தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் விஜய் & அஜித்தின் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்வது வழக்கமான ஒன்று தான்.
தற்போது நேற்று நடந்த ஒரு சம்பவத்திற்காக அஜித்தை கலாய்த்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.
நேற்று நடந்த நிகழ்வு இது தான்.. (அஜித்தால் வேலையிழந்த பெண் தீக்குளித்து தற்கொலை முயற்சி)
ஒருமுறை மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் அஜித் ஒரு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது அஜித்துக்கு தெரியாமல் அவரை பர்சானா என்ற பெண் வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனால் அந்த பெண்ணை மருத்துவமனை நிர்வாகம் வேலையை விட்டு நீக்கியது. இதனால் வேலை இல்லாமல் கடந்த ஒரு வருடமாக திண்டாடி வந்துள்ளார் அந்த பெண்.
எனவே நடிகர் அஜித்தை சந்தித்து மன்னிப்பு கேட்டு விட்டு மீண்டும் அந்த வேலையில் சேருவதற்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அவர் அஜித் வீட்டு வாசலிலேயே திருப்பி அனுப்பப்பட்டுள்ளார் என கூறப்படுகிறது,
மேலும் வேலைக்கு பரிந்துரை செய்ய முடியாது எனவும் அந்த பெண்ணின் குழந்தையின் படிப்புக்கு உதவுவதாக அஜித் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாம்.
இந்நிலையில் நேற்று அக்டோபர் 4 மாலை நடிகர் அஜித் வீட்டின் முன் அந்த பெண் தீக்குளிக்க முயன்றுள்ளார்.
மேலும் அஜித்தால் தான் எனக்கு வேலை போய்விட்டது என் சாவுக்கு காரணம் அஜித் தான் என கதறி கொண்டே சென்றுள்ளார்.
இதனைப் பார்த்த போலீஸ் அவர் மேல் தண்ணீர் ஊற்றி அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக #வாழவிடுங்க_அஜித் என விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர்.
உடனே அஜித் ரசிகர்கள் ச்சும்மா இருப்பார்களா..?
நடிகர் விஜய்க்கும் அவரது அப்பா டைரக்டர் எஸ்ஏசி-க்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லை என்பதால் #பெத்தவர்ட்டபேசுங்கவிஜய் என ட்விட்டரில்
ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
சும்மா சொல்லக்கூடாது… நல்லாவே டரெண்ட் வார்த்தைகளை பிடிக்கிறாங்க..
Reason behind Thala Thalapathy fans social media fight