தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
2003ஆம் ஆண்டில் மலையாள படங்களில் அறிமுகமானாலும் அதன்பின்னர் தமிழில் நிலையான மார்கெட்டை பிடித்தார் நயன்தாரா.
இதனையடுத்து தெலுங்கு படங்களிலும் அதிகம் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.
இப்போது தென்னிந்தியாவில் அதிக சம்பளம் நடிகைகளில் முதலிடத்தில் இருக்கிறார் நயன்.
2010ஆம் ஆண்டிற்கு பிறகு அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலேயே அதிகம் நடித்து வருகிறார்.
இடையில் பாஸ்கர் தி ராஸ்கல் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மலையாள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளாராம்.
தமிழ், தெலுங்கு அளவுக்கு மலையாளத்தில் சம்பளம் கிடையாது என்றாலும் கதாநாயகிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல கேரக்டர்கள் அங்கு கிடைக்கும்.
தற்போது நிவின் பாலிக்கு ஜோடியாக லவ் ஆக்ஷன் டிராமா என்ற படத்தில் நடிக்கிறார்.
அடுத்து ‘கோட்டயம் குர்பானா’ என்ற மலையாள படத்திலும் நடிக்கவுள்ளார்.
அவரின் இந்த திடீர் மலையாள ஆர்வத்திற்கான காரணம் என்ன தெரியுமா..?
திருமணத்திற்கு பின்னர் தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக வாய்ப்புகள் கிடைக்காது.
எனவே மலையாள படங்களில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவிட்டால் அது திருமணத்திற்கு பின்னர் கை கொடுக்கும் என்பதாலேயே இந்த முடிவாம்.
நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருவதால் விரைவில் இவர்களின் திருமணம் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இப்போ கூட்டி கழிச்சி பாருங்க.. நயன்தாரா கணக்கு சரியா வருமே..
Lady SuperStar Nayanthara plan to act after marriage