வயது தடையில்லை; எனக்கான இடம் சினிமாவில் இருக்கு.. – GM சுந்தர்

வயது தடையில்லை; எனக்கான இடம் சினிமாவில் இருக்கு.. – GM சுந்தர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sathya fame actor GM Sundar talks about his cinema experienceசினிமா பல விசித்திரமான குணங்களைக் கொண்டது. முரண்பாடுகளையும் கொண்டது.

நாம் திரையில் பார்க்கும் முன்வரிசை கதாநாயகர்கள் தவிர மற்றவர்கள் நம் நினைவுகளில் பதிவதில்லை.

கதையின் பிரதான பாத்திரம் ஏற்று ஏராளமான வசனங்கள் பேசி நடித்திருக்கும் முன்வரிசை கதாநாயகர்கள் தவிர , அந்த முன்வரிசை முகங்கள் தவிர பிற முகங்கள் மனதில் பதிவதில்லை.

அதற்கடுத்த இரண்டாவது வட்டத்தில் இருப்பவர்கள் காலதாமதமாகவே பார்வையாளர் மனதில் பதிவார்கள். மூன்றாவது வட்டத்தில் இருப்பவர்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம் பெரும்பாலும் வணிகப் படங்களில் அவர்கள் முகம் நமக்குள் பதிய முகாந்திரம் இல்லாமல் போகிறது. இப்படி மூன்றாவது வட்டத்திலிருந்து இரண்டாவது வட்டத்திற்குப் போராடும் நடிகர்களில் ஒருவர் தான் ஜி.எம் .சுந்தர்.

இவர் தமிழ்நாடு திரைப்படக் கல்லூரி மாணவர் .இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்களால் ‘ புன்னகை மன்னன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்.

கமலின் ‘சத்யா’ படத்தில் நடித்தவர். சத்யராஜ் நடித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு ‘ படத்திலும் முகம் பதியும் அளவிற்கான பாத்திரத்தில் நடித்தவர். இப்படிச் சுமார் 70 படங்களில் நடித்திருக்கிறார். ஆனாலும் திருப்புமுனையின் சதவீதம் குறைவு தான்.
அண்மைக் காலங்களில் வந்த ‘காதலும் கடந்து போகும்’ படம் இவருக்கு ஒரு பிரகாசமான வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன் வெளியான ‘மகாமுனி’ படத்திலும் இவருக்கு நல்லதொரு வேடம்.

இனி ஜி.எம். சுந்தரின் முன்கதைச் சுருக்கம் :

“எனக்குப் பூர்வீகம் திண்டுக்கல் தான் என்றாலும் அப்பாவின் வேலை நிமித்தமாக சென்னை வந்து நிரந்தரமாகத் தங்கிவிட்டது குடும்பம். எனக்குச் சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடிக்க ஆசை.

அதனால்தான் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன் .நாசர், அர்ச்சனா, பப்லு போன்றோர் என் திரைப்படக் கல்லூரித் தோழர்கள் .

படித்து முடித்து திரைப்பட வாய்ப்புக்காக கவிதாலயா அலுவலகம் சென்றபோது எழுத்தாளர் அனந்து அங்கே இருந்தார் .அவர் மூலம் இயக்குநர் பாலசந்தர் அவர்களிடம் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படம்தான் ‘புன்னகை மன்னன்’ . அதன் பிறகு கமல் சாரின் நட்பு கிடைக்க அவரது ‘சத்யா’ படத்தில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

அவர் தயாரித்த ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு ‘ படத்திலும் எனக்கு வாய்ப்பு கொடுத்தார் .அதன் பிறகு ‘கிழக்குக்கரை’, ‘பொன்னுமணி’, ‘அதர்மம்’, ‘தொட்டி ஜெயா’ , ‘எங்க ஊரு காவல்காரன்’ போன்று பல நாயகர்களுடன் பலதரப்பட்ட படங்களுடன் பலவகையான பாத்திரங்களுடன் என் திரைப்பயணம் தொடர்ந்தது.

திரைப்படக் கல்லூரியில் உலக சினிமாக்கள், நடிப்பின் இலக்கணம் போன்றவற்றை அறிந்த பிறகு, ஓரளவுதெளிந்த பிறகு மேடை நாடகங்களிலும் நடித்து வந்தேன். கூத்துப்பட்டறையின் முதல் வரிசை நாடகக் கலைஞன் நான். முத்துசாமி அவர்களின் ‘ நாற்காலி மனிதர்கள்’ நாடகத்தில் நான்தான் நாயகன்.

அதுமட்டுமல்ல கூத்துப் பட்டறை அரங்கேற்றும் நாடங்களுக்கெல்லாம் நான்தான் பெரும்பாலும் நாயகன்.

ஞாநியின் பரீக்ஷா நாடகக் குழுவின் நாடகங்களிலும் நான் தவறாமல் இடம் பெற்றுவிடுவேன். இப்படி மேடையிலும் நடித்து என் நடிப்பு பசியைப் போக்கிக் கொண்டு சினிமா வாய்ப்புக்காக போராடத்தான் வேண்டியிருந்தது .இந்த உண்மையை ஒப்புக் கொள்வதில் எனக்கொன்றும் வெட்கமில்லை .

ஆனால் வாய்ப்பு கேட்டுச் செல்லும் வேளைகளில் எல்லாம் நான் துவண்டு விடவில்லை. காரணம் குடும்பம் ஆதரவாக இருந்தது.

தோல்வி வேளைகளில் எல்லாம் வெற்றிச் சதவீதம் அதிகரிக்க வேண்டுமென்றால் முயற்சியின் சதவீதம் மேலும் மேலும் அதிகரிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையும் வேகமும் தான் எனக்குள் இருந்தன.

அதற்கான விளைவுதான் சற்றே காலம் கடந்து வந்தாலும் ‘காதலும் கடந்து போகும் ‘படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்தார் இயக்குநர் நலன் குமாரசாமி .

‘மௌனகுரு’ படத்தை இயக்கிய சாந்தகுமார் தனது ‘மகாமுனி’ படத்தில் எனக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் . இதுஎனது சமீபத்திய சந்தோஷம்.

திரைப்படங்களில் என்னை அழைத்து நடிக்க வைக்கும் வாய்ப்பு எங்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அந்த தேவையுள்ளவர்களின் கதவைத் கட்டவேண்டும் என்பதுதான் என் எண்ணம்.அப்படித்தான் வாய்ப்புக்கான என் போராட்ட காலத்தைப் புரிந்து கொள்கிறேன் .

எனக்கான இடத்தை யாரும் பறிக்க முடியாது என்கிற தெளிவு எனக்கு இருக்கிறது. அதனால் எனக்கு வயது ஒரு தடை இல்லை என்று நினைக்கிறேன். நான் எப்போதும் இயக்குநரின் கைப்பாவையாக இருப்பேன் .பாசிடிவ், நெகடிவ் என்ற பேதம் எனக்கு இல்லை. அதனால் சரியான அங்கீகாரம் மேலும் தொடரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இப்போது நான் நடித்து ‘மண்டேலா’ என்ற ஒரு படம் வரவிருக்கிறது .அதில் யோகி பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார் . ‘சைரன்’ என்றொரு படம் முடிந்திருக்கிறது. மேலும் 2 புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன்.

திரைப்படக் கல்லூரியில் 1982ல் படித்த எனக்கு 2019 -ல் வாய்ப்பு வந்திருக்கிறது என்கிறபோது எனக்கான இடம் தேவை இருக்கத்தான் செய்கிறது என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையுடன் பயணம் தொடர்கிறது .”இவ்வாறு நடிகர் ஜிஎம் சுந்தர் கூறினார்.

Sathya fame actor GM Sundar talks about his cinema experience

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்!!

ஜி.வி.பிரகாஷுடன் இணைந்த முன்னணி இயக்குநர்!!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (4)தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.

இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை, 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர்.
இவர்களுடன், இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த ஸ்டைலிஷ் இயக்குநரான கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்திருக்கிறார். ஜி.வி.பிரகாசுடன் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து பணியாற்றுவது இதுவே முதல்முறை. மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.

ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது.

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (3)தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார்.

இந்த புதிய படத்தின் மூலம் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மதிமாறன் புகழேந்தி இயக்குனராக அறிமுகமாகிறார். ஜிவி. பிரகாஷுக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர் சீமதுரை , 96, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் வாகை சந்திரசேகர் மற்றும் அறிமுக நடிகர் குணா நடிக்கிறார்கள்.

ஜிவி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இவர் அண்ணனுக்கு ஜே, வெள்ளை யானை படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர். படத்தொகுப்பை எஸ். இளையராஜா கவனிக்கிறார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கிறார். ஒரு மாணவனுக்கு கல்லூரிக்கு வெளியே நடக்கும் இன்னல்களை ஆக்ஷன் கலந்து திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். காதல், எமோஷனல், ஆக்ஷன் முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக தயாராக இருக்கிறது. இந்த படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று (12.9.2019) ஏ.வி.எம் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர்கள் வெற்றிமாறன், சமுத்திரகனி, சுப்ரமணிய சிவா, சரவணன், இளன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

அஜித் & சேரன் பட நாயகி விஜய்சேதுபதியுடன் இணைந்தார்

அஜித் & சேரன் பட நாயகி விஜய்சேதுபதியுடன் இணைந்தார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (2)ஆட்டோகிராப் படத்தில் சேரனுக்கு மனைவியாக நடித்தவர் கனிகா.

மேலும் அஜித்துடன் வரலாறு, மலையாளத்தில் மம்முட்டியுடன் பழசி ராஜா போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இவையில்லாமல் நடிகைகளுக்கு டப்பிங்கும் செய்துள்ளார்.

சச்சின் படத்தில் ஜெனிலியாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும் குரல் கொடுத்துள்ளார்.

இந்த நிலையில்,விஜய் சேதுபதி நடிக்கும் 33வது படத்தில், அவரோடு இணைந்து நடிக்கவுள்ளார் கனிகா.

அறிமுக இயக்குநர் வெங்கடகிருஷ்ண ரோகாந்த் என்பவரது இயக்கத்தில், சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் தான் இந்த வாய்ப்பு.

ஆம்பளைக்கு எது அழகு…?; கல்யாணம் பற்றி அதுல்யா ஓபன் டாக்

ஆம்பளைக்கு எது அழகு…?; கல்யாணம் பற்றி அதுல்யா ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)கோவையில் இருக்கும்போது குறும்படங்களில் நடித்தவர் அதுல்யா.

காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லை என்றாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.

தற்போது நாடோடிகள் – 2, அடுத்த சாட்டை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தன் வருங்கால கணவர் ஒரு பேட்டியில் குறித்துள்ளார்.

அதில்… ”தன்னை நம்பி வரும் பெண்ணுக்கு உண்மையானவராக பாதுகாவலராக ஆண் இருக்க வேண்டும். அதுதான் ஆணுக்கான அழகு.

அப்படிப்பட்டவரே எனக்கு பிடிக்கும். முகமோ, உடலோ, சாகசங்கள் செய்வதையோ ஒரு ஆணுக்கான தகுதியாக நான் நினைக்கவில்லை,” என தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு தடை..? கோர்ட் அதிரடி தீர்ப்பு

சூர்யாவின் ‘காப்பான்’ படத்திற்கு தடை..? கோர்ட் அதிரடி தீர்ப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectமோகன்லால், சூர்யா, ஆர்யா, சாயிஷா ஆகியோர் இணைந்து நடித்துள்ள காப்பான் படத்தை கேவி. ஆனந்த் இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தை வெளியிட தடை கோரி, சென்னை, குரோம்பேட்டையைச் சேர்ந்த, ஜான் சார்லஸ் என்பவர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்

அந்த மனுவில்…

சரவெடி என்ற தலைப்பில், ஒரு கதையை உருவாக்கினேன். விவசாயம், நதி நீர் பங்கீடு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்த கதையின் நோக்கம். இந்த கதையை, பதிவு செய்துள்ளேன்.

இயக்குனர், கே.வி.ஆனந்தை, 2017 ஜனவரியில் சந்தித்து, கதை பற்றி விவாதித்தேன். அவரும், பயன்படுத்திக் கொள்வதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில், காப்பான் பட சில காட்சிகளை பார்த்த போது அது என் கதையை காப்பி அடித்துள்ளது தெரிய வந்தது.

என் அனுமதி பெறாமல், கதையை படமாக்கியுள்ளனர். எனவே, படத்தை வெளியிட, தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காப்பான் படத்தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், காப்பான் படத்தின் கதையும், சரவெடி என்ற தலைப்பில் உருவான கதையும் வேறு வேறு. இரண்டும் சம்பந்தமில்லை. எனவே மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மனுவை, நீதிபதி, சதீஷ்குமார் விசாரித்தார். மனு, விசாரணைக்கு ஏற்புடையது அல்ல எனக் கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

More Articles
Follows