தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஒன்றரை மாதமாக விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வருகிறது.
இதில் கலந்துகொண்ட நடிகை ஓவியாவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் கிடைத்தனர்.
ஆனால் அதில் கலந்துக் கொண்ட ஆரவ் மீது காதல். பின்னர் காதல் தோல்வி, தற்கொலை முயற்சி என பல அதிரடி திருப்பங்களால் அதிலிருந்து வெளியேறினார்.
எனவே, இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞர் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், தற்கொலை விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்க, ஸ்டேஷனில் ஆஜராகும்படி ஓவியாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
ஆனால் அவர் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என ஓவியாவின் மேனேஜர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.