் தத்தமது சரியான நடிப்பாற்றல்களை வெளிப்படுத்தி காட்சிகளின் நம்பகத் தன்மையைக் கூட்டுகிறார்கள். எதிர்க்கதாப்பாத்திரம் ஏற்று வரும் முருகனின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்குப் பெரும் பலமாக அமைகிறது. அதுபோலத் தம்பி அருள்தாஸ், தேனப்பன், ஷாஜி, ஆகியோர் ஏற்ற பாத்திரங்களும் அவற்றுக்கான அவர்களின் நடிப்பும் படத்தில் குறிப்பிடத் தகுந்தது. இராவண கோட்டத்தில் இவர்களின் சிறப்பான பங்களிப்பிற்காகப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

இராவண கோட்டத்தின் நாயகனாக வரும் தம்பி சாந்தனு அவர்களை ஒரு முழுமையான நடிகனாக நான் இப்படத்தில் கண்டேன். காதல், கோபம், ஏக்கம், பாசம், நட்பு, விசுவாசம், எனப் பலதரப்பட்ட உணர்வு நிலைகளில் காட்சிக்குக் காட்சி அவரின் நடிப்பாற்றல் நிறைவைத் தந்தது. இப்படத்தில் நடித்ததன் வாயிலாக ஒரு சமூகப் பொறுப்புணர்வு மிக்க கலைஞனாகவும் நிலை உயர்ந்துள்ளார் சாந்தனு. தம்பி சாந்தனு இதுபோலச் சமூகப் பொறுப்புமிக்கப் படைப்புகளில் தொடர்ந்து நடித்து மேலும் பல உயரங்களை அடைய நெஞ்சாரப் பாராட்டி வாழ்த்துகிறேன்.

இப்படி ஒரு கதைக்களத்தை தயாரிக்க முன் வந்ததோடு, அது திரைப்படமாக முழுமை பெற்று வெளியாகச் செய்த தயாரிப்பாளர் இரவி கண்ணன் அவர்களுக்கு உளமார்ந்த நன்றிகளும் பேரன்பின் வாழ்த்துகளும்!

பல்லாண்டுகளாக நாம் பேசி வருவதும் மரங்களின் பிசாசு என்றழைக்கப்படுவதுமான சீமைக் கருவேல மரங்கள், ’உயிர்ச்சூழல் கெடுக்கும் பேரிடர்’ என்பதைப் போகிற போக்கில் ஆழமாகப் பதிவு செய்கிறது இராவண கோட்டம் திரைப்படம். சீமைக் கருவேல மரங்களால் நிகழும் கேடுகள் பற்றியும் நிகழவிருக்கும் வருங்காலப் பேராபத்துகள் குறித்தும், சூழியல் அக்கறையோடு பதிவு செய்கிறது, இராவண கோட்டம்.

வரலாற்றில் நேர்ந்துவிட்ட பிழைகளால் தமிழர்களை ஆளும் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்ட ஆட்சியாளர்களுக்கு, தமிழர் வாழ்வு குறித்தோ வருங்காலம் பற்றியோ துளியும் அக்கறை இல்லை என்பதையும், அதிகாரத்தை தக்க வைக்க அவர்களால்தான் சாதியப் பிரிவினை உணர்ச்சிகள் திட்டமிட்டு புகுத்தப்பட்டுத் தமிழர்கள் பிரித்தாளப்படுகிறார்கள் என்பதையும் இராவண கோட்டம் தெளிவாக எடுத்துக்காட்டி நிறுவுகிறது.

இராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்வைப் பதிவு செய்யும் ’கரிசல் இலக்கியங்கள்’, காகிதங்களில் படைக்கப்பட்ட அளவிற்கு திரைப்படங்களில் இல்லையே என்ற என் நெடுநாள் ஏக்கம் ’இராவண கோட்டம்’ திரைப்படம் கண்ட பிறகுப் பெருமளவு தணிந்தது. இனி வரும் காலங்களில் தொடர்ந்து இம்மண்ணின் நிலவியலையும் வாழ்வையும் திரைப்படங்களாகப் பதிவு செய்ய இப்படம் ஒரு முன்னோடியாக அமைந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. இப்பெரும் படைப்பிற்கு கதை, திரைக்கதை, உரையாடல், எழுதி, இயக்கிய என் அன்புத் தம்பி விக்ரம் சுகுமாரனுக்கு மீண்டும் என் பேரன்பின் முத்தங்களும் மனம் நிறைந்த பாராட்டுகளும்.

இதுபோன்ற படைப்புகள் தொடர்ந்து வர, உலகெங்கும் பரவி வாழும் தமிழர்கள் உடனடியாக இராவண கோட்டம் திரைப்படத்தை திரையரங்குகளில் சென்று பார்த்துப் பேராதரவு தர வேண்டும் எனப் பேரன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இராவண கோட்டம்; தமிழர் நாட்டம்!

Seeman appreciated Raavana Kottam Cast and Crew

தியேட்டர் பணிப்பெண்ணை வைத்து கேக் வெட்டிய ‘பிச்சைக்காரன் 2’ டீம்.: பார்ட் 3 கன்பார்ம்

தியேட்டர் பணிப்பெண்ணை வைத்து கேக் வெட்டிய ‘பிச்சைக்காரன் 2’ டீம்.: பார்ட் 3 கன்பார்ம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த வெள்ளிக்கிழமை மே 19 ஆம் தேதி ”பிச்சைக்காரன் 2′ வெளியானது.

இந்த படத்தை விஜய் ஆண்டனி இயக்கி தயாரித்து நடித்து எடிட்டிங் செய்து இசையமைத்துள்ளார்.

இதில் நாயகியாக காவ்யா தப்பார் நடித்திருக்கிறார்.

இந்த படம் வெளியான நாள் முதலே மக்களின் வரவேற்பை பெற்று வசூல் வேட்டை செய்து வருகிறது.

இதனையடுத்து இந்த படத்தின் வெற்றியை ரசிகர்கள் முன்னிலையில் கொண்டாடி வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி.

சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தின் வெற்றியை கொண்டாடினார்.

அந்த திரையரங்கில் பணிபுரியும் ஒரு பெண்ணை கேக் வெட்ட வைத்து விஜய் உற்சாகப்படுத்தினார்.

மேலும் பிச்சைக்காரன் முதல் பாகத்தில் இடம் பெற்ற அம்மா பாடலை ரசிகர்கள் முன் பாடினார்.

மேலும் பிச்சைக்காரன் பட 3வது பாகம் வெளியாகும் எனவும் ரசிகர்கள் முன்னிலையில் அறிவித்தார்.

இதன்பின்னர் சென்னை பாடியில் உள்ள சிவசக்தி திரையரங்கிலும் ”பிச்சைக்காரன் 2′ படம் பார்த்த ரசிகர்களை சந்தித்தார் விஜய்ஆண்டனி.

Vijay Antony confirmed Pichaikkaran 3

‘பாய்ஸ்’ படத்தில் ஜெனிலியா கேரக்டரில் நடிக்கவிருந்தவர் பிரபல நடிகரின் மகளா.?

‘பாய்ஸ்’ படத்தில் ஜெனிலியா கேரக்டரில் நடிக்கவிருந்தவர் பிரபல நடிகரின் மகளா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

20 வருடங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்படுத்திய படம் ‘பாய்ஸ்’.

பொதுவாக ஷங்கர் படங்களில் சமூக கருத்துக்களும் நல்ல கதை அம்சமும் இருக்கும். ஆனால் ‘பாய்ஸ்’ படத்தில் இளைஞர்களை சூடேற்றும் வகையில் கிளுகிளுப்பான மற்றும் ஆபாச காட்சிகளும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தன.

இந்தப் படத்தில் ஒரே பெண்ணுக்காக ஐந்து நாயகர்கள் அடித்துக் கொள்ளும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

ஒரு தரமான இயக்குனரிடம் இருந்து இப்படி ஒரு கேவலமான படமா? என அப்போதே பரவலான விமர்சனங்கள் எழுந்தன.

இந்த படத்தில் பரத், நகுல், மணிகண்டன், தமன், சித்தார்த் மற்றும் ஜெனிலியா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில் ஜெனிலியா கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தவர் வரலட்சுமி என தற்போது தகவல்கள் வந்துள்ளன.

இதற்கான நடைபெற்ற ஆடிஷனில் வரலட்சுமி தேர்வு செய்யப்பட்டு விட்டதாகவும் ஆனால் அப்போது சரத்குமார் தன்னுடைய மகளை நடிக்க வைக்க அனுமதிக்கவில்லை எனவும் தகவல்கள் வந்துள்ளன.

Who is first choice in Boys for Genelia Character

ரஜினிக்காக என்கௌன்டர் கதையுடன் காத்திருக்கும் ‘ஜெய்பீம்’ பட ஞானவேல்

ரஜினிக்காக என்கௌன்டர் கதையுடன் காத்திருக்கும் ‘ஜெய்பீம்’ பட ஞானவேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஜெயிலர்’ மற்றும் ‘லால் சலாம்’ ஆகிய இரு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.

இந்த இரு படங்களுக்கும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

‘லால் சலாம்’ படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனம் தான் ரஜினியின் 170வது படத்தையும் தயாரிக்கிறது.

இந்த படத்தை ‘ஜெய் பீம்’ இயக்குனர் ஞானவேல் இயக்க உள்ளார்.

இந்த நிலையில் இந்த படம் குறித்து தகவல்கள் கசிந்துள்ளன. ‘ஜெய் பீம்’ படத்தை போன்று இதுவும் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகவுள்ளது.

மேலும் போலீஸ் விசாரணையில் உள்ள போலி என்கவுண்டர்கள் பற்றிய கதையாக இந்த படம் உருவாக உள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

Thalaivar Rajini 170 movie story line

பிச்சைக்காரன் – பிரதமர் கனெக்சன் ட்ரோல்.; கோடிகளில் விஜய்ஆண்டனி கலெக்சன்

பிச்சைக்காரன் – பிரதமர் கனெக்சன் ட்ரோல்.; கோடிகளில் விஜய்ஆண்டனி கலெக்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2016 ஆம் ஆண்டில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான திரைப்படம் ‘பிச்சைக்காரன்’.

இந்த படம் மார்ச் மாதம் ரிலீசானது. இந்த படத்தில் நாட்டில் கருப்பு பணத்தையும் லஞ்சத்தையும் ஒழிக்க 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்ய வேண்டும் என ஒரு காட்சி வைக்கப்பட்டிருந்தது.

அதே 2016 ஆம் ஆண்டில் நவம்பர் மாதத்தில் இந்திய ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என அதிரடியாக அறிவித்திருந்தார் பிரதமர் மோடி.

இந்த நிலையில் தற்போது மே 19ஆம் தேதி பிச்சைக்காரன் 2 படம் வெளியானது. இதே நாளில் இந்திய ரூபாய் 2000 நோட்டுகள் தடை செய்யப்படுவதாக அறிவித்துள்ளார் பிரதமர் மோடி.

இந்த 2000 ரூபாய் நோட்டுக்களை செப்டம்பர் மாதத்திற்கு மாற்றிக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பிச்சைக்காரன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகம் வெளிவரும்போது நாட்டில் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்படுவதாக விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன்’ படத்தையும் பிரதமர் மோடி படத்தையும் ட்ரோல் செய்து ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் பணமதிப்பிழப்பு குறித்து விஜய் ஆண்டனி பேசியதாவது…

“ரூ 2000 தடை என்பது மக்களுடைய நல்லதுக்காகத்தான்.

யாரெல்லாம் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்களோ, அவர்களுக்குத்தான் இது பாதிப்பு.

ஆன்ட்டி பிகிலிகளுக்கு பாதிப்பில்லை.. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.’ என்று பதிலளித்தார்.

கூடுதல் தகவல்கள்…

‘பிச்சைக்காரன் 2 படம் முதல் நாளில் 3.25 கோடி ருபாய் வசூல் செய்திருப்பதாக அறிவித்துள்ளனர்.

விஜய் ஆண்டனியின் சினிமா கேரியரில் இதுதான் அதிகபட்ச ஓப்பனிங் கலெக்சன் எனவும் அறிவித்துள்ளனர்.

விஜய்ஆண்டனி

Public trolls Pichaikkaran movie with PM Modi

என் படங்களிலேயே இதான் பெரிசு.; குழந்தைகளுக்கு ‘வீரன்’ பிடிக்கும் – ஆதி

என் படங்களிலேயே இதான் பெரிசு.; குழந்தைகளுக்கு ‘வீரன்’ பிடிக்கும் – ஆதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மரகத நாணயம்’ சரவணன் இயக்கத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து நடித்துள்ள படம் ‘வீரன்’.

சத்யஜோதி தயாரித்துள்ள இந்த படம் ஜூன் 2ம் தேதி வெளியாக உள்ள நிலையில் Pre Release Event நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர் ஆதி பேசியதாவது…

” வந்திருக்கும் எல்லோருக்கும் வணக்கம்! நான் இரண்டு வருடங்கள் தனிப்பட்ட காரணங்களால் படம் எதுவும் நடிக்கவில்லை. இருந்தும் என் மீது இவ்வளவு அன்பு தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நன்ற.

‘வீரன்’ திரைப்படம் குடும்பங்களுக்கான படமாக இருக்கும். இதற்கு முன்பு என்னுடைய படங்கள் அப்படித்தான் என்றாலும், இதில் குழந்தைகளுக்கான விஷயங்கள் நிறைய இருக்கிறது.

ஜூன் மாதம் பள்ளி திறக்கப் போகிறது என்றால் அதற்கு முன்பு, ஜூன் இரண்டாம் தேதி ‘வீரன்’ படத்தை குழந்தைகளுக்கு காட்டினால் நிறைவாக இருக்கும் என்ற அளவுக்கு இந்த படம் மீது நம்பிக்கை உள்ளது.

நான் ஒரு 90’s கிட் என்பதால் எனக்கு சக்திமான் மிகவும் பிடிக்கும். அதுபோல, ‘வீரன்’ ஒரு தமிழ் சூப்பர் ஹீரோவாக நீண்ட காலத்திற்கு குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கும். இதனை வடிவமைத்த இயக்குநர் சரவணனுக்கு நன்றி.

உடல் ரீதியாக மிகவும் சவாலாக இந்த படம் இருந்தது. அந்த அளவுக்கு ஆக்சன் காட்சிகள் எனக்கு இருந்தது. இதற்கு முன்பு நான் அது போன்ற ஆக்‌ஷன் செய்ததில்லை.

‘அன்பறிவு’ சமயத்திலேயே இதற்கான ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகளை தொடங்கி விட்டோம். சத்யஜோதி நிறுவனத்துடன் இது எனக்கு மூன்றாவது படம். என் மேல் நம்பிக்கை வைத்து இவ்வளவு தூரம் கூட்டி வந்த அவர்களுக்கு நன்றி.

நான் இதுவரை நடித்த ஐந்து படங்களிலேயே இதுதான் பெரிய படம். படத்தில் வினய் சார் சயின்டிஸ்ட் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் வந்ததும் படம் இன்னும் பெரிய அளவில் மாறியது.

முனீஷ்காந்த், காளி வெங்கட் இருவரும் படத்திற்கு பெரிய பிளஸ். இந்த படம் ஹிட்டானது என்றால் அதன் கிரெடிட் பாதிக்கும் மேல் இவர்களுக்கும் நாங்கள் தர வேண்டும். சிங்கிள் பசங்க, கேரளா சாங் என என்னுடைய இரண்டாவது படத்தில் இருந்து ட்ரெண்டான அனைத்து பாடல்களுக்கும் சந்தோஷ் மாஸ்டர் தான் காரணம் அவருக்கும் நன்றி.

சசி, ஆதிரா, காளி வெங்கட் முனீஷ்காந்த் என படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி. நக்கலைட்ஸ், டெம்பிள் மங்கிஸ் என யூடியூபில் திறமையுள்ளவர்களை இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளோம்.

‘வீரன்’ நம் மண் சார்ந்த கதை என்பதால் இசையில் நிறைய விஷயங்கள் பரிசோதனை முயற்சியாக செய்திருக்கிறோம். மியூசிக்கலாக இந்த படம் பெரிதும் பேசப்படும். அதற்கு முக்கிய காரணம் என் நண்பன் ஜீவா. அவனுக்கு நன்றி.

பொள்ளாச்சி பகுதியில் யாரும் இல்லாத ஒரு காட்டுக்குள் இதன் படப்பிடிப்பை கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் நடத்தினோம். படத்தில் குதிரையுடன் சில காட்சிகள் இருக்கும். குதிரைப் பயிற்சி என்பது சிறுவயதில் இருந்து எடுக்க வேண்டும் போல. அந்த அளவுக்கு இந்த வயதில் புதிதாக கற்றுக் கொள்வது எனக்கு சற்று சிரமமாகவே இருந்தது. இதில் குதிரைக்கு சிறு காயம் கூட ஏற்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம்.

அதைத்தாண்டி சில காட்சிகள் குதிரையில் தடுமாறிய போது ஒளிப்பதிவாளர் தீபக் அதை அழகாக சமாளித்தார். இதில் அவர் பங்கு மிகப் பெரியது. இப்படி இந்த படம் முழுக்கவே எங்களுக்கு சவாலான விஷயமாகவே இருந்தது.

இப்படி நாங்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் சப்போர்ட் செய்து இருந்ததால் தான் இந்த படம் இப்பொழுது வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் கழித்து என் படம் தியேட்டரில் வருகிறது. இங்கு கொடுக்கும் அதே அன்பை அங்கேயும் கொடுங்கள் ” என்றார் ஆதி.

Veeran is big budget and All kids will like says Hip hop Aadhi

More Articles
Follows