ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா ரேஞ்சுக்கு உயர்ந்த நயன்தாரா படம்

ரஜினி-விஜய்-அஜித்-சூர்யா ரேஞ்சுக்கு உயர்ந்த நயன்தாரா படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

nayanthara 55ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் பிறந்த நாள் வரும்போது, அவர்களின் படங்களை தயாரிப்பாளர்கள் ரிலீஸ் செய்ய நினைக்கின்றனர்.

ஒருவேளை படங்கள் இல்லாவிட்டாலும், பட பாடல்கள், டீசர், பர்ஸ்ட் லுக், ட்ரைலர் என எதையாவது ரிலீஸ் செய்கின்றனர் தயாரிப்பாளர்கள்.

இது பெரும்பாலும் நடிகர்களுக்கே அமையும்.

தற்போது முதன்முறையாக நயன்தாரா படத்திற்கும் இதுபோன்ற ஏற்பாட்டை செய்துள்ளார் படத் தயாரிப்பாளர்.

மீஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் 55வது படம் உருவாகிவருகிறது.

இதன் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக்கை நவம்பர் 17ஆம் தேதி தொடங்கும்போது நள்ளிரவு 12 மணிக்கு வெளியிட இருக்கிறார்களாம்.

இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் தன் முதல் படைப்பாக தயாரிக்கிறார்.

விஜய் விழாவில் வானதி சீனிவாசன்; போஸ்டர் போட்ட ரசிகர்கள்

விஜய் விழாவில் வானதி சீனிவாசன்; போஸ்டர் போட்ட ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vijay bannerகறுப்பு பணத்தை ஒழிக்க, ரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாது என மோடி அறிவித்தார்.

இதனை நடிகர் விஜய் வரவேற்றாலும், மக்கள் கஷ்டப்படுவது வேதனையாக உள்ளதாக தெரிவித்தார்.

இதற்கு பா.ஜ. கட்சியை சேர்ந்த வானதி சீனிவாசன், கஷ்டப்படும் ஏழைகளுக்கு விஜய் உதவலாமே என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜய் சார்பாக அவரது ரசிகர்கள், விஜய்யின் பிறந்த நாள் விழாவில் வானதி சீனிவாசன் கலந்து கொண்ட படத்தை வெளியிட்டுள்ளனர்.

இந்த ரத்த தான முகாம் விழாவானது கடந்த ஜீன் மாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனை மாற்றப் போகும் பொன்ராம்

சிவகார்த்திகேயனை மாற்றப் போகும் பொன்ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan ponramசிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ரெமோ.

இப்படத்திற்கு முன்பே சிவகார்த்திகேயனின் கேரியரில் பெரும் ஹிட்டடித்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன்.

இந்த இரு படங்களையும் இயக்கியவர் பொன்ராம்.

தற்போது மோகன் ராஜா இயக்கத்தில் நடிக்கும் சிவா, அடுத்து பொன்ராம் இயக்கத்தில்தான் நடிக்கவிருக்கிறார்.

முந்தைய படங்களை போல் இல்லாமல் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வேறொரு பரிமாணத்தை கொடுக்கப் போகிறாராம் பொன்ராம்.

அதாவது சரித்திர கால பின்னணியில் இப்படத்தை உருவாக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் மாறுபட்ட கதையை (Alien Fantasy) தேர்ந்தெடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

‘சிம்புவை முதல்ல பாராட்டியவரே தனுஷ்தான்…’ – கௌதம் மேனன்

‘சிம்புவை முதல்ல பாராட்டியவரே தனுஷ்தான்…’ – கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu dhanush gautham menonஒரே நேரத்தில் சிம்பு-தனுஷ் இருவரையும் இயக்குபவர் கௌதம் மேனன்.

சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தற்போது தனுஷ் நடிக்கும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை இயக்கி வருகிறார்.

இவர்கள் இருவரையும் இயக்கி வருவது குறித்து கௌதம் தன் சமீபத்திய பேட்டியில் கூறும்போது…

‘அச்சம் என்பது மடமையடா’ ட்ரைலரைப் பார்த்துட்டு, ‘சிம்பு நல்லா பண்ணியிருக்கார் ப்ரோ. ட்ரைலர் சூப்பர்ன்னு’ முதல்ல மெசேஜ் பண்ணினதே தனுஷ்தான்.

ஃபைட்டுக்கு மட்டும் தனுஷ் ரிகர்சல் பார்ப்பார். மத்தபடி வேற எல்லாம் ஒரே முறைதான்.

என்னை நோக்கி பாயும் தோட்டா படமே தனுஷ் ஸ்பெஷல்தான்.’’

இவ்வாறு தெரிவித்துள்ளார் கௌதம் மேனன்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும் மாயா யார்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினியுடன் நடிக்கும் மாயா யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajiniஷங்கரின் இயக்கத்தில் ரஜினி, அக்சய்குமார், எமிஜாக்சன் ஆகியோர் நடித்து வரும் 2.ஓ.

லைக்கா நிறுவனம் ரூ. 350 கோடியில் இப்படத்தை மிகப்பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

இப்படத்தின் முக்கிய கேரக்டரில் நடிகை மாயா நடித்து வருகிறார்.

மேலும் இவர் ஜோதிகாவுடன் “மகளிர் மட்டும்” படத்திலும், சந்தானத்துடன் சர்வர் சுந்தரம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கிய ‘வானவில் வாழ்க்கை’ என்ற படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் ஒரு ஜிம்னாஸ்டிக் கலைஞர் ஆவார். மேலும் பின்னணி பாடகி, நாடகக் கலைஞர், சிலம்பாட்ட கலைஞர் என பல பன்முக திறமை கொண்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மோடியை பாராட்டிய ரஜினி கணக்கு காட்டுவாரா..?’ அமீர் கேள்வி

‘மோடியை பாராட்டிய ரஜினி கணக்கு காட்டுவாரா..?’ அமீர் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini ameerசென்னை, தேனாம்பேட்டையிலுள்ள காமராஜர் அரங்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பொது சிவில் சட்ட எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது.

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கனிமொழி, நல்லகண்ணு, இயக்குனர் அமீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

இந்த மாநாட்டில் அமீர் பேசும்போது…

“மோடியின் புதிய திட்டத்தால், புதிய இந்தியா பிறந்துவிட்டது என்று ரஜினிகாந்த் சொல்கிறார்.

பழைய இந்தியாவில் ‘கபாலி’ படம் வெளியானதே அதற்கு தியேட்டரில் டிக்கெட்டுகள் என்ன விலைக்கு விற்றது என்று தெரியுமா?

அரசு நிர்ணயித்த விலையிலா டிக்கெட்டுகளை விற்றார்கள்? அந்த படத்தின் மொத்த வியாபாரம் என்ன?

அத்தனையும் கணக்கில் வருகிறதா? உங்களால் அந்த கணக்கை காட்ட முடியுமா?

ரூ. 200 டிக்கெட்டை 2000 ரூபாய்க்கு விற்று சம்பாதிக்கக் கூடிய ரஜினி, கறுப்புப் பணத்தை ஒழிக்க ஆதரவு கொடுக்கிறார் என்று சொன்னால் என்ன அநியாயம் இது” என்று அனல் பறக்க பேசினார் அமீர்.

‘லிங்கா’ படத்தலைப்பை வழங்கியவர் இயக்குனர் அமீர். அதற்கு படக்குழு சார்பில் அப்போது அமீருக்கு நன்றி தெரிவித்தார்கள்.

அந்த விழாவில் ரஜினியை மிகவும் புகழ்ந்து பேசினார் அமீர் என்பது இங்கே நினைவு கூறத்தக்கது.

More Articles
Follows