தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குச் சென்றவர் சசிகலா.
இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி ஆவார்.
தற்போது சசிகலாவின் 3 ஆண்டுகள் சிறைவாசம் இந்த ஆண்டுடன் முடிவடையவுள்ளது.
சசிகலா சிறையில் இருந்து எப்போது விடுதலை என்ற எதிர்பார்ப்பில் அரசியல் கட்சிகள் உள்ளன.
மேலும் சசிகலா விடுதலை தொடர்பான செய்திகளும்்வெளிவந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் பெங்களூரு சிறைத்துறைக்கு சசிகலா எழுதியுள்ள கடிதத்தில்…
தன்னை விடுதலை செய்யும் தேதி தொடர்பாக அறிந்துகொள்ள பலரும் சிறைத்துறைக்கு தகவலறியும் உரிமைச்சட்டம் மூலம் பதிவு செய்துள்ளதை நான் அறிவேன்.
அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவும் விளம்பரம் தேடுவதற்காகவுமே தான் சிறையில் இருந்து விடுதலையாகும் தேதி குறித்து கோரியுள்ளனர்.
ஆனால் தனிமனித ரகசியம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமை.
எனவே தனது விடுதலை தொடர்பான செய்திகள் தனது அனுமதியின்றி மற்றவர்களுக்கு வழக்கப்படக்கூடாது.
எனவே சிறைத்துறைக்கு நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் தான் விடுதலையாகும் தேதி குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் – RTI மூலம் விண்ணப்பித்துள்ளவர்களுக்கு அது தொடர்பான தகவல்களை வழங்கக்கூடாது.
இவ்வாறு கடிதம் எழுதியுள்ளார் சசிகலா.
Sasikala Asks Prison Officials to Not Reveal Information on Release Date