கமலை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய ‘நம்மவர்’ பட இயக்குனர் மரணம்.; கமல் – சிவகுமார் இரங்கல்

கமலை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய ‘நம்மவர்’ பட இயக்குனர் மரணம்.; கமல் – சிவகுமார் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையாள சினிமாவை உலகறியச் செய்த மூத்த கலைஞர்களுல் ஒருவர், பல விருதுகளை வென்ற இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன், இன்று இயற்கை எய்தினார்.

மலையாளத்தின் மூத்த இயக்குனர் K.S சேதுமாதவன் (90) காலமானார். மலையாளத்தில் கமல்ஹாசனை அறிமுகப்படுத்தியவர் சேதுமாதவன். தமிழில் கமல் நடித்த நம்மவர் படத்தை இயக்கியதும் சேதுமாதவன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கமல் தன் இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது…

காலத்தால் அழியாத காவியங்களைத் திரையில் படைத்த கே.எஸ்.சேதுமாதவன் புதிய அலை சினிமாவின் ஊற்றுமுகம்.மலையாள சினிமாவின் தரத்தைத் தீர்மானித்த அடிப்படை விசைகளுள் ஒருவர்.தன் கலைச்சாதனைகளால் என்றென்றும் நினைவு கூரப்படுவார்.என் சேது சாருக்கு, நல்ல சினிமாவை கற்பித்த ஆசிரியருக்கு அஞ்சலிகள். https://t.co/CXPcyVuMDA

தமிழில் நடிகர் சிவகுமார் நடிப்பில் இவர் இயக்கிய மறுபக்கம் திரைப்படம், புதுமையான மாறுபட்ட படைப்பாக, அனைவராலும் கொண்டாடப்பட்டு, அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படமாக சாதனை படைத்தது.

அன்னாரின் உடலுக்கு நடிகர் சிவகுமார் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். அவர் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பின் சிவகுமார் கூறிய இரங்கல் செய்தியில்…

அகில இந்திய அளவில் தங்கத்தாமரை விருது வென்ற முதல் தமிழ்ப்படம் “மறுபக்கம்” என்ற திரைக்காவியத்தை உருவாக்கியவர், இந்திரா பார்த்தசாரதி அவர்களின் குறுநாவல் “உச்சிவெயில்” அந்தப் படத்தின் முலக்கதை, அதன் நாயகன் வேம்பு அய்யராக என்னை நடிக்க வைத்த மரியாதைக்குரிய இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன் அவர்களின் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு. அவர் ஆன்மா சாந்தியடைய திரையுலகின் சார்பில் வேண்டுகிறேன்.

Noted film director KS Sedhumadhavan no more

ஷிவாத்மிகா என் மகள்.. ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட சூட்டிங் எனக்கு சொர்க்கம் – சேரன்

ஷிவாத்மிகா என் மகள்.. ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ பட சூட்டிங் எனக்கு சொர்க்கம் – சேரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் திரையுலகில் வெகு சில திரைப்படங்கள், உறவுகளுக்கு புத்துயிர் கொடுப்பதிலும், நட்பைப் பிணைப்பதிலும், பல சமயங்களில், பிரிந்த குடும்பங்களை ஒன்றிணைக்கும் ஒரு ஊடகமாகவும் இருந்துள்ளன.

பாண்டவர் பூமி, ஆனந்தம், விஸ்வாசம், கடைக்குட்டி சிங்கம் போன்ற பல படங்களில், படத்தின் காட்சி முடிந்த உடனே, பார்வையாளர்கள் திரையரங்குகளிலேயே அமர்ந்து, குறைந்த பட்சம் தாங்கள் பல ஆண்டுகளாக பிரிந்த உறவுகளுக்கு, நெருங்கியவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தியையாவது அனுப்பிய பல சம்பவங்களை நாம் பார்த்திருக்கிறோம்.

அம்மாதிரி படங்கள் தருவதில் முன்னோடி இயக்குநர்களில் ஒருவர் தான் இயக்குநர் சேரன், ஒரு நடிகராகவும் திரைப்பட இயக்குநராகவும் அவரது படங்களில் பார்வையாளர்கள் உணர்ச்சிகளின் குவியலுக்கு உள்ளாவார்கள். அவர் எப்போதும் தூய்மையான பொழுதுபோக்கு அமசங்கள் மற்றும் இதயத்தை வருடும் பாத்திரங்களில் மட்டுமே தோன்றியிருக்கிறார்,

அது இப்போது “ஆனந்தம் விளையாடும் வீடு “ படத்திலும் தொடர்கிறது. டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கிய இந்தப் படத்தில் அவர் கவுதம் கார்த்திக்குடன் இணைந்து முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்துக் கொண்ட நடிகர் சேரன் கூறியதாவது…

“ஆனந்தம் விளையாடும் வீடு என் மனதிற்கு மிகவும் நெருக்கமான, சிறப்பு வாய்ந்ததொரு படைப்பு, இதை நான் வெறும் கருத்துக்காக சொல்லவில்லை, படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் அதை மனதிற்குள் உண்மையாக உணர்ந்தார்கள். படப்பிடிப்பின் போது நான் என் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்த்திருந்தாலும், இப்படத்தை முடித்து திரையிட்ட போது எனக்கு மிக வித்தியாசமான அனுபவம் கிடைத்தது.

திரையில் நான் தான் நடித்துள்ளேன் என்பதையே மறந்துவிட்டேன், சில காட்சிகளில் அந்தக் கதாபாத்திரத்தைப் பார்த்து என் கன்னங்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. இது எனக்கு மட்டுமல்ல, இந்தப் படத்தில் நடித்த பல நடிகர்களுக்கும் இதே அனுபவம் தான் இருந்தது.

இத்திரைப்படத்தின் இயக்குநர் இயக்குநர் நந்தா பெரியசாமி நிகழ்த்திய மாயாஜாலம் இது. அவர் ஒரு வெற்றிகரமான திரைப்படத் இயக்குநராக வர வேண்டும் என்று நான் எப்போதும் ஆசைப்பட்டிருக்கிறேன், அது இந்தப் படத்தின் மூலம் நிறைவேறியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த படத்தின் தூணாக இருந்த தயாரிப்பாளர் ரங்கநாதன் சாருக்கு நன்றி. இந்த படத்தின் தயாரிப்பின் போது அவர் சந்தித்த தொற்றுநோய் போன்ற கடுமையான சவால்களை வேறு எந்த தயாரிப்பாளரும் தாங்கியிருப்பார்களா என்று எனக்குத் தெரியவில்லை.

இவரைப் போன்ற தயாரிப்பாளர் இண்டஸ்ட்ரிக்கு கிடைத்த வரப்பிரசாதம். கௌதம் கார்த்திக் மிகவும் அன்பான மனிதர். அவர் குணத்தில் மிகவும் அரிய பண்பை கொண்டிருக்கிறார். எல்லா நடிகர்களுக்கும் நவீன நகர்ப்புற பையன் மற்றும் கிராமத்து பையன் என இரண்டு கேரக்டரிலும் ஜொலிக்கும் திறமை இருப்பதில்லை, ஆனால் இது அவருக்கு மிக எளிதாக பொருந்தி போகிறது.

நடிகை ஷிவாத்மிகா எனக்கு மகள் போன்றவர். அவளுடைய தொழிலின் மீதான அவரது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டு நான் பெருமைப்படுகிறேன்.

சரவணன், விக்னேஷ், அல்லது படக்குழுவில் யாராக இருந்தாலும், நாங்கள் அனைவரும் ஒரு குடும்பம் போலவே இருந்தோம், முழு படப்பிடிப்பும் எனக்கு சொர்க்கமாக இருந்தது. திரையரங்குகளிலும் இந்த மனமுழுக்க பரவும் இன்ப அதிர்வை பார்வையாளர்கள் உணருவார்கள். ஆனந்தம் விளையாடும் வீடு குடும்பங்களுக்கிடையேயான பிணைப்பையும், சகோதரத்துவத்தையும் புதுப்பிக்கும் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கியுள்ள “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தை, Sri Vaari Film P. ரங்கநாதன் தயாரித்துள்ளார். இப்படத்தில் கௌதம் கார்த்திக், சேரன், ஷிவாத்மிகா ராஜசேகர், சரவணன், விக்னேஷ், டேனியல் பாலாஜி, மொட்டை ராஜேந்திரன், சௌந்தரராஜா, முனிஷ்ராஜ், சிங்கம்புலி, “நமோ” நாராயணன், சினேகன், ஜோ மல்லூரி, “நக்கலைட்” செல்லா, சூப்பர்குட் சுப்ரமணி, VJ கதிரவன், மௌனிகா, “மைனா” சுசானே, பிரியங்கா, மதுமிதா, “பருத்திவீரன்” சுஜாதா, “நக்கலைட்” தனம், ஜானகி, வெண்பா, சுபாதினி, சிந்துஜா மற்றும பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார், பொர்ரா பாலபாரணி ஒளிப்பதிவு செய்கிறார், படத்தொகுப்பை என் பி ஸ்ரீகாந்த் கவனிக்கிறார்.

சாஹு (கலை), ஹரி தினேஷ் (ஸ்டன்ட்), தினேஷ்-ராதிகா (நடன அமைப்பு), சினேகன் (பாடல் வரிகள்), மற்றும் முருகன் (காஸ்ட்யூமர்) ஆகியோர் இந்தப் படத்தின் முக்கிய தொழில்நுட்பக் கலைஞர்களாக பணியாற்றியுள்ளனர்.

Cheran shares his working experience in Aanandham Vilayaadum Veedu

பைக் ரேஸிங்கில் கின்னஸ் ரெக்கார்டு.; மீண்டும் வரும் திலீபன் புகழேந்தி

பைக் ரேஸிங்கில் கின்னஸ் ரெக்கார்டு.; மீண்டும் வரும் திலீபன் புகழேந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாவில் “பள்ளிக்கூடம் போகாமாலே, ‘எவன்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இளம் நாயகன் திலீபன் புகழேந்தி, தான் முதலில் முயற்சித்த கின்னஸ் பைக் ரேஸிங் ரெக்கார்டை, 10 வருட போராட்டத்திற்கு பிறகு, மீண்டும் சாதிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நாயகனாக கவனம் குவித்து வருபவர் நாயகன் திலீபன் புகழேந்தி, இலக்க்கிய நாயகன் கவிஞர் புலமைபித்தனின் பேரனும் பிரபல தயாரிப்பாளர் புகழேந்தி அவர்களின் மகனுமாகிய இவர் தற்போது, சாகவரம் எனும் சைக்கோ திரில்லர் திரைப்படத்தை இயக்கி நடித்து வருகிறார். சிறு வயதிலேயே பைக் மீது மிகுந்த ஆர்வமும் காதலும் கொண்டிருந்த இவர் வருங்காலத்தில் பைக் ரேஸராக வர வேண்டும் என்ற கனவில் இருந்தார்.

சிறு வயது முதல் தொடர்ந்து பைக் ரேஸ் பயிற்சிகளை செய்து, ஸ்கீம் பைக் ரேஸிங்கில் தமிழ்நாடு பைக் ரேஸிங் சாம்பியனாக ஜெயித்தார்.

உலகளாவிய கின்னஸ் சாதனைக்காக 10 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு வீலிங் செய்யும் சாதனை முயற்சியை 2009 ஆம் ஆண்டு கின்னஸ் நடுவர்கள் முன் முன்னெடுத்தார்.

அப்போது நடந்த எதிர்பாராத விபத்து, அவரது கனவை முடக்கி போட்டது மீண்டும் பைக் ஓட்டக்கூடாது என டாக்டர்கள் எச்சரிக்கை செய்ததால் பைக் ரேஸிலிருந்து ஒதுங்கி சினிமாவில் கவனம் செலுத்தினார்.

தற்போது மீண்டும் 10 வருடங்களுக்கு பிறகு கின்னஸ் சாதனை முயற்சியை கையிலெடுத்துள்ளார்.

வரும் 2022 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, 13 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு, வீலிங் செய்யும் கின்னஸ் சாதனை முயற்சியை செய்யவுள்ளார்.

இது குறித்து திலீபன் புகழேந்தி கூறும் போது…

சிறு வயது முதலே பைக் தான் என் உயிராக இருந்துள்ளது. எப்போதும் பைக் ரேஸில் சாதிக்க வேண்டும், பைக் ரேஸராக வர வேண்டும் என்பது தான் என் கனவாக இருந்துள்ளது. பைக் மீதான காதலில் தமிழ்நாடு பைக் ரேஸ் சாம்பியனாகவும் ஆகிவிட்டேன், ஆனாலும் கின்னஸ் சாதனை படைப்பதற்காக 10 கிமி பைக்கில் ஒற்றை சக்கரத்தில் தீவைத்துக்கொண்டு வீலிங் செய்யும் சாதனை முயற்சியை 2009 ஆம் ஆண்டு கின்னஸ் நடுவர்கள் முன்னால் செய்தேன், அப்போது எதிர்பாராமல் என் மேல் பைக் விழுந்து விபத்தாகிவிட்டது.

டாக்டர்கள் திரும்பவும் பைக் ஓட்டக்கூடாது என்று கட்டளையிட்டுவிட்டார்கள். என் தாத்தா மீண்டும் என்னை பைக் ஓட்டக்கூடாது என சொல்லி விட்டார்.

குடும்பத்தினரின் அன்பு என்னை மாற்றியது அவர்களுக்காக சினிமாவுக்குள் நுழைந்தேன். சமீபத்தில் என் தாத்தாவின் மறைவு என்னை மனதளவில் மிகவும் பாதித்தது, என் கனவு என்னை துரத்திக்கொண்டே இருந்தது. மீண்டும் பைக் தான் என்னை மீட்டெடுத்தது.

பைக்கை மீண்டும் தொட்டபோது நான் மீண்டும் உயிர்த்தெழுந்ததாகவே உணர்ந்தேன். என் வாழ்க்கையின் கனவை நிறைவேற்ற மீண்டும் ஆசைப்பட்டேன் அதற்காகவே கடுமையாக பயிற்சி செய்தேன். இப்போது 13 கீமி பைக் சக்கரத்தில் நெருப்பு வைத்துக்கொண்டு வீலிங் செய்து கின்னஸ் சாதனை செய்யவுள்ளேன்.

வரும் ஜனவரி மாதம் 12 ஆம் தேதி கின்னஸ் உறுப்பினர்கள் முன்னிலையில் சென்னை , பெங்களுர் நெடுஞ்சாலையில் இந்த சாதனை நிகழ்வு நடக்கவுள்ளது. உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி என்றார்.

Dileepan Pugazhendhi’s new guinnes record attempt in january

போலீஸ் கதையில் புதுமை.. எனக்கு ரொம்ப பெருமை..; ரைட்டருக்கு பாரதிராஜா பாராட்டு

போலீஸ் கதையில் புதுமை.. எனக்கு ரொம்ப பெருமை..; ரைட்டருக்கு பாரதிராஜா பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ரைட்டர்’.

சமுத்திரக்கனி நடித்துள்ள இந்த படம் நாளை டிசம்பர் 24ல் ரிலீசாகிறது.

இந்த நிலையில் நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்யராஜ் இருவரும் ‘ரைட்டர்’ படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார்.

அவர் பேசியதாவது…

“தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது. எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது.

இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப் பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது.

எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன்.

இயக்குனர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குனர்களை இந்த தமிழ் சினிமாவுக்கு தந்துக் கொண்டிருக்கிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார்.

Director Bharathi Raja praises Writer film and director Frankin

தமிழ் & தெலுங்கில் உருவாகும் தனுஷின் ‘வாத்தி’.; தெலுங்கு டைட்டில் என்ன தெரியுமா.?

தமிழ் & தெலுங்கில் உருவாகும் தனுஷின் ‘வாத்தி’.; தெலுங்கு டைட்டில் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் ‘வாத்தி’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார் தனுஷ்.

இந்தப் படத்தை வெங்கட் அல்லுரி எழுதி இயக்குகிறார்.

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார்.

இந்தப் படத்துக்கு தெலுங்கில் ‘சார்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சித்தாரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் மற்றும் ஃபார்சுன் ஃபோர் நிறுவனம் ஆகியவை இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Dhanush in bilingual film is titled Vaathi

மீனாட்சி அர்ப்பணிப்பு.. பிரிகிடா சூப்பர்.; மாணவிகள் மத்தியில் தன் வேலையை காட்டிய ‘வேலன்’ முகேன்ராவ்

மீனாட்சி அர்ப்பணிப்பு.. பிரிகிடா சூப்பர்.; மாணவிகள் மத்தியில் தன் வேலையை காட்டிய ‘வேலன்’ முகேன்ராவ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், பிக்பாஸ் புகழ் முகேன் ராவ் நாயகனாக நடிக்கும் “வேலன்” திரைப்படம். அழகான குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ளார்.

டிசம்பர் 31 வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, இன்று தனியார் பெண்கள் கல்லூரியில், படக்குழுவினர் கலந்துக் கொள்ள பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

கல்லூரிப் பேராசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இவ்விழாவில்…

தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் பேசியதாவது…

இது என் முதல் மேடை. Skyman Films International சார்பில் அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல படம் செய்துள்ளோம் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் பிராங்ஸ்டர் ராகுல் பேசியதாவது…

உங்களை போல் தான் நானும், இணையத்தில் இருந்துவிட்டு, இவர்களோடு மேடையில் அமர்ந்திருப்பது பெருமை, சூரி அண்ணனை படப்பிடிப்பில் பார்த்தால் சிரிப்பை அடக்க முடியாது அவ்வளவு காமெடி செய்வார். பிரபு சார் கூட இருப்பவரை அத்தனை நல்ல முறையில் பார்த்து கொள்வார்.

ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுப்பார். இப்படத்தில் என்னை தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் கவினுக்கு நன்றி. முகேனும் நானும் நெருங்கிய நண்பர்களாகி விட்டோம். அவர் கேரவனில் இருக்க மாட்டார், எப்போதும் தொழிலாளர்களோடு உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பார். முகேன் என்னை ரியல் லைஃபில் ப்ராங்க் பண்ணிருக்கார். பிரிகிடா சுட்டிப்பெண்ணாக நடித்திருக்கிறார்.

இந்தப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும், இந்த வேலன் படத்தை நீங்கள் ஹிட்டாக்க வேண்டும் நன்றி.

நாயகி மீனாக்‌ஷி கோவிந்தன் பேசியதாவது…

இந்த காலேஜில் மூணு வருஷம் முன்னாடி சீட் கேட்டு வந்தேன் கிடைக்கவில்லை ஆனால் இப்பொது பிரபலமாக வந்திருப்பது மகிழ்ச்சி. இந்தப்படம் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பில் நாங்களே சிரித்து, சிரித்து ரீடேக் வாங்கினோம், உங்களுக்கும் பிடிக்கும். முகேனை நான் பார்க்க வேண்டும், படத்தின் கதை கேளு, என என் அம்மா சொன்னார்கள்.

முகேனிடம் பழகிய பிறகு தான் இவரை ஏன் எல்லோருக்கும் பிடிக்கிறது என்பது தெரிந்தது, மிக நல்ல மனிதர். அவருடைய ரசிகர்கள் அவரை மிகவும் நேசிக்கிறார்கள். இந்தப்படம் உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். நன்றி

நாயகி பிரிகிடா பேசியதாவது…

இங்கு உங்கள் வரவேற்பை பார்க்கும் போது என் கல்லூரி நாட்களை நான் மிஸ் செய்கிறேன். இந்தப் படத்தை பொறுத்தவரை அனைவருமே மிகுந்த ஆதரவு தந்தார்கள் இந்தப்படம் என் மனதுக்கு நெருக்கமான படம், கோவிடுக்கு பிறகு எனக்கு திருப்பம் தந்த படம் இது. இந்தப்படம் உங்க அனைவருக்கும் பிடிக்கும், நான் தொடர்ந்து சினிமாவில் இருப்பேன். இன்னும் நிறைய படங்கள் நடித்து கொண்டிருக்கிறேன் உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

நடிகர் சூரி பேசியதாவது…

அண்ணாத்த படத்தில் நடிக்கும் போது ஷாட் ரெடி என சொன்னால், நாம் எந்திருக்கும் முன் 35 அடி போயிருப்பார் ரஜினி சார், அவருக்கு அந்த எனர்ஜியை கடவுள் தந்திருக்கிறார். அதை இந்த கல்லூரியில் பார்க்கிறேன். பிரின்ஸிபல் அவ்வளவு எனர்ஜியுடன் இருக்கிறார்.

சினிமாவில் இன்று ஜெயிப்பது அத்தனை ஈஸி இல்லை, முபாரக் சார் அடுத்து ஜீவி படம் செய்கிறார், வலிமை படம் விநியோகம் செய்கிறார் அவர் தொடும் இடம் எல்லாம் வெற்றி பெறுகிறது. அவருக்கு வாழ்த்துக்கள், அன்பு தம்பி கவின் சிறுத்தை சிவா அவர்களிடம் உதவியாளர் மிக சிறந்த உழைப்பாளி, அவரிடம் இருந்து வந்து, முதல் படம் செய்வது கவின் தான். உங்கள் குருநாதர் போல் நீங்கள் பெரிய வெற்றி பெற வேண்டும், முகேன் 500 பேர் இருந்தால் 495 பேர் விசில் அவருக்கு தான் கிடைக்கிறது, முகேனுடன் நடித்தது, சிவகார்த்திகேயனுடன் நடித்தது போல் இருந்தது. அவருக்கு மிகப்பெரும் எதிர்காலம் இருக்கிறது. இறைவன் ஆசிர்வாதம் அவருக்கு இருக்கிறது.

மீனாக்‌ஷியுடன் கென்னடி கிளப் படத்தில் நடித்திருக்கிறேன் மிக அருமையாக நடித்துள்ளார். பிரிகிடாவுக்கு ஷீட்டிங் ஸ்பாட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, ராகுல் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டு விட்டான். கார் கம்பெனிக்குள் போய் ஒரு ப்ராங் பண்ணியிருந்தார் அட்டகாசமாக இருந்தது.

மனுஷன் அடி வாங்காமல் தப்பி வந்து விடுகிறார். பிரபு சார் சீனியர் ஆக்டர், ஆனால் புதுசா வரும் நடிகரிடம் இயல்பாக பழகுவது எல்லாம் அத்தனை சாதாரணமானதல்ல, ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் நன்றாக பார்த்து கொள்வார், அவருக்கு பெரிய நன்றி. இந்தப்படம் வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி.

நடிகர் பிரபு பேசியதாவது…

இந்த கல்லூரியில் இந்த நிகழ்வு நடக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. முகேனுக்கு இது போல் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கவின் ஒரு அருமையான இயக்குநர், கலைமகன் மிகச்சிறந்த தயாரிப்பாளர். ராகுல் தம்பி இணையத்தில் கலக்குகிறார். மீனாக்‌ஷியுடன் நடித்தது சந்தோஷம். தம்பி சூரி மிக கடினமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள்.

பிக்பாஸ் முகேன் மிக நல்ல பையன், எப்படி அவர் பிக்பாசில் உண்மையாக இருந்து ஜெயித்தாரோ, அதே போல் இப்படத்துக்கும் உழைத்துள்ளார். அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்தப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது ஆக்சன் காட்சிகள் காமெடி எல்லாம் நன்றாக வந்துள்ளது. படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த ஜெயின் காலேஜுக்கு நன்றி.

நடிகர் முகேன் ராவ் பேசியதாவது…

இவ்வளவு பெரிய மேடையை என் வாழக்கையில் முதல் முறையாக பார்க்கிறேன். கவின் அண்ணா, கலைமகன் முபாரக் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி, ஒரு கலைஞன் தனக்கு வாய்ப்பு கிடைக்காத என ஏங்கி கொண்டிருப்பான் அப்படி ஏங்கும் போது வாய்ப்பு தந்தவர்கள் இவர்கள், கவின் அண்ணா என்னிடம் கதை சொன்னபோதே மிகவும் ரசித்தேன். அவர் சொன்ன மாதிரியே சூப்பராக எடுத்திருக்கிறார்.

முபாரக் சார் என்னை மட்டுமல்ல இன்னும் நிறைய திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அவருக்கு நன்றி. பிரபு சார் மிகப்பெரிய லெஜண்ட் ஆனால் என்னை ஒரு மகனை போல், ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து பார்த்து கொண்டார். சூரி அண்ணாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும். ராகுல் முதலில் பார்த்தவுடனே நெருங்கி விட்டோம், நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார் அவர் ஜெயிக்க வேண்டும். தம்பி ராமையா அவரும் ஒரு நல்ல பாத்திரம் செய்துள்ளார்.

இந்தப்படமே ஒரு குடும்பமாக இணைந்து செய்துள்ளோம். மீனாக்‌ஷி மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்க கூடியவர் தனது வேலையை சரியாக செய்பவர்,
சூப்பராக நடித்திருக்கிறார். பிரிகிடாவும் சூப்பராக நடித்திருக்கிறார். இந்த வரவேற்புக்கு உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பு தான் இங்கு என்னை அழைத்து வந்துள்ளது.

வேலன் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் இப்படம் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருக்கும். நன்றி.

இயக்குநர் கவின் பேசியதாவது…

ஜெயின் காலேஜ் மாணவிகளுக்கு நன்றி இவ்விழாவை ஒரு திருவிழா போல் மாற்றி விட்டீர்கள், நன்றி. பிரபு சார் 2019 விஸ்வாசம் பட போஸ்ட் புரடக்சன் போது எல்லோருக்கும் 200 ரூபாய் கொடுத்து வந்தார் நான் தள்ளி நின்றேன் என்னை அழைத்து எனக்கும் கொடுத்து வாங்கிங்க உங்க வாழ்க்கை நல்லாருக்கும் என்றார். அவரிடம் தான் இது ஆரம்பித்தது. அப்புறம் முகேனை பார்த்தேன் பொள்ளாச்சி பையனாக நடிக்க வேண்டும் அவர் சரியாக இருப்பார் என, அவரிடம் கதை சொன்னேன், சிரித்து என்ஜாய் செய்தார்.

நான் சரியாக வருவேனா எனக்கேட்டார் நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தேன். கலைமகன் முபாரக் சாரை சந்தித்து கதை சொன்னேன். ஒரு அறிமுக இயக்குனருக்கு, அறிமுக நாயகனுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் வேண்டாம் என எல்லோரும் சொன்னார்கள், ஆனால் இந்தப்படத்திற்கு இது கண்டிப்பாக தேவை மக்கள் ரசிப்பார்கள் என்று ஒப்புக்கொண்டார் அவருக்கு நன்றி.

சூரி அண்ணாதான் நடிக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன், அவர் அப்போது அண்ணாத்த, வெற்றிமாறன் சார் படம் என பிஸியகா இருந்தார் ஆனால் என்னிடம் கதை கேட்டு உன் படம் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்து தந்தார். இப்போது வரை ஒரு அண்ணனாக படத்திற்கு உதவி செய்து வருகிறார். தம்பி ராமையா, படத்தில் எல்லோருடனும் அவருக்கு மட்டும் தான் காட்சிகள் இருக்கிறது. மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். மீனாக்‌ஷி மிக அருமையாக நடித்து தந்துள்ளார். ப்ராங்ஸ்டர் ராகுல் அவரே சொந்தமாக நிறைய டெவலப் செய்து அசத்தினார்.

தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் எனக்காக உடனிருந்து உழைத்தார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார். எல்லோருக்கும் நன்றி. ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு படமாக உங்கள் அனைவரையும் இப்படம் கவரும் நன்றி.

இப்படத்தில் மீனாக்‌ஷி கோவிந்தன் நாயகியாகவும் சூரி முக்கிய பாத்திரத்திலும் படம் முழுவதும் வரும் பாத்திரங்களாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பிரபு, மரியா வின்செண்ட், தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, பிரிகிடா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கிறார். K.சரத்குமார் படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் தொழில்நுட்பக் குழுவில் மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்), தினேஷ்-விஜி சதீஷ்-ராதிகா (நடனம்), உமாதேவி-வேல்முருகன்-கலைமகன் முபாரக் (பாடல்கள்), தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

Skyman Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக், தயாரிப்பில், இயக்குநர் கவின் எழுதி, இயக்கியுள்ள “வேலன்” படம் டிசம்பர் 31 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Bigg Boss Mugen speech at Velan audio launch

More Articles
Follows