தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஏழைக் குடும்பத்தில் பிறந்தபோதிலும் வறுமையை வென்று +2 தேர்வில் 1176 மார்க் பெற்றவர் அரியலூர் மாணவி அனிதா.
தன் மருத்துவ கனவை நீட் தேர்வு அழித்துவிட்டதால் விரக்தியில் தற்கொலை செய்துக் கொண்டார்.
எனவே நீலம் சார்பில் சென்னை லயோலா கல்லூரியில் அனிதா நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.
அதில், இயக்குநர் பா.ரஞ்சித், விஷால், சுசீந்திரன், சமுத்திரக்கனி, விஜய்சேதுபதி, தினேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர்.
அப்போது விஜய்சேதுபதி பேசியதாவது…
‘கல்வி என்பது மனிதர்களின் அடிப்படைத் தேவை. ஆனால் தற்போது அதிலும் பிரச்சினை வந்துள்ளது.
நம்ம மேல தொடர்ந்து ஓர் அரசியல் வைக்கப்பட்டு வருகிறது.
அது சாதி அரசியல். அதை முதலில் ஒழிக்கணும். இப்ப நாம போராடுறோம். ஆனால் போராட்டக்காரர்களை சமாளிக்க நிறைய பேர் வளர்ந்துட்டாங்க.
ஒரே இடத்தில் அனைவரும் நின்று போராடினால் அதை ஈசியாக கலைத்துவிடுகிறார்கள்.
எனவே போராடும் முறையிலும் மாற்றம் கொண்டு வரனும்.
அடுத்த தலைமுறைக்கு சினிமாவை விட அரசியலை அதிக கற்றுத் தரணும்.” என்றார்.
Next Generation should learn politics more than cinema says Vijay Sethupathi