ஒரே நேரத்தில் விஜய்-அஜித்துடன் நடிக்கும் பிரகாஷ் ராஜ்

ஒரே நேரத்தில் விஜய்-அஜித்துடன் நடிக்கும் பிரகாஷ் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் ஹீரோ ஹீரோயின்களை தாண்டி சில நடிகர்கள் தங்கள் திறமையால் ரசிகர்களை கவர்ந்து விடுவதுண்டு.

இதில் முக்கியமாவனர் நடிகர் பிரகாஷ்ராஜ்.

அண்மையில் வெளியான ஜெய்பீம் படத்தில் போலீசாகவும் அண்ணாத்த படத்தில் கிராமத்து வில்லனாகவும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஒரே நேரத்தில் விஜய் மற்றும் அஜித் படங்களில் நடிக்கவிருக்கிறாராம்.

அஜித்தின் 61வது படத்தை வினோத் இயக்க போனிகபூர் தயாரிக்க உள்ளார். இதில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

மேலும் தில் ராஜூ தயாரிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கவுள்ள விஜய் 66 படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம் பிரகாஷ்ராஜ்.

விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச்சில் தொடங்கவுள்ளது.

ஏற்கெனவே விஜய் & அஜித் படங்களில் பிரகாஷ்ராஜ் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Prakash Raj joins Vijay and Ajith films for his next

கமல் படத்தை மீண்டும் பாலிவுட்டில் ரீமேக் செய்யும் ஷாரூக்கான்

கமல் படத்தை மீண்டும் பாலிவுட்டில் ரீமேக் செய்யும் ஷாரூக்கான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வித்தியாசமான படங்களை இந்திய சினிமாவுக்கு தந்தவர் கமல்ஹாசன்.

இவர் இயக்கத்தில் வெளியான சில படங்கள் மிகவும் வித்தியாசமானவை என்றால் அது மிகையல்ல.

கடந்த 2000 ஆண்டில் கமல்ஹாசன் இயக்கி நடித்து சர்ச்சையான படம் ‘ஹேராம்’. மகாத்மா காந்தி வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை இயக்கி நடித்திருந்தார் கமல்ஹாசன்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் முக்கிய வேடத்தில் கமலுடன் நடித்திருந்தார்.

மேலும் ராணி முகர்ஜி, வசுந்தரா தாஸ், அதுல் குல்கர்னி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். அப்போதே இந்த படம் ஹிந்தியிலும் வெளியானது.

இந்த நிலையில் தற்போது 21 வருடங்களுக்கு பிறகு அப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்து நடிக்கவிருக்கிறாராம் ஷாருக்கான்.

இப்பட ஹிந்தி ரீமேக் உரிமையை ஷாருக்கான் பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே விரைவில் இது தொடர்பான செய்தியை அதிகாரப்பூர்வமாக எதிர்பார்க்கலாம்.

Shah Rukh Khan wants to remake Kamal Haasan’s hit movie

சூர்யாவின் படங்களை இயக்க காத்திருக்கும் சூப்பர் ஹிட் டைரக்டர்கள்

சூர்யாவின் படங்களை இயக்க காத்திருக்கும் சூப்பர் ஹிட் டைரக்டர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்த ’சூரரைப்போற்று’ மற்றும் ’ஜெய்பீம்’ ஆகிய இரண்டு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

இந்த படங்கள் ஓடிடியில் வெளியானதால் தியேட்டர்கள் உரிமையாளர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புகள் வந்தன.

விரைவில் சூர்யாவின் அடுத்த படமான ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை திரைக்கு கொண்டு வரவுள்ளது சன் பிக்சர்ஸ். இது பிப்ரவரியில் வெளியாகிறது.

இந்த நிலையில் சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் யார்? யாருடைய படத்தில் நடிக்க போகிறார்? என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஏற்கெனவே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் மற்றும் பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் சூர்யா.

இதில் வெற்றிமாறன் படம் முதலில் ஆரம்பிக்கும் என தெரிகிறது.

இந்த இரண்டு படங்களை முடித்துவிட்டு சிவா இயக்கத்தில் ஒரு படமும், சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படத்திலும் சூர்யா நடிக்கவிருக்கிறாராம்.

Kollywood top director wants to work with Suriya

உலகளவில் டாப் 10 வரிசையில் ஒரே இந்தியப்படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’

உலகளவில் டாப் 10 வரிசையில் ஒரே இந்தியப்படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓடிடி தளங்களின் ஆதிக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஒரு சில தயாரிப்பாளர்கள் தியேட்டர்கள் திறக்கட்டும் என காத்திருந்தாலும் சில தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களில் படத்தை வெளியிட்டு வருகின்றனர்.

நடிகர் சூர்யா தயாரித்த 4-5 படங்களை ஓடிடியில்தான் வெளியிட்டார். வருகிற பிப்ரவரி 10ல் விக்ரம் நடித்துள்ள மகான் படம் அமேசானில் ரிலீசாகவுள்ளது.

அண்ணாத்த, புஷ்பா, மாநாடு உள்ளிட்ட படங்கள் தியேட்டர்களில் வெளியாகி வசூல் வேட்டையாடினாலும் பின்னர் ஓடிடி தளங்களில் வெளியாகியும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனிடையில் கடந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்ற தெலுங்கு படம் திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.

ராகுல் சங்க்ரித்யன் இயக்கியுள்ள இந்த படத்தில் நானி, சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, மடோனா செபாஸ்டியன், முரளி ஷர்மா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் ஒளிப்பதிவாளராக சானு ஜான் வர்கீஸ், இசையமைப்பாளராக மிக்கி ஜே.மேயர் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படம் தியேட்டர்களில் வெளியாகி 1 மாதத்திற்கு பிறகு 2022 ஜனவரி 21ல் நெட்பிஃளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.

முன்பு பெற்ற வரவேற்பை விட தற்போது குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இது மற்ற மொழிகளிலும் வெளியாகியுள்ளதால் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள சமூக கருத்துள்ள வசனங்கள் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், நெட்பிஃளிக்ஸ் வெளியிட்டுள்ள உலகளவில் டாப் 10 படங்களின் பட்டியலில் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ 3ம் இடத்தை பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் இடம்பெற்ற ஒரே இந்தியப் படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’ என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ‘ஹவ் ஐ ஃபெல் இன் லவ் வித் எ கேங்ஸ்டர்’ (போலந்து நாட்டு மொழி) என்ற படம் முதலிடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் ஆங்கில படங்கள் எதுவும் இடம் பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

Nani’s Shyam Singha Roy Third Most-Watched Film On Netflix

ஊரடங்கு ரத்து.. மார்ச்சை குறி வைக்கும் ‘டான்’ சிவகார்த்திகேயன்

ஊரடங்கு ரத்து.. மார்ச்சை குறி வைக்கும் ‘டான்’ சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா பரவல் குறைவதை (நாங்க சொல்லலப்பா…) தொடர்ந்து இன்று ஜனவரி 28 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது.

மேலும் ஜனவரி 30 முதல் இனி வரும் ஞாயிற்றுகிழமைகளில் முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது.

இதனால் இரவு காட்சி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் படத்தை திரையிட வாய்ப்புள்ளதால் திரையுலகினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனவே ஓரிரு படங்கள் தங்கள் ரிலீஸ் தேதியை அறிவிக்க தொடங்கியுள்ளனர்.

விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தை பிப்ரவரி 4ல் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

மேலும் அஜித் நடித்துள்ள ‘வலிமை’ படத்தையும் ரிலீஸ் செய்ய நல்ல தேதியை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தயாரித்து நடித்துள்ள டான் படத்தை மார்ச் இறுதி வாரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘டான்’.

இதில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஷிவாங்கி, முனீஸ்காந்த், காளி வெங்கட், ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முக்கிய கேரக்டரில் கௌதம் மேனன் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவாளராக கே.எம்.பாஸ்கரன், இசையமைப்பாளராக அனிருத் இந்த படத்திற்காக பணிபுரிந்துள்ளனர்.

தற்போது இப்பட இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Sivakarthikeyan’s Don release date locked?

14 வயதில் தொடங்கி 450 படங்களில் நடித்த சௌகார் ஜானகிக்கு பத்மஶ்ரீ விருது..; நாசர் வாழ்த்து

14 வயதில் தொடங்கி 450 படங்களில் நடித்த சௌகார் ஜானகிக்கு பத்மஶ்ரீ விருது..; நாசர் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும் திரையுலகின் பல சாதனைகள் படைத்திட்ட வரலாற்று புகழ் நடிகை சவுக்கார் ஜானகி அவர்களுக்கு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பத்மஶ்ரீ விருதை அறிவித்து கௌரவித்துள்ளது.

தமிழ் சினிமா நடிகர் நடிகர் நடிகைகள் சார்பில் வாழ்த்து தெரிவித்துள்ளது.

சௌகார் ஜானகி தன் 14 வயதிலேயே மேடை நாடகம் மூலம் நடிப்பு துறையில் கால்பதித்தவர்.

தன் 18 வயதில் 1949 ஆம் ஆண்டில் ‘சவுக்கார்’ எனும் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழ்,தெலுங்கு, கன்னடம் மொழிகளில் 450 க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

3000க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் பங்கேற்றிருக்கிறார். கலையுலகிற்கு அவர் செய்திட்ட அறப்பணிகள், சாதனைகள் ஏராளம். மொழிகள் தாண்டி கணக்கிலடங்கா வெள்ளிவிழா வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

81 வயதை கடந்தும் சமீபத்தில் வெளியான நடிகர் கார்த்தியின் “தம்பி”, கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்த ‘பிஸ்கோத்’ படம் வரையிலும் நடிப்பை தொடர்ந்து வருகிறார்.

கலையுலக பொக்கிஷமான நடிகை சவுக்கார் ஜானகி அவர்களுக்கு பத்மஶ்ரீ விருது கௌரவம் கிடைத்துள்ளதை தமிழ் சினிமா நடிகர் நடிகைகள் சார்பில் நடிகர் நாசர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் நாசர் வெளியிட்ட அறிக்கையில்..

‘ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா..
அத்தனை மொழிகளிலும் மறக்க முடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்!

ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை.
புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி!
‘புதிய பறவையில்’ மிரட்டியதும்
மிரண்டு போனதும் ஒரே ஜோடிக் கண்களா? ஆச்சர்யம்!

கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!!
தாங்கள் எங்களுக்கு தந்த கதாப்பாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து
மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய்
இன்று “பத்மஶ்ரீ” உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை.

தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடுடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். “பத்மஶ்ரீ” விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்“
என்று தெரிவித்துள்ளார்.

Actor Nassar wishes to legendary actress Sowcar Janaki

More Articles
Follows