தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் வெற்றி பெறவே, தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்தார்.
இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் ஆனது.
இதன் பின்னர் ஏ1 படத்தில் நடித்தார். இந்த படமும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் அடுத்த பாகமான ‘தில்லுக்கு துட்டு 3’ படத்தை 3டியில் எடுக்க சந்தானம் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
தற்போது டகால்டி என்ற படத்தில் சந்தானம் மற்றும் யோகி பாபு இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்பட தயாரிப்பாளரான சௌத்ரியே தில்லுக்கு துட்டு 3 படத்தையும் தயாரிக்க உள்ளார் என்றும் முந்தைய பாகங்களை இயக்கிய ராம் பாலாவே இப்படத்தையும் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.