தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ராகுல் என்பவர் இயக்கத்தில் உருவான குறும்படம் ‘விளம்பரம்’. இந்த குறும்படம் தான் நடிகர் மயில்சாமியின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் இறப்பதற்கு முன் இந்த குறும்படத்தில் கதையின் நாயகனாக நடித்திருந்தார் மயில்சாமி. மற்றொரு முக்கிய வேடத்தில் சர்ச்சைக்குரிய நடிகை ரேகா நாயர் நடித்திருந்தார்.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆர்வி. உதயகுமார் பேசும்போது…
“விளம்பரங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். சினிமா என்பது வேறு விளம்பரம் என்பது வேறு.
எத்தனையோ நல்ல திரைப்படங்கள் வந்துள்ளன. அதில் நல்ல நல்ல கருத்துக்கள் சொல்லப்பட்டு இருக்கின்றன.
அதையெல்லாம் பார்த்து மக்கள் மாறி இருந்தால் சமூகம் சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் படத்தை ரசிக்கும் மக்கள் தியேட்டரை விட்டு வெளியே வந்தபின் அந்த நல்ல கருத்துக்களை மறந்து விடுகிறார்கள்.
சினிமாவினால் ஒரு பெரிய பிரளயம் உண்டாகும் என்பார்கள். ஆனால் சினிமாவினால் ஒரு வெங்காயமும் கிடையாது.. இதை நீங்கள் மறுத்தாலும் இதுதான் உண்மை.” என்று ஆவேசமாக பேசினால் ஆர் வி உதயகுமார்.
Rv Udayakumar speech in Vilambaram Short film Launch