கொல்கத்தா திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வென்ற லோகேஷ்

கொல்கத்தா திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனர் விருதை வென்ற லோகேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

director lokeshலோகேஷின் அடுத்த பட N4 டிரைலர், N4 படத்திற்கு கிடைத்த சிறந்த இயக்குனர் விருது, மகிழ்ச்சியில் N4 படக்குழுவினர், N4 திரைப்படம் 11 வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2021ல் சிறந்த பின்னணி இசைக்கான விருது

“மை சன் இஸ் கே” என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் குமார்.

முதல் படத்திலேயே பலரது கவனத்தை ஈர்த்த இவர் தனது இரண்டாவது படமாக “N4” திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தரம்ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனமும், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது.

வடசென்னை மக்களின் வாழ்வியலை எதார்த்தமான கோணத்தில் காட்டும் இப்படத்தில் மைக்கேல் தங்கதுரை, கேப்ரியல்லா செலஸ், அனுபமா குமார், வடிவுக்கரசி, அபிஷேக் சங்கர், அழகு, அஃப்சல் ஹமீது , வினுஷா தேவி, அக்க்ஷய் கமல், பிரக்யா நாக்ரா என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் டிரைலர் பலரின் கவனத்தை ஈர்த்தது.

சமீபத்தில் இப்படம் ‘Calcutta International Cult Film Festival’ எனும் திரைப்பட விழாவில் பங்கேற்றது. போட்டியின் நடுவர்கள் “N4” பட இயக்குனர் லோகேஷ் குமாருக்கு சிறந்த இயக்குனர் விருதை அளித்துள்ளனர்.

இதனால் இப்படத்தின் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியிலும் உற்சாகத்திலும் உள்ளனர்.

இதன் முன்னர் “N4” திரைப்படம் 11 வது தாதா சாகேப் பால்கே திரைப்பட விழா 2021ல் சிறந்த பின்னணி இசைக்கான விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பாளர்கள் – நவீன் சர்மா, யோகேஷ் சர்மா, லோகேஷ் குமார்
தயாரிப்பு நிறுவனம் – தரம்ராஜ் பிலிம்ஸ், பியாண்ட் தி லிமிட் கிரியேஷன்ஸ்
எக்ஸிகியூடிவ் புரொடுயுசர் – ரபேல் ராஜசேகர்
ஒளிப்பதிவு – திவ்யன்க் S
படத்தொகுப்பு – டேனி சார்லஸ்
இசை – பாலசுப்ரமணியன் G
சண்டைப்பயிற்சி – V.கோட்டி
உடைகள் – நந்தா அம்ரிதா, லோகேஷ்
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

Trailer – https://youtu.be/hC1N8AFvFus

N4 film director Lokesh wins best director award at Kolkata film festival

‘நாம் தமிழர் கட்சி’ சீமான் வீட்டில் இழப்பு..; முதல்வர் ஸ்டாலின்-டிடிவி-கமல் இரங்கல்

‘நாம் தமிழர் கட்சி’ சீமான் வீட்டில் இழப்பு..; முதல்வர் ஸ்டாலின்-டிடிவி-கமல் இரங்கல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

seeman fatherநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்.

சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் செந்தமிழன் காலமானார்.

அவரது மறைவுக்கு சீமானின் நண்பர்கள் நாதக தொண்டர்கள் என பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவெய்திய செய்தி வேதனையளிக்கிறது.

அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, தந்தையை இழந்த துயரத்தில் இருக்கும் சீமானுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அமமுக

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.

சீமானின் திரையுலகப் பயணத்திற்கும் பின்னர் அரசியல் செயல்பாடுகளுக்கும் பக்கபலமாக இருந்த செந்தமிழனின் மறைவால் வாடும் சீமானுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவரது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மநீம தலைவர் நடிகர் கமல்ஹாசன்

அவரது ட்விட்டரில்…

நண்பர் @SeemanOfficial இழப்புக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்..

My deepest condolences for the loss of your father, dear @Seemanofficial.

NTK leader Seeman father Senthamizhan passed away

#BREAKING கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு

#BREAKING கொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

MK Stalinகொரோனா நிவாரணமாக 13 மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

2,11,12,798 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட உள்ளது. அதாவது சுமார் 2.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு 13 வகை மளிகை பொருட்கள் வழங்க திட்டம்.

கோதுமை, உப்பு, ரவை, சர்க்கரை, பருப்பு, மஞ்சள் தூள் அடங்கிய பாக்கெட், கடுகு, சீரகம், சோப்பு உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகின்றன

ஜூன் 3ந் தேதி கலைஞர் பிறந்தநாளன்று கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

TN govt provides 13 grocery items to people in ration shop

பெற்றவர்களே பெண்களுக்கு பிரச்சனை..; ‘காயல்’ களத்தில் கதை சொல்லும் தமயந்தி

பெற்றவர்களே பெண்களுக்கு பிரச்சனை..; ‘காயல்’ களத்தில் கதை சொல்லும் தமயந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kaayalஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் ‘காயல்’.

இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள்.

அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

சாதி மாற்று திருமணத்தை எதிர்க்கும்
பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும்
பிரச்சனைகளைப் பற்றி பேசும் படமாக உருவாகி இருக்கும் காயல் திரைப்படம் காதலும் பயணமும் கலந்த ஒரு திரைவடிவம்.

ஒரு பெண்ணுடைய தேர்வை அங்கீகரிக்காத
சமூகத்தை நோக்கி கேட்கப்படும் கேள்வியே
இத்திரைப்படத்தின் ஆணிவேராக உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் தமயந்தி.

முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது.

தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.

Kaayal film based on women issues

சந்தோஷ் பாபு ஐஏஎஸ், பத்ம ப்ரியா விலகல்.; மக்கள் காலி மய்யமாகும் மக்கள் நீதி மய்யம்.!

சந்தோஷ் பாபு ஐஏஎஸ், பத்ம ப்ரியா விலகல்.; மக்கள் காலி மய்யமாகும் மக்கள் நீதி மய்யம்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Santhosh Babu IAS and Padma Priyaசட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.

கமீலா நாசர் கட்சியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

அதன் பின்னர் துணைத் தலைவர் மகேந்திரன்.. “தலைவர் கமல் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் அப்படி செய்வது போல தெரியவில்லை.

தமிழகத்தை சீரமைப்பதற்கு முன்னர் அவர் தன் கட்சியை சீரமைக்க வேண்டும். அவர் விரும்பினால் நண்பராக தொடர்வேன்” என அறிக்கை விட்டு பிரஸ் மீட் வைத்து கட்சியில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் இன்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு விலகுவதாக அறிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பதிவில்… “மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் வகித்த பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகுகிறேன்.

எனது தனிப்பட்ட காரணங்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு. நட்பையும் நேசத்தையும் காட்டிய கமல் சாருக்கும் அவரது குழுவுக்கும் நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் சில நிமிடங்களில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த மநீம வேட்பாளர் பத்ம பிரியா கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

“எனக்கு வாக்களித்த மக்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

என்னைப் போல் அரசியல் பின்புலம் இல்லாத ஒரு நடுத்தர குடும்பப் பெண்ணை உங்கள் வீட்டுப்பிள்ளையாக எண்ணி வாக்களித்தமைக்கு நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

சில காரணங்களுக்காக மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுகிறேன். அதை எனது தொகுதி மக்களான உங்களுடன் பகிர்வது எனது கடமை என்று கருதி தெரிவித்துக்கொள்கின்றேன்.

எனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும்” என தெரிவித்துள்ளார் பத்மபிரியா.

Santhosh Babu IAS and Padma Priya leave MNM

#BREAKING கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி

#BREAKING கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவரது 2ஆம் டோஸ் தடுப்பூசி என அவரது பிஆர்ஓ ரியாஸ் தெரிவித்துள்ளார்.

தனது 2வது மகள் சௌந்தர்யாவுடன் மருத்துவமனைக்கு சென்று 2வது தடுப்பூசி போட்டுக் கொண்டார் ரஜினி.

Super Star Rajinikanth takes his Second dose of Covid-19 vaccine

More Articles
Follows