“ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் பெருமையே” – நயன்தாரா

“ஜல்லிக்கட்டுக்கான இளைஞர்களின் போராட்டம் பெருமையே” – நயன்தாரா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara sareeஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி, பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு ஆதரவு அளிப்பதாக நயன்தாரா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது…

ஜல்லிக்கட்டுக்கான இளைய தலைமுறையின் அமைதி போராட்டம் பெருமைப்பட வைக்கிறது

இந்தப் போராட்டம் நமது கலாச்சாரத்துக்கு எதிரான அந்நிய நாட்டு நிறுவனத்துக்கு பலத்தை காட்டும்

தமிழகத்தில் பிறக்காவிட்டாலும் எனக்கு அங்கீகாரம், அடையாளம் தந்தது தமிழ்மண்ணும், மக்களும்தான்.” என்று தெரிவித்துள்ளார்.

Nayanthara statement to support Jallikattu

முதல்வர் பேசட்டும்; முடிவு பண்றோம்… ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிரடி

முதல்வர் பேசட்டும்; முடிவு பண்றோம்… ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jallikattu supporters waiting for TN chief Ministers statementஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பை தடை செய்யவும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நிரந்தரமாக நடத்திட வேண்டும் என தமிழக முழுவதும் உள்ள இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இவர்களுடன் போலீசார் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் ஒன்றிணைந்து கலையாமல் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக அமைச்சர்கள் மீன்வளத்துறை ஜெயக்குமார் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் இருவரும் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர்.

இளைஞர்களுடன் இணைந்து தமிழகம் அரசு போராடும்.

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும்.

இதற்காக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசுவோம். என்றனர்.

முதலமைச்சர் கொடுக்கும் அறிக்கையை பொறுத்து போராட்டத்தின் அடுத்த கட்ட முடிவு இருக்கும் என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Jallikattu supporters waiting for TN chief Ministers statement

‘அந்த அமைப்பை அனுப்’பீட்டா’ தமிழ்நாட்டுக்கே சந்தோஷம்..’- விஜய்

‘அந்த அமைப்பை அனுப்’பீட்டா’ தமிழ்நாட்டுக்கே சந்தோஷம்..’- விஜய்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijayஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்திட வேண்டும் என்றும், தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என தன்னிச்சையாக தமிழக இளைஞர்கள் போராடி வருகின்றனர்.

அவர்களுக்காக விஜய் தன் ஆதரவை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார். அதில்….

சட்டம் என்பது மக்களுக்காகதான். கலாச்சாரத்தை பாதுகாக்கதான். பறிக்க அல்ல.

எந்த ஒரு கட்சி ஆதரவும் பின்புலமும் இல்லாமல் தமிழன் என்ற உணர்வோடு இணைந்து போராடும் இளைஞர்களுக்கு தலை வணங்குகிறேன்.

கைது செய்யப்பட்ட இளைஞர்களை வீட்டுக்கு அனுப்’பீட்டா’ எனக்கு சந்தோஷம்.

அந்த அமைப்பை (பீட்டா) திருப்பி அனுப்’பீட்டா’ தமிழ்நாட்டுக்கே சந்தோஷம் என விஜய் அந்த வீடியோ பதிவில் பேசியுள்ளார்.

இளைஞர்களுக்கு ஆதரவாக நடிகர் சிம்பு கூறியுள்ளதாவது…

இன்று ஜனவரி 18ஆம் தேதி இரவு 8 மணிக்கு பொதுமக்கள் அனைவரும் அவர்கள் வசிக்கும் பகுதிகளின் ஒரு முக்கியமான ஜங்க்ஷனை தேர்ந்து எடுத்து அங்கு அமைதியாக அமர்ந்து போராட வேண்டும்.

மருத்துவமனை, மருந்து கடை ஆகியவற்றுக்கு இடையூறு கொடுக்காத படி போராடவும் அவர் கேட்டுக் கொண்டார்.

Vijay and Simbu supports Jallikattu and request to ban PETA

‘பாகுபலி-2’க்கு பிறகு ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்டம்

‘பாகுபலி-2’க்கு பிறகு ராஜமௌலியின் அடுத்த பிரம்மாண்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajamouliமஹதீரா, நான் ஈ உள்ளிட்ட வெற்றிப் படங்களை தொடர்ந்து பாகுபலி என்ற பிரம்மாண்ட படத்தை இயக்கினார் ராஜமவுலி.

இப்படம் இந்தியளவில் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்தது.

தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிவிட்டது.

2017 ஏப்ரல் மாதம் இப்படம் ரிலீஸ் ஆவது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் இப்படத்தைதொடர்ந்து இந்தியாவின் இதிகாசமான மகாபாரதம் கதையை படமாக்கவிருக்கிறாராம் ராஜமவுலி.

எனவே இப்படம் பாகுபலியை விட பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

பெயர் மாற்றத்துடன் ரிலீஸ் ஆகும் சூர்யாவின் சிங்கம்

பெயர் மாற்றத்துடன் ரிலீஸ் ஆகும் சூர்யாவின் சிங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

s3 movie stillsஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் சிங்கம் 3.

இதுநாள் இப்படத்தின் தலைப்பை எஸ் 3 என்றே இப்படக்குழுவினர் கூறி வந்தனர்.

வருகிற ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினவிழா தினத்தில் இப்படம் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் புரமோஷனுக்காக சூர்யா இன்று முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலான ‘எஸ் 3’ என்பது தமிழக அரசின் வரிவிலக்கை பெறுவதற்கு தடையாக இருப்பதால் இந்த படத்தின் டைட்டில் ‘சி 3’ என்று தற்போது மாற்றப்பட்டுள்ளது.

‘சிங்கம் 3’ என்பதன் சுருக்கம்தான் ‘சி 3’ என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யாவுடன் இப்படத்தில் அனுஷ்கா ஷெட்டி, ஸ்ருதிஹாசன், ரோபா சங்கர், ராதாரவி, விவேக், நாசர், ராதிகா, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘பைரவா’வுக்கு ஒதுங்கிய விஜய்சேதுபதி எடுத்த முடிவு

‘பைரவா’வுக்கு ஒதுங்கிய விஜய்சேதுபதி எடுத்த முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay sethupathiபொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி விஜய் நடித்த பைரவா படம் வெளியானது.

எனவே பைரவாவுக்கு அதிக தியேட்டர்கள் கிடைத்த காரணத்தால் மற்ற படங்கள் பொங்கல் ரேஸில் இருந்து விலகின.

இந்நிலையில் அன்று விலகிய விஜய்சேதுபதி நடித்த புரியாத புதிர் படம் இந்த வாரம் ஜனவரி 20ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Vijaysethupathi starring Puriyadha Puthir movie release date

More Articles
Follows