தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் வழங்கி வருகிறார்.
இந்த வார நிகழ்ச்சியில் கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிகள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இதில் தன் கணவனுக்கு படிக்க தெரியாது.. அவர் இன்னும் முன்னேறவில்லை என மகள் முன்னிலையில் பேசியிருந்தார் ஒரு பெண்மணி.
ஆனால் அவருக்கு சிறந்த அப்பா என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்தார் கோபிநாத்.
இதனடுத்து ரசிகர்கள் அந்த பெண்ணை குறித்து விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் கவிஞர் தாமரை இந்த விவகாரம் குறித்து தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது…
” அம்மாக்கள் இல்லை என்றால் குழந்தைகள் பள்ளி படிப்பை கூட தாண்ட முடியாது.
அந்த பெண் இதுபோன்ற நிகழ்ச்சியில் எப்படி பேச வேண்டும் என்பது தெரியாமல் பேசிவிட்டார். சிலர் இதுபோல பேசி தனக்குத்தானே ஆப்பு வைத்துக் கொள்கிறார்கள்.
கோபிநாத் இந்த நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருக்கும்போது அவரது பிள்ளைக்கு அவரது தாய் மார்க் பட்டியலில் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருப்பார்” என தெரிவித்துள்ளார்.
Neeya Naana latest Show Lyricist Thamarai Statement