தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
அம்மாவின் தன்னம்பிக்கை ஆளுமை,
வாழ்வை வெற்றிகான என்னும் ஒவ்வொருத்தனுக்கும்
ஓர் உதாரணம்.
தந்தை இழப்பு இரு வயதில்.
தாயின் இழப்பு இருபது வயதில்.
பின் சகோதரனின் இழப்பு.
எல்லாரையும் இழந்த பின்பும்,
எல்லோரையும் பெற்றார்.
மரண ஊர்வலத்தின்
மனித கூட்டம்,
வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சி்.
டீ கடையை வைத்து,
உண்மையாய் உழைத்த கட்சிகாரனையும், அமைச்சராக்கி வாழ்வித்தவர்.
இன்றைய அதிமுகவின்
பல கவுன்ஸிலர்கள், எம்.எல்.ஏக்கள்,
அமைச்சரகளின்
நேற்றைய வரலாற்றை, தெருவோரங்களில்தான் தேட முடியும்.
அம்மா என்ற
ஒற்றை வார்த்தையால் வாழ்வை வென்றவர்கள் இவர்கள்.
வேறு எந்த கட்சியிலும்
இன்று இது சாத்தியமில்லை.
யாரையம் நம்பி
என் வாழ்வோ, செயலோ,
வெற்றியோ இல்லை என்று
வாழ்ந்து காட்டியவர்.
அது ஆட்சியானாலும் சரி,
வழக்கானாலும் சரி
முடிவெடுத்து விட்டால்,
கடைசி நுனிவரை போராடி பார்த்தவர்.
அவரின் வெற்றியை மட்டுமே
உலகம் பார்க்க அனுமதித்தார்.
மரணத்திலும் அப்படியே.
அவரின்
ஒவ்வொரு போராட்டத்தின் நுணுக்கம், வழி
யாவும் அவர் மட்டுமே அறிந்தது.
வாழ நினைக்கும்,
வெல்ல நினைக்கும் எவருக்கும்
இவர் ஓர் ஆதர்சன உதாரணம்.
எவருமேயின்றி
வெல்ல துடிக்கும்
மனிதர்களில் ஒருவனின் மன அஞ்சலி இது.
கண்ணீர்களின்றி….
மற்றுமொரு போராளி…