தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2 வாரங்களுக்கு முன் அரம் அறக்கட்டளை விழாவில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக நடிகர் சூர்யா பேசினார்.
அதன்பின்னர் சில தினங்களில் நடைபெற்ற காப்பான் இசை விழாவில் சூர்யாவின் கருத்திற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்திருந்தார்.
ரஜினி பேசினால் மட்டுமல்ல சூர்யா பேசினாலும் மோடிக்கும் கேட்கும். மாணவர்களுக்கு உதவும் சூர்யாவுக்கு புதிய கல்வி கொள்கை குறித்து பேச தகுதியுள்ளது என்றார்.
இதனால், பாஜக மற்றும் அதிமுக இடையே இந்த கருத்துக்கு அதிருப்தி உருவானது.
இந்நிலையில், மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் அவர்கள் சூர்யா மற்றும் ரஜினியின் புதிய கல்வி கொள்கை குறித்து கருத்தை பாராளுமன்ற அவையில் பேசியுள்ளார்.
அவர்கள் வெளிப்படையாகவே அமைச்சர்களால் மிரட்டலுக்கும் உள்ளாக்கப்பட்டனர் எனவும் கூறியுள்ளார்.
அந்த வீடியோ..
புதிய கல்விக் கொள்கை குறித்து நீங்கள் கருத்து தெரிவிக்க சொல்கிறீர்களா?அல்லது ஆதரவு தெரிவிக்க சொல்கிறீர்களா? அதை ஏற்றுக் கொள்ளும் சகிப்பின் தன்மையும் இருப்பதை இந்த அவையில் உறுதி செய்யுங்கள் . #Surya #Rajini #NEP pic.twitter.com/XOK81QBtEq
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 25, 2019