தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
பிரபல காமெடி நடிகர் போண்டா மணி.
இவர் படப்பிடிப்பு ஒன்றின் போது, சாக்கடை நீரில் காட்சிக்காக விழுந்தார்.
அந்த நீர் நுரையீரலில் தங்கி அதன் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் போண்டா மணி தெரிவித்து இருந்தார்.
பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, தனது சிறுநீரகங்கள் செயலிழக்கும் நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து கூறினர் என உருக்கமாக பேசி இருந்தார்.
மேலும் அவருக்கு டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.
இரண்டு கிட்னியும் பாதிக்கப்பட்டு, வாரம் இருமுறை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார் நடிகர் போண்டா மணி.
பின்னர் அரசு உதவியும் & பல உதவிகளும் கிடைத்த பின்னர் சிகிச்சை பெற்று குணமாகி வந்தார்.
ஆனாலும் குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒரு சில படங்களிலும் நடித்தும் வருகிறார்.
இந்த நிலையில் இவரது மகள் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வானதை தொடர்ந்து, மேல் படிப்பு செலவு முழுவதையும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஏற்றுக் கொண்டார்!
இந்த அவருடைய நிலையை முற்றிலும் அறிந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வான போண்டா மணியின் மகள் சாய் குமாரியின் மேல்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக் கொண்டு, அவருடைய வேல்ஸ் கல்லூரியில் அவருக்கு பி.சி.ஏ படிக்க சீட் கொடுத்துள்ளார்.
இதற்கு நடிகர் போண்டா மணி தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.
Producer helps Bonda Mani daughter after completed +2