‘லியோ’ பட சூட்டிங் ஜூலை வரை.; 1980s வில்லன் பாபு ஆண்டனி பக்கா அப்டேட்

‘லியோ’ பட சூட்டிங் ஜூலை வரை.; 1980s வில்லன் பாபு ஆண்டனி பக்கா அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘லியோ’.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் குறித்து அதில் நடித்து வரும் பாபு ஆண்டனி தன் அனுபவத்தை தெரிவித்துள்ளார்.

அவரின் பேட்டியில்..

“தற்போது தான் பான் இந்தியா படங்களின் கான்செப்ட் வந்துள்ளது. நான் 1980களிலேயே இந்தியாவில் உள்ள பலமொழி படங்களில் நடித்திருக்கிறேன்.

இப்போது லோகேஷ் இயக்கும் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறேன்.

எனக்கு விஜய் த்ரிஷா சஞ்சய் தத் ஆகியோருடன் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இனி அடுத்த கட்ட படப்பிடிப்பு மே 7 தேதி தொடங்க உள்ளது. படத்தின் படப்பிடிப்பு ஜூலை வரை நடைபெறும்” என தெரிவித்தார்.

‘Leo’ film shooting till July.; latest Update by 1980s villain Babu Antony

விஜய் வீட்டு கதவை கட்டிப்பிடித்த ரசிகை.; சிசிடிவி-யை பார்த்து கண்ணீருடன் கோரிக்கை

விஜய் வீட்டு கதவை கட்டிப்பிடித்த ரசிகை.; சிசிடிவி-யை பார்த்து கண்ணீருடன் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் விஜய்க்கு தமிழக முழுவதும் லட்சக்கணக்கான ரசிகர்கள் ரசிகைகள் உள்ளனர்.

இவர்கள் விஜய் படத்தை திருவிழா போல கொண்டாடுவார்கள். மேலும் விஜய்யின் மீது அளவற்ற அன்பையும் வைத்துள்ளனர்.

இந்த நிலையில் விஜய் வீடு அமைந்திருக்கும் நீலாங்கரைக்கு காஞ்சிபுரத்தை சேர்ந்த பெண் ரசிகை ஒருவர் வந்துள்ளார்.

அந்த பெரிய கதவை கட்டிப்பிடித்தபடியே தன் ஆசையை தெரிவித்துள்ளார்.

விஜய் வீட்டு வாசலில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை பார்த்து.. “தளபதி அண்ணா நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும்.. உங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என தன் ஆசையை தெரிவித்தார்.

அப்போது அருகில் நின்ற ஒரு நபர் உங்களது ஆசையை விஜய் நிறைவேற்றுவாரா.? அந்த நம்பிக்கை இருக்கிறதா? என கேட்டார்.

ஒரு குழந்தை விஜய்யின் பெயரை சொன்னபோது அந்த குழந்தைக்காக வீடியோ காலில் வந்தார் விஜய்.

நான் அவர் வீட்டு வாசலில் ஏறி வந்து நிற்கிறேன்.. எனவே கண்டிப்பாக நிச்சயம் என்னையும் அழைப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்துள்ளார் அந்தப் பெண் ரசிகை.

Vijay’s fan girl video goes viral

தனுசுடன் முதல் முறையாக இணையும் வைகை புயல் வடிவேலு

தனுசுடன் முதல் முறையாக இணையும் வைகை புயல் வடிவேலு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சில நாட்களுக்கு முன்பு தனுஷ் தனது தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸை மீண்டும் தொடங்குவதாகவும், அந்த நிறுவனத்தின் அடுத்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் வைகை புயல் வடிவேலுவை ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க மாரி செல்வராஜ் திட்டமிட்டுள்ளதாக கோலிவுட்டில் செய்திகள் பரவி வருகிறது. மாமன்னன் படத்தில் வடிவேலு ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்கிறார் என்பது இங்கே கவனிக்கத்தக்கது.

20 வருட தனுஷ் சினிமா கேரியரில் வடிவேலு முதல் முறையாக இணைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhanush and Vadivelu joins for the first time

அனைவருக்கும் ‘தெய்வமச்சான்’ தந்த முக்கியத்துவம்.; ஆனந்தத்தில் அனிதா சம்பத்

அனைவருக்கும் ‘தெய்வமச்சான்’ தந்த முக்கியத்துவம்.; ஆனந்தத்தில் அனிதா சம்பத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், தீபா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தெய்வ மச்சான்’.

இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அனிதா சம்பத் பேசுகையில்…

“இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல் படத்திற்கும் பேராதரவு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

இந்த திரைப்படத்தில் விமலுக்கு தங்கையாக நடித்திருக்கிறேன். இந்தத் திரைப்படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் தேவையான முக்கியத்துவத்தை இயக்குநர் மார்ட்டின் வழங்கி இருக்கிறார். ” என்றார்.

Anitha Sampath speech at deiva machan press meet

‘விலங்கு-க்குப் பிறகு ‘தெய்வமச்சான்’ விமலுக்கு கை கொடுப்பார் – உதயகுமார்

‘விலங்கு-க்குப் பிறகு ‘தெய்வமச்சான்’ விமலுக்கு கை கொடுப்பார் – உதயகுமார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உதய் புரொடக்ஷன்ஸ் மற்றும் மேஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயகுமார், கீதா உதயகுமார் மற்றும் எம். பி. வீரமணி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘தெய்வ மச்சான்’.

அறிமுக இயக்குநர் மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விமல், பாண்டியராஜன், ‘ஆடுகளம்’ நரேன், பால சரவணன், அனிதா சம்பத், வத்சன் வீரமணி, தீபா சங்கர், கிச்சா ரவி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கேமில் ஜெ அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு காட்வின் ஜெ. கோடன் இசையமைத்திருக்கிறார்.

இப்படத்திற்கு பின்னணி இசை அஜீஸ் கவனித்திருக்கிறார். இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்த திரைப்படத்தை பிவிஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.

ஏப்ரல் 21ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதன் போது படத்தின் தயாரிப்பாளர்கள் உதயகுமார், வத்சன் வீரமணி, நாயகன் விமல், நடிகர் பாண்டியராஜன், நடிகை அனிதா சம்பத், நடிகை தீபா சங்கர், நடிகர் கிச்சா ரவி, பாடலாசிரியர் அருண் பாரதி, படத்தொகுப்பாளர் இளையராஜா, இயக்குநர் மார்ட்டின் நிர்மல்குமார் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர் உதயகுமார் பேசுகையில்…

‘தெய்வ மச்சான்’ எனும் இந்த திரைப்படத்தை எங்களுடைய உதய் புரொடக்ஷன்ஸ் எனும் பட நிறுவனத்துடன் மேஜிக் டச் பிக்சர்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறோம்.

கிராமத்து பின்னணியிலான முழு நீள நகைச்சுவை திரைப்படமாக தயாராகி இருக்கிறது. இதனை ரசிகர்கள் திரையரங்குகளில் பார்த்து ரசித்து சிரித்து அனுபவிப்பார்கள்.

இந்த திரைப்படம் நடிகர் விமலுக்கு ‘விலங்கு’க்குப் பிறகு பெரிய வெற்றி படமாக அமையும். இந்தத் திரைப்படத்தில் பாண்டியராஜன், அனிதா சம்பத், தீபா சங்கர் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளும் முழுமையான ஒத்துழைப்பை அளித்திருக்கிறார்கள்.” என்றார்.

தெய்வ மச்சான்

After Vilangu web series Deivamachan will milestone for Vimal

காதல் கசக்குதைய்யா.; நான் ரசித்த நடிகர் பாண்டியராஜன் – நடிகை தீபா

காதல் கசக்குதைய்யா.; நான் ரசித்த நடிகர் பாண்டியராஜன் – நடிகை தீபா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில் விமல், அனிதா சம்பத், தீபா, பாண்டியராஜன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‘தெய்வ மச்சான்’.

இந்த படம் ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நடிகை தீபா சங்கர் பேசுகையில்…

“சொப்பன சுந்தரி படத்தில் நான் ஓவர் ஆக்டிங் செய்திருப்பதாக விமர்சனத்தில் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் குறைத்து நடிக்க முயற்சிக்கிறேன். இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.

பாண்டியராஜனுடன் நடித்த அனுபவம் மறக்க இயலாது. நான் சின்ன வயதில் இருந்த போது பாண்டியராஜன் திரையில் தோன்றி பாடிய ‘காதல் கசக்குதையா..’ என்ற பாடலை பார்த்து ரசித்தேன். அந்த காலகட்டத்தில் நாங்கள் பார்த்து ரசித்த கதாநாயகர்களுள் பாண்டியராஜனும் ஒருவர்.

இந்தப் படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் விமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனைவரும் திறமையாக நடித்திருக்கிறோம். இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு சென்று கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

பாண்டியராஜன்

I’m fan of Actor Pandiyarajan says Deepa Sankar

More Articles
Follows