தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி – காரைக்காலிலும் +2 பொதுத்தேர்வு ரத்து

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி – காரைக்காலிலும் +2 பொதுத்தேர்வு ரத்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

n rangaswamyகொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் இந்தியாவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவில்லை.

அரசு & தனியார் பள்ளி மாணவர்கள் ஆன்லைன் மூலம் கல்வி பயின்று வருகின்றனர்.

இதனையடுத்து சிபிஎஸ்இ +2 இந்தாண்டு பொதுத் தேர்வு ரத்து என அறிவித்தார் பிரதமர் மோடி.

இதனால் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுமா? என்பது குறித்த ஆலோசனை சில தினங்களாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என 60% மக்கள் கருத்து தெரிவித்தாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மாநிலத்தில் (காரைக்கால் உட்பட) இது குறித்த அறிவிப்பு இல்லை.

இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

மாஹி (கேரளா) மற்றும் ஏனாம் (ஆந்திரா) பகுதிகள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பகுதிகள் என்றாலும் தமிழக புதுச்சேரி பாடத்திட்டம் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.

Pondy govt cancels 12th exam

இந்தியாவை விட்டு கொரோனாவை விரட்ட ஒரே வழி…; நித்யானந்தாவின் நியூ ஐடியா

இந்தியாவை விட்டு கொரோனாவை விரட்ட ஒரே வழி…; நித்யானந்தாவின் நியூ ஐடியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nithyanandaபாலியல் தொல்லை, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா.

அழகான இளம் பெண்களுடன் எப்போதும் உல்லாசமாகவே இருந்து வருகிறார்.

ஆனாலும் காவல்துறைக்கே டிமிக்கி கொடுத்து தலைமறைவாக உள்ளார்.

ஓரிரு ஆண்டுகளாக கைலாசா என்ற ஒரு புதிய தீவில் வாழ்ந்து வருவதாக அறிவித்தார். தானே அந்த நாட்டின் அதிபர் என்றும் புதிய கரன்சியை அறிமுகப்படுத்தினார்.

எவர் வேண்டுமானாலும் தன் நாட்டிற்கு வரலாம் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த தீவு இந்தோனேஷியா / நியூசிலாந்து நாட்டின் அருகில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த தீவுகளை அவர் விலைக்கோ அல்லது குத்தகைக்கோ எடுத்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இவரின் புதிய வீடியோ ஒன்றில்… “தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தால் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும்” என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nithyananda idea for corona pandemic ends

ரஜினியை அடுத்து கமலை இயக்க முருகதாஸ் ப்ளான்.? தெலுங்கு நடிகரும் கூட்டணியா?

ரஜினியை அடுத்து கமலை இயக்க முருகதாஸ் ப்ளான்.? தெலுங்கு நடிகரும் கூட்டணியா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanசூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்பார்’ படத்தை அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் விஜய்யின் தளபதி 65 படத்தை இயக்குவதாக இருந்தது.

ஆனால் அந்த படத்தில் இருந்து முருகதாஸ் விலகினார். பின்னர் சூர்யாவுடன் கூட்டணி என கூறப்பட்டது.

இதனையடுத்து அந்த நடிகரை இயக்குவார் இந்த நடிகரை இயக்குவார் என பல யூகங்கள் வந்தாலும் எதையும் முருகதாஸ் தரப்பு உறுதி செய்யவில்லை.

இந்த நிலையில் கமல்ஹாசன் நடிக்கவுள்ள படத்தை இயக்கப் போகிறார் முருகதாஸ் என ஒரு தகவல் பரவி வருகிறது.

மேலும் இதே படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இதில் ‘சர்கார்’ பட வில்லியும் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

இதுபோல முருகதாசின் அடுத்த படம் குறித்து பல தகவல்கள் பறந்தாலும் எதுவுமே இதுவரை உறுதியாகவில்லை.

ஏற்கெனவே மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ படம் படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

AR Murugadoss to direct Kamal Haasan’s next film?

‘வலிமை’யான பெண் குறித்து தளபதி பட நாயகி என்ன சொன்னார் தெரியுமா?

‘வலிமை’யான பெண் குறித்து தளபதி பட நாயகி என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கடந்த 2012ம் ஆண்டில் மிஷ்கின் இயக்கி வெளியான ‘முகமூடி’ படத்தில் நாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே.

பின்னர் தெலுங்கு சினிமாக்களில் பிசியான இவர் தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியானார்.

தற்போது இவர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் “தளபதி 65” படத்தின் நாயகியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் இவர் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில் பெண்களின் வலிமை குறித்து கொரோனா குறித்தும் பதிவிட்டுள்ளார்.

அதில் “வலிமையான பெண்கள் ஒருபோதும் பின்வாங்க மாட்டார்கள். .

எங்கள் அழுகையைப் பற்றியும் மோசமான நாட்களைப் பற்றியும் கவலைப் படுகிறோம். ஆனால் அதிலிருந்து எப்போதும் வெளிவந்து விடுகிறோம்” என பதிவிட்டுள்ளார்.

Actress Pooja Hegde tweet on strong women

‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை நிறுத்தவில்லை என்றால்….; சீமான் எச்சரிக்கை..: அடங்குமா அமேசான்.?

‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை நிறுத்தவில்லை என்றால்….; சீமான் எச்சரிக்கை..: அடங்குமா அமேசான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழர்களுக்கு எதிரான சர்ச்சைக்களை உருவாக்கியுள்ள சமந்தாவின் #TheFamilyMan2 இணையத் தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டுமென அமேசான் பிரைம் ஓடிடி தளத்திற்கு சீமான் கடிதம் வெளியிட்டு வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அமேசான் பிரைம் தலைமையதிகாரி அபர்ணா புரோகித்திற்கு சீமான் எழுதியுள்ள கடிதத்தில்…

“தமிழர்களை சீண்டும் நோக்கில் திட்டமிட்ட வன்மத்தோடு எடுக்கப்பட்டுள்ள தொடரில் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் வைக்கப்படுகின்ற சித்தரிப்புகளும் காட்சி அமைப்புகளும் கேள்வியுற்று அதிர்ச்சி அடைந்தேன்.

சிங்களப் பேரினவாதம் இந்திய ஒன்றியம் உள்ளிட்ட சில உலக நாடுகளுடன் கூட்டு சேர்ந்து ஒருமித்துக் ஈழத்தில் நடத்திய இனப்படுகொலையில் 2 லட்சம் தமிழர்களை கொடுத்து விட்டு, அதற்கான எந்த நீதியும் பெற முடியாத கையறு நிலையில் உலக அரங்கில் தமிழர்கள் நாங்கள் கூக்குரலிட்டு போராடிக் கொண்டிருக்கையில் , தமிழர்கள் பக்கம் இருக்கும் நியாயத்தை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியை அங்கு நடந்த உண்மைச் செய்திகளையும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பெரும் வரலாற்றில் பதிவு செய்ய வாய்ப்பிருந்தும் , அதனை செய்யாது தமிழர்களுக்கு எதிராக நோக்கத்தோடு ஒரு படைப்பை உருவாக்கம் செய்து சிங்களர்களின் தரப்பு வாதத்திற்கு வலுசேர்க்கும் வகையிலான கருத்து உருவாக்கங்களை கொண்டுள்ள இது போன்ற தொடர்கள் முழுக்க முழுக்க தடை செய்யப்பட வேண்டும்.

தமிழர்களின் வீரம் செறிந்த ஈழ விடுதலைப் போராட்டத்தையும் மிக மிக எளிதாக சித்தரித்து அதனை தவறாக காட்சிப்படுத்தியிருக்கும் தி பேமிலி மேன் 2 இணைய தொடர் ஒளிபரப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இதை செய்ய தவறினால் உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் ஒருங்கிணைந்து அமேசான் பிரைம் வீடியோ நிறுவனத்தின் எல்லா சேவைகளையும் தமிழர்கள் அனைவரும் புறக்கணிக்க செய்யும் வகையில் மாபெரும் கருத்து பரப்புரையை தீவிரமாக முன்னெடுப்போம் என தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

NTK leader Seeman against Samantha’s The family man 2 web series

நம் போராட்டத்தை பயங்கரவாதம் எனத் திரிக்க தினத்தந்தி துணை போனதே..; சிம்பு பட தயாரிப்பாளர் வேதனை

நம் போராட்டத்தை பயங்கரவாதம் எனத் திரிக்க தினத்தந்தி துணை போனதே..; சிம்பு பட தயாரிப்பாளர் வேதனை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suresh kamachiதமிழர்களுக்கு எதிரான சர்ச்சைக்களை உருவாக்கியுள்ள சமந்தாவின் #TheFamilyMan2 இணையத் தொடர் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான சமந்தாவின் ஒரு பேட்டி தினந்தந்தி நாளிதழில் வெளியானது.

இந்த செய்தியை கண்டிக்கும் வகையில் சிம்புவின் ‘மாநாடு’ பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தன் ட்விட்டரில் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்…

“நமது வேதனையில் யார் யாரோ தீ ஊற்றுகிறார்கள். எவனோ ஒருத்தன் படம் எடுத்து பயங்கரவாதி என்கிறான். தெலுங்கு தேச மருமகளாகப் போன சமந்தா ஈழப் பயங்கரவாதி என்கிறார். இவர்களெல்லாம் போதாதென்று நாம் இத்தனை ஆண்டுகள் வாங்கி நம் வீடுகளில் எழுந்ததும் கண் விழிக்கும் 1/2 https://t.co/LpthW2BxHk

பத்திரிகை எப்படி அந்த வார்த்தைகளை பிரசுரிக்கலாம்? யாரோ நம் போராட்டத்தை பயங்கரவாதம் எனத் திரிக்க முயல தினத்தந்தி அதற்குத் துணைபோயிருக்கிறது.

நாம் தமிழர் கட்சியை முதன் முதலில் உருவாக்கிய ஆதித்தனார் அய்யா உயிரோடிருந்தால் இந்த செய்தி வெளியாகியிருக்குமா? 2/3

தினத்தந்தியே இப்படி செய்தால் வேறு யாரை குறைபட்டுக் கொள்ள??3/4 @SeemanOfficial @offBharathiraja @directorcheran @packiarajan

இவ்வாறு பதிவிட்டுள்ளார் சுரேஷ் காமாட்சி.

Maanaadu producer slams Dinathanthi and The family man 2 team

More Articles
Follows