வறுமையில் வாடிய ஊர் மக்களுக்குஉதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்

வறுமையில் வாடிய ஊர் மக்களுக்குஉதவிய நடிகர் மொட்டை ராஜேந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Motta Rajendran in Robin hoodஇருப்பவர்களிடம் கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுப்பவரை ராபின்ஹுட் என்பார்கள். ராபின்ஹுட் என்ற பெயர் இண்டெர்நேஷனல் அளவில் புகழ்பெற்றது. அந்தப்பெயரையே மொட்டை ராஜேந்திரன் நடிக்கும் படத்திற்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.

லூமியெர்ஸ் ( lumieres ) ஸ்டுடியோஸ். பி.( லிட்) என்ற புதிய பட நிறுவனம் சார்பில் ஜூட் மேய்னி, ஜனார்த்திக் சின்னராசா, ரமணா பாலா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ” ராபின்ஹூட் ”

இந்தப் படத்தில் கதை நாயகனாக ராபின்ஹூட் கதாப்பாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளார். மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர், சங்கிலி முருகன், சதீஷ், முல்லை, அம்மு அபிராமி ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – இக்பால் அஸ்மி

இசை – ஸ்ரீநாத் விஜய்

பாடல்கள் – கபிலன்

வசனம் – ஜோதி அருணாச்சலம்

எடிட்டிங் – ஜோமின்

கலை – கே.எஸ்.வேணுகோபால்

நடனம் – நந்தா

தயாரிப்பு மேற்பார்வை – சார்ல்ஸ்

மக்கள் தொடர்பு – மணவை புவன்

தயாரிப்பு – ஜூட் மேய்னி, ஜனார்திக் சின்னராசா, ரமணா பாலா

கதை, திரைக்கதை , இயக்கம் – கார்த்திக் பழனியப்பன்.

படம் பற்றி இயக்குனர் கார்த்திக் பழனியப்பன் கூறியதாவது..

“நாற்பது வருடங்களுக்கு முன்பு மச்சம்பட்டி என்ற கிராமத்தில் மக்கள் மழை இல்லாமல் வறுமையில் வாடுகிறார்கள். நமக்கு மழை பெய்து எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்குகிறார்கள். இந்த ஊர் மக்களுக்கு ஒரே நம்பிக்கை,ஆறுதல் எல்லாம் சுதந்திரப் போராட்டத் தியாகி ராமசாமி ஒருவரே. இந்தச் சூழ்நிலையில் அந்தக் கிராமத்தில் சின்னச் சின்ன திருட்டில் மொட்டை ராஜேந்திரன் குழு ஈடுபடுகின்றனர். இந்த விஷயம் ஊர் மக்களுக்கு தெரியவர , போலீஸில் புகார் கொடுக்கிறார்கள். புகார் கொடுத்தும் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நேரத்தில் அரசு மூலம் நமக்கு ஒரு நல்லது நடக்கப் போவதாக நினைத்து சந்தோஷப் படுகிறார்கள். அதற்கு தியாகி உயிருடன் இருந்தால் மட்டும் நடக்கும் என்ற சூழ்நிலையில் திடீரென தியாகி இறந்துவிடுகிறார். பிறகு மக்களுக்கு கிடைக்க இருந்த அரசின் பணத்தை ஊர் தலையாரி திட்டமிட்டு திருட நினைக்கிறார். இதை அறிந்த திருடன் மொட்டை ராஜேந்திரன் அவர்களின் சதி திட்டத்தை தடுத்து, அரசாங்க பணத்தை ஊர் மக்களுக்கு பெற்றுக் கொடுத்தாரா இல்லையா? என்பதை காமெடி கலந்து உருவாக்கி இருக்கிறோம்.

இந்தப் படத்திற்காக மழை இல்லாமல் வறண்ட கிராமம் வேண்டும் என தேடிக்கொண்டிருந்தோம். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகிலுள்ள வல்லப்பன்பட்டி என்ற கிராமம் பல ஆண்டுகளாக மழையே வராமல் வறண்டுபோய் கிடந்தது. அங்கேயே படப்பிடிப்பை நடத்தினோம்,

ஒரு கட்டத்தில் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுந்த போது வல்லப்பன்பட்டி மக்களே எதிர்பாராத ஒரு அதிசயம் நடந்தது. திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை தொடர்ந்து மூன்று நாட்கள் பெய்தது. அதனால் ஊர்மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். எனக்கும் படக்குழுவினருக்கும் கனமழை கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் ஊர் மக்களுக்கு தண்ணீர் கிடைத்ததை நினைத்தது மகிழ்ச்சி அடைந்தோம் என்கிறார் இயக்குனர் கார்த்திக் பழனியப்பன்.

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்

மீண்டும் கதாநாயகனாக நவரச நாயகன் கார்த்திக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Karthikமனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’.
இதனை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை தயாரித்தவருமான டி.எம் ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை,வசனம், பாடல்களையும் எழுதி இருக்கிறார்.

இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், பெரைரோ, இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் இயக்குனர் ஜெயமுருகன் மற்றும் அறிமுக நடிகர் சுமன்.ஜெ ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். படத்திற்கு ஒய்.என்.முரளி ஒளிப்பதிவு செய்கிறார். பிண்ணனி இசை அமைப்பாளராக அலிமிர்சாக் பணியாற்றுகிறார். தயாரிப்பு நிர்வாகியாக அப்பு பணியாற்றுகிறார்.
.
படம் பற்றி இயக்குனர் டி. எம்.ஜெயமுருகன் கூறியதாவது:

நம் தமிழ் சமுதாயம் கலை மற்றும் கலாச்சாரம், சமூக உறவுகளை கொண்டு கட்டமைக்கப்பட்டது ஆனால் இன்று அவைகள் கட்டுப்பாடுகளை இழந்து வருகிறது. இன்றைய இளம் தலைமுறைக்கு நம் உறவையும் கலாச்சாரத்தையும் கொண்டுசெல்லும் விதமாக இந்தப் படம் உருவாக்கப்படுகிறது.

அண்ணன் தங்கை பாசத்தின், உறவின் பின்னணியில் கொங்கு சீமை மக்களின் வாழ்வியலை சொல்கிற படம். இதில் அண்ணனாகவும் கதையின் நாயகனாகவும் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். அரசியல் பணிகளில் பிஸியாக இருக்கும் கார்த்திக் இந்தப்படத்தின் கதையைக் கேட்டதும் உடனே நடிக்க ஒப்புக் கொண்டார் அதுவே படத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாக கருதுகிறேன். என் தங்கை, பாசமலர், முள்ளும் மலரும், கிழக்கு சீமையிலே பட வரிசையில் இந்தப்படமும் இடம் பெறும். கார்த்திக் சாருக்கு முக்கிய படமாக இருக்கும்.

விவசாயத்தை வாழ்க்கையாகவும் தன்மானத்தை உயிராகவும் கொண்ட அண்ணனுக்கும், அண்ணனுக்காக வாழ்வையே தியாகம் செய்யும் தங்கைக்கும் இடையிலான பாசப் போராட்டம்தான் படத்தின் மையக் கரு. இதன் படப்பிடிப்பு நேற்று திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டத்தில், கீரனூர் கிராமத்தில் உள்ள செல்வநாயகி அம்மா கோவிலில் பிரமாண்டமான பூஜையுடன் துவங்கியது. ஒரே கட்டமாக பொள்ளாச்சி, திருப்பூர், ஊட்டி, கோவை போன்ற பகுதிகளில் நடைபெற உள்ளது.

BREAKING இந்தியன்2 சூட்டிங் ஸ்பாட்டில் 3 பேர் மரணம்; கமல் உருக்கமான பதிவு!

BREAKING இந்தியன்2 சூட்டிங் ஸ்பாட்டில் 3 பேர் மரணம்; கமல் உருக்கமான பதிவு!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

3 set workers died in Indian 2 spot Kamals condolence messageகமல் நடிப்பில் லைகா தயாரித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

இப்பட சூட்டிங் சென்னை பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளது,

எனவே செட் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக, செட் அமைக்கும் பணியின்போது பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்து விட்டது.

Tamil Director Raj Kapoor Bio Data

பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களின் 3 பேர் தகவல்கள் கிடைத்துள்ளன. மது (29) சந்திரன் (60) மற்றும் கிருஷ்ணா (34) ஆகியோர் மரணம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

அதில்… எத்தனையோ விபத்துக்களை சந்தித்து, கடந்திருந்தாலும் இன்றைய விபத்து மிகக் கொடூரமானது. மூன்று சகாக்களை இழந்து நிற்கிறேன்.எனது வலியை விட அவர்களை இழந்த குடும்பத்தினரின் துயரம் பன்மடங்கு இருக்கும். அவர்களில் ஒருவனாக அவர்களின் துயரத்தில் பங்கேற்கிறேன். அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

இவ்வாறு கமல் தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

3 set workers died in Indian 2 spot Kamals condolence message

விஜய்சேதுபதி தொடங்கிய வைத்த அமெரிக்காவின் மொபைல் ஆப் ரேடியோ

விஜய்சேதுபதி தொடங்கிய வைத்த அமெரிக்காவின் மொபைல் ஆப் ரேடியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathi launched Mobile App Universal Live Radio இசைக்கு மயங்காத உள்ளம் உண்டோ.? அனைத்து இதயங்களிலும் ஏதேனும் ஒரு பாடலாவது அவர்களது மனதை வருடியிருக்கும்.

அப்படிபட்ட இசைபிரியர்களுக்கு ஒரு நற்செய்தி. அமெரிக்காவைச் சார்ந்த யுனிவர்செல் லைவ் ரேடியோ என்ற தனியார் வானொலி நிறுவனம் தமிழிலும் களம் இறங்குகிறது.

தகுந்த உரிமம் பெற்ற இந்நிறுவனம், மக்களிடம் எளிதில் சென்றடைய வெப் மற்றும் மொபைல் ஆப்பின் மூலமாக தங்கள் சேவையை துவக்கியுள்ளது.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த சேவையை துவக்கி வைத்தார்.

இதற்காக அந்த குழுவினர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும், அவர்கள் கூறும் போது, ‘எங்கள் குழும தகுதிப்பெற்ற ரேடியோ ஜாக்கிகள் யுனிவர்சல் லைவ் ரேடியோ மூலமாக அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பற்பல விஷயங்களோடு, பல புதுவிதமான யுத்திகளோடு உங்களை நாள்தோறும் மகிழ்விக்க மற்றும் தங்களின் நிகழ்ச்சி திறன் மேம்பாட்டை நிரூபிக்க வருகிறார்கள்.’ என்று கூறினர்.

ரேடியோ ஜாக்கி மற்றும் அவர்கள் நிகழ்ச்சிக்கான பட்டியல் உங்களுக்காக:

1.Rj Porco for Vanakam USA and Manadhin Neram
2. Rj Shobana for just Relax please and tea kada bench
3. Rj Sundar for Namaku Soru than Mukiyam and Konjam fun neraya paatu.
4. Rj Rishi for Oora Suthalam Vanga
5. Rj Sathish for Daily Diary with Legend Story.
6. Rj Tamiz for Cinewood and Political Corner.
7. Rj Thendral for Vetti Neayam and Political Corner
8. Rj Ramesh for Podu Thileley
9. Rj Anbarasi Voice over Artist

இதன் ஒரு அங்கமாக மாற மற்றும் எங்களை தொடர்புகொள்ள www.universalradio.live

Vijay Sethupathi launched Mobile App Universal Live Radio

BREAKING கமல் பட சூட்டிங்கில் விபத்து; 3 பேர் பலி; 7 பேர் படுகாயம்

BREAKING கமல் பட சூட்டிங்கில் விபத்து; 3 பேர் பலி; 7 பேர் படுகாயம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian 2லைகா தயாரிப்பில் கமல், ஷங்கர், அனிருத் இணைந்துள்ள படம் இந்தியன் 2.

இதில் கமலுடன் சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கமலின் அரசியல் வருகை, ஆப்ரேசன் உள்ளிட்ட பல பிரச்சினைகளால் சூட்டிங் தாமதமானது.

தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Tamil Director Raj Kapoor Bio Data

இப்படத்திற்காக பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள ஈ.வி.பி.பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் இன்றிரவு (புதன்கிழமை) நடைபெற்று வந்தன.

அப்போது எதிர்பாராத விதமாக, செட் அமைக்கும் பணியின்போது பயன்படுத்தப்பட்டு வந்த கிரேன் அறுந்து விழுந்துள்ளது.

பல அடி உயரத்தில் இருந்து விழுந்த கிரேனில் சிக்கி, செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

அவர்களின் 3 பேர் தகவல்கள் கிடைத்துள்ளன. மது (29) சந்திரன் (60) மற்றும் கிருஷ்ணா (34) ஆகியோர் இறந்துள்ளனர்.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அவர் 7 பேர் அருகில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இந்தியன் 2 படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

3 set workers died in Kamals Indian 2 shooting spot

‘இந்தியன் 2’ சூட்டிங்கையும் பாதித்த கொரோனா வைரஸ்

‘இந்தியன் 2’ சூட்டிங்கையும் பாதித்த கொரோனா வைரஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

indian 2லைகா தயாரிப்பில் கமல், ஷங்கர், அனிருத் இணைந்துள்ள படம் இந்தியன் 2.

இதிலும் கமல் 90 வயது, இந்தியன் தாத்தாவாக நடிக்கிறார்.

85 வயது கேரக்டரில் கமலின் தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார்.

சித்தார்த், பாபி சிம்ஹா, வெண்ணிலா கிஷோர், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

சில கட்ட சூட்டிங்கை முடித்து விட்ட அடுத்தகட்டமாக படப்பிடிப்பை சீனாவில் நடத்த இருந்தனர்.

தற்போது சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் மோசனமான நிலையில் உள்ளது.

இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்தியன் 2 சூட்டிங் வேறு நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இத்தாலி நாட்டில் நடைபெறலாம் எனவும் தெரிய வந்துள்ளது.

More Articles
Follows