தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கோலிவுட் முதல் கோட்டை வரை என்று தமிழக அரசியலில் எழுதப்படாத ஒரு விதி உண்டு.
கிட்டதட்ட 50 ஆண்டுகாலமாக தமிழகத்தை திரைத் துறையை சார்ந்தவர்களே ஆட்சி செய்து வந்தனர்.
அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா வரை இது தொடர்ந்தது.
தற்போதுதான் திரைத்துறை சாராத எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில்தான் நடிகர்கள் கமலும் ரஜினியும் தங்கள் அரசியல் வருகையை அறிவித்துள்ளனர்.
இவர்களை அடுத்து அரசியல் பேச்சில் அதிகபடியாக பேசப்படுபவர் நடிகர் விஜய் தான்.
அவர் வருகிறாரா? இல்லையா? என்பதை அவரே இப்போது முடிவு எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.
இந்நிலையில் மதுரை விஜய் ரசிகர்கள் ஜீன் 22ல் தன் பிறந்தநாளில் கட்சியை ஆரம்பித்து அவர் அரசியல் கட்சிக்கு வருவதாக போஸ்டர் அடித்து ஊரெங்கும் ஓட்டியுள்ளனர்.
அந்த போஸ்டர் ஒரு செய்திதாளில் வெளியானது போல டிசைன் செய்து அச்சடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போஸ்டர் விஜய்க்கு தெரியுமா? என்பதுதான் தெரியவில்லை.
On 22nd June Vijay starts political party Vijay Fans poster issue