தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் விஜித் அவர்கள் நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘ டைட்டில் ‘ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா, பிரபல நட்சத்திரங்கள் முன்னிலையில், நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் நடைப்பெற்றது.
படத்தின் தயாரிப்பாளர் டில்லி பாபு வந்த அனைவருக்கும் தனது நன்றியை பதிவு செய்தார்.
பின்பு பேசிய R K சுரேஷ்… “ஒரு படத்தை எடுப்பது எவ்வளவு சிரமம் என்பதனையும், குறிப்பாக ஒரு சிறிய படத்தினை விளம்பரம் செய்து திரையரங்கில் வெளியிடுவது என்பது சுலபமான விஷயம் அல்ல என்பதனையும் பதிவு செய்தார்.
மேலும் தனது வேண்டுக்கோளாக படத்தில் நடிக்கும் நடிகர்களை அந்த படத்தின் விளம்பரம் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும்” என்றார்.
மைம் கோபி படத்தின் பெயரே டைட்டில் என்பதனால் பெயருக்கான அர்த்தம் என்ன என்று யாரும் கேட்க முடியாது” என்றார்.
இயக்குனர் ரகோத்து விஜய் பத்திரிகையாளர்களிடம் இந்த படத்தினை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதனை பதிவு செய்தார்.
இசையமைப்பாளர் அனல் ஆகாஷ் தனது தாய் மற்றும் சீதா பாட்டிக்கு தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
“என்னால முடியாது என்று நான் நினைத்த பொழுது என்னை நம்பி என்னால முடியும் என்று என்னை நம்பியவர் என் தாய். ஆறு படம் நின்னு போச்சு.. இது ஏழாவது படம்.. நிச்சயம் வெற்றி பெறும்” என்று கூறினார்.
தன் படத்தில் இருந்து ஒரு பாடலை பாடி அனைவரையும் சிலிர்க்க வைத்தார்.
டத்தோ ராதா ரவி தனது பேச்சால் அரங்கத்தில் சிரிப்பலையினை ஏற்படுத்தினார்.
மேலும் ஒரு படம் என்றால் அந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்பதனை ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
நடிகர்கள் தங்களது சம்பளத்தை தாங்கள் ஏற்றிக் கொள்ளவில்லை எனவும் ஏற்றிக் கொடுத்தால் வாங்கி கொள்ளாமல் இருக்கவா முடியும்.? எனவும் வினவினார்.
மேலும் அவர் கூறுகையில், “எல்லாரும் படத்தை திரையரங்கில் பாக்கணும், OTT யில் பாத்தா வேலைக்கு ஆகாது.
திரையரங்கம் சென்றால் படம் பார்த்து விட்டு வர வேண்டுமே தவிர, பாப்கார்ன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை உண்ண வேண்டாம்” என்றார்.
மேலும் நடிகர்கள் தாடி வைத்திருப்பது தேவையற்றது. மேடையில் இருப்பவர்கள் பாக்யராஜ், பெசன்ட் ரவி என பலரும் தாடி வைத்துள்ளனர்.
தாடி வைப்பவர்கள் சோம்பேறிகள் என்ற பொருள் உண்டு. நான் தினமும் எழுந்தால் முதலில் செய்வது ஷேவிங் தான். ஒரு படத்தில் முஸ்லிமாக நடிக்க என்ன தாடி வைக்க சொன்னார்கள்.
தாடி வைக்க மாட்டேன். அதற்கு ஒட்டு தாடி இருக்கு. அதை வைத்துக் கொள்ளலாம். அப்போதுதான் ஒட்டு தாடி தயாரிக்கும் தொழிலாளிக்கு வேலை கொடுக்க முடியும் என்று சொன்னேன்.
இவ்வாறாக சர்ச்சையாக பேசினாலும், இறுதியில் தாய் தந்தையரை பேணி காக்க வேண்டும் என ஒரு செய்தியுடன் தன் உரையை நிறைவு செய்தார்.
அடுத்து பேசிய மிரட்டல் செல்வா.., இந்த திரைப்படத்தில் விஜய் அஜித் படத்திற்கு நிகராக சண்டை காட்சிகள் இதில் இருக்கிறது என்பதனை தெரிவித்தார்.
படத்தின் நாயகி அஸ்வினி… நாயகன் விஜித் தனக்கு ஒரு சிறந்த துணை நடிகராக இருந்தது தனக்கு பலம் அளித்ததாக பதிவு செய்ததுடன் வாய்ப்பளித்த அனைவருக்கும் நன்றி” எனவும் தெரிவித்தார்.
நடிகர் பெசன்ட் ரவி.., ” ஒரு மனிதன் தொடர்ந்து போராடினால் வெற்றி நிச்சயம்” என கூறினார்.
தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், தனக்கே உரித்தான நக்கல் பாணியில் அனைவரையும் சிரிக்க வைத்தார்.
பிறகு பேசிய இயக்குநர் பேரரசு, ராதா ரவியின் பேச்சை கண்டித்து எதிர்மறையாக பேசினார். மேலும் தனது பேச்சில் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை சாடினார். அவர்கள் தாடி வைத்துள்ளனர். அப்படின்னா அவர்களும் சோம்பேறிகள் தானே.” என்றார்.
(பாரதிய ஜனதா ஜனதா கட்சியை சேர்ந்தவர் ராதாரவி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ஒருவேளை மோடியை நினைவு இல்லாமல் ராதாரவி பேசி விட்டாரோ என்னவோ??!!.)
இயக்குனர் பாக்யராஜின் சிறப்பம்சங்கள் பற்றியும், எதிர்மறை தலைப்புகளை வைத்தாலும் வெற்றி குடுக்க முடியும் என்பதை எவ்வாறு நிரூபித்தார் என்பதனை கூறினார்.
திருப்பாச்சி படம் எவ்வாறு பெயர் பெற்றது என்ற கதையினை கூட தன் பாணியில் கூறினார்.
பிறகு பேசிய RV உதயகுமார்… மத்திய அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையினை வைத்தார். அதாவது திரையரங்கில் டிக்கெட் எடுப்பதற்கு ஆன்லைன் இணையதளத்தையே பயன்படுத்த வேண்டும். அதுவே ஒரு சிறந்த வழி” என அவர் கூறினார்.
மேலும் யூடியூப் வலைதளங்களுக்கு ஒரு கோரிக்கையினை அவர் வைத்தார். “நாகரீகமாக டைட்டீல் வைங்க. தவறாக வழி நடத்தாதீங்க”.
கே பாக்யராஜ் அவர்கள் தனக்கே உரித்தான பாணியில் தன் ரசனை மிக்க பேச்சினால் அனைவரையும் ஈர்த்தார். “ஒரு படத்தின் தலைப்பு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அதுவே மக்களிடம் ஒரு திரைப்படத்தை கொண்டு சேர்க்கும். குறிப்பாக பெண்களை ஈர்க்கும் வண்ணமே ஒரு தலைப்பு இருக்க வேண்டும் என்று அந்த காலத்தில் ஒரு கருத்து நிலவி வந்தது.
எனது படத்தில் கூட நிறைய எதிர்மறை தலைப்பு வைக்கின்றேன் என பல்வேறு விதமான விமர்சனங்கள் எனக்கு வரும்..
தூறல் நின்னு போச்சு.. மௌன கீதங்கள்.. சுவரில்லா சித்திரம் ‘ என்ற படம் இது போன்ற எதிர்மறை அலைகளை மீறி வெற்றி பெற்றது.
எனது அனைத்து படங்களிலும் தலைப்பு என்பது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் இருக்க வேண்டும். அதே சமயத்தில் மக்களை யோசிக்க வைக்கும் வண்ணம் இருக்க வேண்டும்”.
தனது படத்தில் ஒரு தலைப்பு எவ்வாறு உருவாகும் என்பதனை தன் நகைச்சுவை பேச்சினால் அழகாக வர்ணித்தார். தனது ‘அந்த 7 நாட்கள் ‘ படத்தினை பற்றியும் அவர் ஒரு சில சுவாரசியமான செய்திகளை பதிவு செய்தார்.
இறுதியாக பேசிய இயக்குநர் S P முத்துராமன் அவர்கள்.. “ஒரு திரைப்படத்தை எவ்வாறு பிரபலமடைய செய்யலாம் என்பதனை விவரித்தது மட்டும் இல்லாமல் திரை உலகில் காலடி எடுத்து வைப்பதற்காக பொறுமை மற்றும் நம்பிக்கை தேவையோ அது உங்களிடம் இருக்கின்றது.
“நாம் ஒன்று கன்வின்ஸ் ஆகனும் இல்லை என்றால் கன்வின்ஸ் பண்ணனும். விட்டு குடுத்தால் தான் ஒரு படம் பண்ண முடியும்”, என்று கூறினார்.
இறுதியாக திரைப்படம் எடுப்பது என்பது பல்வேறு தியாகம் மற்றும் இழப்புகளை உள்ளடக்கியது.” என்று பேசினார்.
Radharavis controversial speech about Beard at Title movie meet