தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா.
சசிகலா மற்றும் அவரது உறவினர்களுக்கு சொந்தமான இடங்களில் 3 வருடங்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அப்போது கணக்கில் வராத பல ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
எனவே சசிகலாவுக்கு சொந்தமான ரூ.1,500 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
இதன் பின்னர் கடந்த செப்டம்பர் மாதம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்த, சசிகலாவுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான 65 சொத்துக்களையும் முடக்கியது.
தற்போது மீண்டும் சிறுதாவூர், கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு சசிகலா, இளவரசி மற்றும் திவாகரனுக்கு சொந்தமான ரூ.2,000 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், இந்த சொத்து முடக்கம் நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
Sasikala assets worth Rs 2000 crores seized