தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தொடங்கிய இந்த கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
இந்த கட்சியின் மாநிலத் தலைவராக R.K.ராஜா என்னும் பத்மநாபன் நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து விஜய் தரப்பிலிருந்து ஓர் அறிக்கை வெளியானது.
அதில் தன்னுடைய ரசிகர் யாரும் அதில் சேர வேண்டாம் என தெரிவித்தார் விஜய்.
இந்த நிலையில், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவர் பதவியில் இருந்து தான் விலகிக் கொள்வதாக எஸ்.ஏ சந்திரசேகருக்கு கடிதம் எழுதியுள்ளார் பத்மநாபன்.
இந்த நிலையில் சென்னையில் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நடத்திய 101-வது நாள் கொரோனா உதவி நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.
அவர் பேசியதாவது..
“அரசியல்வாதிகள் மக்கள் சேவகர்கள். ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதும் மறந்து விடுகிறார்கள்.
மக்கள் வரிப்பணத்தை சுரண்டும் அவர்களுக்கு ஏன் தண்டனைகள் வழங்கப்படவில்லை.
நல்ல எண்ணத்தில் தான் ஒரு பாதையை உருவாக்கி உள்ளேன். சமூக உணர்வுள்ளவர்கள் வாருங்கள்.
உங்களுக்கு நான் அடித்தளமாக இருப்பேனே தவிர தலைவனாக இருக்க மாட்டேன்.
எப்போதும் நான் ஆளும் கட்சியுடன் இருக்க மாட்டேன். எதிர்க் கட்சியுடன் தான் இருப்பேன். அப்போது தான் எதிர்நீச்சல் போட முடியும்.
என்னுடன் இருப்பவர்களை இருக்காதே என (விஜய்) கூறலாம். ஆனால் என்னுடன் பயணிக்க பலர் தயாராக இருக்கிறார்கள்.
எல்லோரும் சுயநலமாக மாறிவிட்டனர்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நான் தற்போது தனி மரமாக நிற்கிறேன். இது வேரூன்றி நின்ற மரம்.
இன்றைய தொண்டன் நாளைய தலைவன்.. இப்போது தொண்டு செய்தால் நாளை தலைவன் ஆவார்கள்.”
இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
SAC recent speech at Kalappai Makkal Iyakkam event