தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
மலையாள சினிமாவை உலகறியச் செய்த மூத்த கலைஞர்களுல் ஒருவர், பல விருதுகளை வென்ற இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன், இன்று இயற்கை எய்தினார்.
மலையாளத்தின் மூத்த இயக்குனர் K.S சேதுமாதவன் (90) காலமானார். மலையாளத்தில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியவர் சேதுமாதவன். தமிழில் கமல் நடித்த நம்மவர் படத்தை இயக்கியதும் சேதுமாதவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கமல் தன் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது…
காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். https://t.co/CXPcyVuMDA
தமிழில் நடிகர் சிவகுமார் நடிப்பில் இவர் இயக்கிய மறுபக்கம் திரைப்படம், புதுமையான மாறுபட்ட படைப்பாக, அனைவராலும் கொண்டாடப்பட்டு, அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படமாக சாதனை படைத்தது.
அன்னாரின் உடலுக்கு நடிகர் சிவகுமார் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
அதன் பின் சிவகுமார் கூறிய இரங்கல் செய்தியில்…
அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படம் “மறுபக்கம்” என்ற திரைக்காவியத்தை உருவாக்கியவர், இந்திரா பார்த்தசாரதி அவர்களின் குறுநாவல் “உச்சிவெயில்” அந்தப் படத்தின் முலக்கதை, அதன் நாயகன் வேம்பு அய்யராக என்னை நடிக்க வைத்த மரியாதைக்குரிய இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன் அவர்களின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய திரையுலகின் சார்பில் வேண்டுகிறேன்.
Noted film director KS Sedhumadhavan no more