தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் சினிமாவில் கதாநாயகன்களை தாண்டியும் பல நட்சத்திரங்கள் தங்கள் நடிப்பால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளனர்.
அதில் மிக முக்கியமானவர் நடிகர் நாசர்.
இவர் தற்போது நடிகர் சங்க தலைவராக இருக்கிறார்.
பல படங்களில் வில்லனாகவும் குணசித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்.
இவரும் ஒரு கட்டத்தில் படங்களை தயாரித்தும் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
வில்லனாக நடித்தாலும் ஹீரோக்களை தாண்டியும் பல படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டுள்ளது.
எனவே நாசருக்கு தன் படங்களில் வலுவான கேரக்டரை அமைத்துக் கொடுப்பது கமல்ஹாசனின் வழக்கம்.
மகளிர் மட்டும் (1990களில்) படத்தில் நாசரை ஹீரோவாக்கி அழகு பார்த்தார் கமல்ஹாசன்.
மேலும் அவ்வை சண்முகி குருதிப்புனல் விஸ்வரூபம் உள்ளிட்ட பல படங்களில் நாசருக்கு முக்கியமான கேரக்டர் கொடுத்து வந்தார் கமல்ஹாசன்.
ரஜினியுடன் வேலைக்காரன் படையப்பா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார் நாசர்.
இந்த நிலையில் நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலக உள்ளதாகவும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் சில நபர்களால் பரப்பப்பட்டது.
இதனை அடுத்து நடிகர் நாசரின் மனைவி கமீலா தன் ட்விட்டர் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
சினிமாவை உண்டு சினிமாவையே சுவாசித்திருப்பது தான் நாசர்.
அவரைப் பற்றி வரும் தகவல்கள் தவறானவை. சில நபர்கள் தேவையில்லாமல் இந்த வதந்திகளை பரப்புகிறார்கள்” என விளக்கம் அளித்துள்ளார்.
தற்போது நாசரின் மகன்களும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
சைவம் & சார்லின் சாப்ளின் 2 படத்தில் நடிகர் நாசரின் ஒரு மகன் நடித்திருந்தார்.
அதுபோல கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் மற்றொரு மகனும் நடித்திருந்தார்.
என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே இருப்பேன் –
நடிகர் நாசர்
நடிகர் நாசர் சினிமாவை விட்டு விலகப் போவதாக கடந்த சில தினங்களாக செய்தி வந்து கொண்டிருக்கிறது. அந்த செய்தியில், வயதான காரணத்தால் நடிக்க இயலவில்லை என்றும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட மற்றும் அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்ட படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் அது முடிந்தவுடன் நடிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
பொதுவாகவே நாசர், பெரிய படங்களில் மட்டுமல்லாது முன்னணி நாயகர்கள், பெரிய கதாநாயகர்கள், என்று இல்லாமல் அறிமுக நாயகர்கள், அறிமுக கலைஞர்கள் நடிக்கும் சிறிய பட்ஜெட் படங்களிலும் நடித்து கொண்டே இருப்பவர். சின்ன கலைஞர்கள் என்று பார பட்சம் பார்க்காமல் யார் கேட்டாலும் அது சிறிய கதாபாத்திரமாகவே இருந்தாலும் அதை ஏற்று நடித்து கொண்டிருக்கிறார். இந்தியா முழுவதிலும் அனேக மொழிகளில் நடித்து வரும் நாசரை பற்றி இப்படி ஒரு செய்தி வருவது உண்மை இல்லை என்று அவரே விளக்கம் அளித்துள்ளார்
நாசர் அவர்கள் கூறியிருப்பதாவது :
நான் நடிகனாகத் தான் வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்ட பின், அதைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு முறையாகப் பயிற்சி பெற்றுதான் சினிமாவிற்கு வந்தேன்.
மேலும், வலைத்தளங்களில் சமீபமாக வலம் வந்து கொண்டிருக்கும் என் தொழிலிலிருந்து ஓய்வு என்ற செய்தி என்னால் சொல்லப்பட்டது அல்ல; புனைவு. நான் நடித்துக் கொண்டிருப்பேன்; நடிப்பேன். அடையாளம் இல்லாதவர்கள் வலைத்தளங்களில் பதிவிடுவதை விட மக்களால் நம்பப்படுகின்ற நான் மதிக்கின்ற பொறுமையோடும் நட்போடும் பழகுகின்ற ஊடகங்களே அதை வெளியிடுவதுதான் வருத்தமளிக்கிறது. எளிதாக தொடர்பு கொள்ளும் விதத்தில்தான் நான் பழகியிருக்கிறேன். சொந்த விஷயம் ஆகட்டும் தொழில் சார்ந்த விஷயம் ஆகட்டும், சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் அல்லது விளக்கம் இல்லாது தயவு செய்து தவறான பதிவு செய்ய வேண்டாம்.
என் மூச்சு இருக்கும் வரை நான் நடித்துக் கொண்டே தான் இருப்பேன்.
News about Nasser’s health, quitting career (acting), etc..etc.. who ever started this, long live, to spin more stories..on more people.. Nasser eats and breathes cinema.. thanks friends and folks for all the concern. DONT SPREAD FALSE NEWS.
Nasser quits cine industry ? Kameela explains