தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல காமெடி நடிகர் மயில்சாமி நேற்று பிப்ரவரி 19ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.
அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் சமூக வலைத்தளங்களில் பலரும் மயில்சாமி நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பெங்களூரில் தன் அண்ணன் சத்யநாராயணா குடும்ப விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் இன்று சென்னை வந்திருந்தார்.
இதனையடுத்து சாலிகிராமத்தில் வைக்கப்பட்டிருந்த மயில்சாமியின் உடலுக்கு அவர் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் மயில்சாமியின் குடும்பத்தினருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது
மயில்சாமி எனது நெருங்கிய நண்பர். நீண்ட கால நண்பர்.. அவர் எப்போது பேசினாலும் பெரும்பாலும் சிவபெருமானையும் எம்ஜிஆரையும் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அவர் தீவிர பக்தர்.
நேற்று மகா சிவராத்திரி அன்று மயில்சாமி மரணம் அடைந்தது அது தற்செயல் ஒன்றல்ல.. சிவன் தனக்கு உகந்த ஒருவரை எடுத்துக் கொண்டார்.
ட்ரம்ஸ் சிவமணியிடம் சிவனுக்கு நான் பால் அபிஷேகம் செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தாராம். மயில்சாமி அதுதான் அவரின் கடைசி ஆசை.
ட்ரம்ஸ் சிவமணியிடம் பேசிய பிறகு அவரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவேன்.
நடிகர் விவேக் மற்றும் மயில்சாமி இருவரும் நடிகன் என்பதை தாண்டி நல்ல மனிதர்கள்.. இருவரும் சமூக சிந்தனையாளர்கள்.. இருவரும் சமூகத்திற்கு நிறைய பங்காற்றியுள்ளனர்
விவேக், மயில்சாமியின் மறைவு திரையுலகுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் பேரிழப்பு” என உருக்கமாக பேசினார் ரஜினிகாந்த்.
#Mayilsamy | #Rajinikanth
Rajinikanth pays tribute to actor Mayilsamy