தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழகம் மற்றும் கேரளாவில் மட்டுமல்ல கொரோனா இரண்டாவது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
மராட்டியத்தில் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள்.
கோலிவுட்டில் சூர்யா & மாதவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
பாலிவுட்டில் நடிகர்கள் அமீர்கான், மிலிந்த் சோமன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழில் சந்தானத்துடன் சக்கபோடு போடு ராஜா, சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களில் நடித்த வைபவி ஷாண்டில்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாம்.
இவரது தாய், தந்தையரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் வசிக்கும் மும்பை பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்திருப்பதாகவும் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்குமாறும் வைபவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Santhanam heroine tests positive for COVID 19