உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

உங்களுக்கு பிடிச்ச ஹீரோயின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kollywood actressஆண்கள் இல்லாமல் கூட ஒரு சில சினிமாக்கள் வந்துள்ளன. ஆனால் பெண்கள் இல்லாமல் சினிமா எடுக்க முடியுமா? என்பது பெரும் சந்தேகம்தான்.

ஆனால் ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவு என்பதே நிதர்சன உண்மை.

அண்மைக்காலமாக சில முன்னணி நாயகிகள் நாயகன் இல்லை என்றாலும் கூட தங்கள் கேரக்டர் எப்படி உள்ளது? சம்பளம் எவ்வளவு? என்பதை குறி வைத்தே கதைகளை கேட்டு வருகின்றனர்.

அந்த நாயகிகள் யார் என்பது உங்களுக்கு தெரியும்தானே…?

அந்த டாப் ஹீரோயின்கள் சம்பளம் எவ்வளவு என்பது குறித்த ஒரு பார்வை இதோ..

நயன்தாராவும், அனுஷ்காவும் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இவர்கள் சம்பளம் ரூ.4 கோடியில் இருந்து 5 கோடியாக உயர்ந்துள்ளது.

இவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

காஜல் அகர்வால் மற்றும் தமன்னாவின் சம்பளம் தற்போது ரூ.2 கோடியாக உயர்ந்துள்ளது.

இவர்களைத் தொடர்ந்து நடிகை அமலாபாலும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறாராம்.

த்ரிஷா தற்போது 1.5 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடும் கீர்த்தி சுரேஷ் ஒரு கோடி வரை சம்பளம் வாங்குகிறார்.

திருமணத்திற்கு பிறகும் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளார் சமந்தா. இவரது சம்பளம் 2 கோடியை நெருங்குகிறதாம்.

ரகுல் பிரீத் சிங் கின் சம்பளம் தீரன் அதிகாரம் ஒன்று படம் வசூலுக்கு பிறகு ரூ.1½ கோடியாக உயர்ந்துள்ளது.

ஹாட்ரிக் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன்

ஹாட்ரிக் ஹிட் அடித்த சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor sivakarthikeyanமோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஃபஹத் ஃபாசி, சினேகா ஆகியோர் நடித்து கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி வெளியான படம் ‘வேலைக்காரன்’.

ஆர்.டி.ராஜாவின் ‘24AM STUDIOS’ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகிய இப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிப் படமாக அமைந்தது.

‘வேலைக்காரன்’ வெளியாகி இன்று 50-ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்னமும் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்போதுள்ள சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி தொடர்ந்து 50 நாட்கள் ஓடுவது ஒரு சாதனையாக கருதப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன் வெளியாகிய ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்களும் 50 நாட்கள் ஓடி வெற்றிப் படங்களாக அமைந்தன.

எனவே இத்துடன் 3 வெற்றிகளை கொடுத்து ஹிட்டடித்துள்ளார்.

2.0 / காலா.; பர்ஸ்ட் ரிலீஸ் எது..? ரஜினிகாந்த் விளக்கம்

2.0 / காலா.; பர்ஸ்ட் ரிலீஸ் எது..? ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

2point0 kaalaநடிகர் ரஜினிகாந்த் போயஸ்கார்டனின் உள்ள தனது இல்லத்தின் அருகே காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது அவரை நிறுத்தி செய்தியாளர்கள் கேள்விகளை கேட்டனர்.

அப்போது அவரின் அரசியல் கட்சி பற்றி கேட்டனர். அதன்பின்னர் ‘2.0’ படம் மற்றும் காலா படத்தின் ரிலீஸ் தேதிகள் குறித்தும் எது முதலில் வெளியாகும் என்றும் கேள்விகளை கேட்டனர்.

ஏப்ரல் 27ஆம் தேதி 2.0 படத்தை வெளியிட திட்டமிட்டு இருந்தோம். ஆனால் கிராஃபிக்ஸ் வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

எனவே 2.0 படத்தின் ரிலீஸ் தேதியை 2-3 நாட்களில் அறிவிப்போம்” என்றார்.

2point0 or Kaala Which movie will release first in 2018

அரசியல் பணியில் கமலுடன் இணைவீர்களா?.; ரஜினி பேட்டி

அரசியல் பணியில் கமலுடன் இணைவீர்களா?.; ரஜினி பேட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal rajiniசென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை இன்று சந்தித்தார்.

அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்டனர்.

சிஸ்டம் சரியில்லை என்றீர்களே அது தமிழ்நாட்டில் மட்டும்தானா? இல்லை நாடு முழுவதுமா? என்று ஒருவர் கேட்டார்.

அதற்கு அவர், “தமிழ்நாட்டில்தான் முதலில் சிஸ்டத்தை சரி செய்ய விரும்புகிறேன்” என்றார்.

மேலும் கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவீர்களா? என்று கேட்டதற்கு அதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்றும் ரஜினிகாந்த் அப்போது தெரிவித்தார்.

Rajini speaks about his alliance with Kamal in Politics

இனிமேல் ஆக்‌ஷன் ரோலில் ரசிகர்களை மிரட்டுவேன்.. : நிகிஷா படேல்

இனிமேல் ஆக்‌ஷன் ரோலில் ரசிகர்களை மிரட்டுவேன்.. : நிகிஷா படேல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress Nikesha Patel says about her action moviesதெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக ‘புலி’ படத்தில் 2010-ம் ஆண்டு அறிமுகமானவர் நிகிஷா படேல்.

தமிழ் சினிமாவுக்கு ‘தலைவன்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு ‘என்னமோ ஏதோ’ மற்றும் ‘கரையோரம்’, ‘நாரதன்’, ‘7 நாட்கள்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது நிகிஷா படேல் தெலுங்கு படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். புதுமுக இயக்குனர் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆக்‌ஷன் ரோலில் அதிரடியாக களமிறங்குகிறார் நிகிஷா.

இப்படத்தில் முகுல் தேவ் வில்லனாக நடிக்கவுள்ளார்.

படத்தின் கதை குறித்து நிகிஷா கூறுகையில், ‘நான் ஒரு குத்துசண்டை வீராங்கனை, எனக்கு ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக ஆசை இருந்தது.

அந்த ஆசை இப்போது நிறைவேறவுள்ளது. தற்போது கமிட் ஆகியுள்ள இப்படத்தில் முழு ஆக்‌ஷன் ரோலில் மிரட்டவுள்ளேன்.

இனி வரும் காலங்களிலும் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் படங்களிலே களமிறங்கவிருக்கிறேன்’ என கூறுகிறார் நிகிஷா.

Actress Nikesha Patel says about her action movies

விஜய் ஜெயித்த கதை-யை புத்தகமாக வெளியிட்டார் சபீதா ஜோசப்

விஜய் ஜெயித்த கதை-யை புத்தகமாக வெளியிட்டார் சபீதா ஜோசப்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Jeitha Kathai book written by Sabitha Josephநடிகர் விஜய்க்கு தமிழ் சினிமாவில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர் தற்போது 25 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டார்.

இந்நிலையில், விஜய் பற்றிய புத்தகம் ஒன்று ‘விஜய் ஜெயித்த கதை’ என்ற பெயரில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது.

இந்த புத்தகத்தை பத்திரிகையாளரும எழுத்தாளருமான சபீதா ஜோசப் எழுதியிருக்கிறார்.

இந்த புத்தகத்தில் 1992-ல் வெளியான நாளைய தீர்ப்பு படத்திலிருந்து சமீபத்தில் வெளியான ‘மெர்சல்’ படம் வரை, அவர் கடந்து வந்த வெற்றி பயணங்களை பற்றி எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளார்.

Vijay Jeitha Kathai book written by Sabitha Joseph

More Articles
Follows