தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தென்னிந்தியாவில் அறுசுவை விருந்துகளின் மன்னன் என்றே சொல்லலாம். அவரது பெயர்தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
பார்ப்பதற்கு படு ஸ்மார்ட்டாக இருக்கும் இவர் சுவையான ராசியான சமையல் கலைஞர் என்றும் சொல்லலாம். இவர் ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற திரைப்படத்தில் நாயகனாகவும் நடித்து தமிழக ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்தான்.
இந்த நிலையில் இவர் நடிகர் விஜய் குறித்து ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அதில்.. “ஒரு முறை எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய்யின் உதவியாளர் ஜெகதீஷ் இடமிருந்து என் அலைபேசி நம்பரை கேட்டு பின்னர் அழைப்பு வந்தது.
அதன் பின்னர் அவர் என்னை தொடர்பு கொண்டு பேசி விஜய் இடம் கொடுத்தார். என் வீட்டிற்கு ஒரு விஐபி வருகிறார் அவருக்கு சமைத்துக் கொடுக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் உணவு வீணாக கூடாது. நிறைய ஐட்டங்கள் வேண்டாம்.. குறைவான வகைகள் இருந்தால் போதும்.. அது அந்த விஐபிக்கு மறக்க முடியாத விருந்தாக அமைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதன்படி அவரும் நானும் கலந்து பேசி ஒரு அருமையான பார்ட்டியை உருவாக்கி கொடுத்தோம். அந்த விஐபி தான் பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
அதன் பின்னர் இதுவரை நான்கு முறைகளுக்கு மேல் விஜய் வீட்டில் என் கைப்பட சமைத்துக் கொடுத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ்.
Madhampatty Rangaraj speaks about Vijay hospitality to Shahrukh