‘கே.ஜி.எப் 2’ சண்டைக் காட்சிகளுக்காக காத்திருக்கும் படக்குழு

‘கே.ஜி.எப் 2’ சண்டைக் காட்சிகளுக்காக காத்திருக்கும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF 2கடந்த 2018ல் எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆனாலும் தமிழக ரசிகர்களின் கவனம் பெற்ற கன்னட படம் ‘கே.ஜி.எப்’ .

பிரஷாந்த் நீல் என்பவர் இயக்க கன்னட நடிகர் யஷ் நாயகனாக நடித்திருந்தார்.

இப்படத்தை தமிழில் நடிகர் விஷால் வெளியிட்டார்.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் இந்தியா முழுவதும் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

தற்போது இதன் 2ஆம் பாகம் தயாரிப்பில் உள்ளது.

இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் சூட்டிங் தொடங்கப்பட உள்ளதால் இரண்டு சண்டை காட்சிகளை படமாக்கவிருக்கிறார்ளாம்.

அதில் நடிகர் சஞ்சய் தத் காட்சியிம் இடம்பெறவுள்ளது.

வருகிற அக்டோபர் 23-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு தீவிர முயற்சியில் உள்ளது.

‘ஐய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் இணையும் சசிகுமார் ஆர்யா

‘ஐய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் இணையும் சசிகுமார் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya sasi kumarமலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

இதில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் நாயகர்களாக நடித்திருந்தனர்.

இப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருந்தார் என்பதை நாம் பார்த்தோம்.

இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

இந்த பிருத்விராஜ் வேடத்தில் ஆர்யாவும், பிஜூமேனன் வேடத்தில் சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

நரகாசூரன் படம் ரிலீஸ் குறித்து அப்டேட் செய்த கார்த்திக் நரேன்

நரகாசூரன் படம் ரிலீஸ் குறித்து அப்டேட் செய்த கார்த்திக் நரேன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

naragasooran release

ரகுமான் நடிப்பில் ‘துருவங்கள் 16’ படத்தை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் இயக்குனர் கார்த்திக் நரேன்.
அதன் பின்னர் அரவிந்த்சாமி மற்றும் ஸ்ரேயா நடிப்பில் ‘நரகாசூரன்’ படத்தை இயக்கினார். இப்படத்தை கௌதம் மேனன் தயாரித்திருந்தார்.

ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அந்த படம் இன்னும் வெளியாகவில்லை.

அண்மையில் அருண் விஜய், பிரசன்னா நடித்த ‘மாஃபியா: சேப்டர் 1’ படத்தை இயக்கியிருந்தார். அந்த படம் படு தோல்வியை சந்தித்தது.

இந்த நிலையில் நரகாசூரன் படம் ரிலீஸ் குறித்து அப்டேட் செய்துள்ளார் கார்த்திக் நரேன்.

கிரிஸ்டோபர் நோலனின் ‘டெனெட்’ பட டிரெய்லரிலிருந்து ஸ்கிரீன் ஷாட்டை பகிர்ந்துள்ளார்.

அதில் “நரகாசூரன்’ வெளிவரும் ஆனால்…..இந்தப் பகுதி சற்று நாடகத்தன்மையாக இருக்கும்” என்ற டயலாக்கை இணைத்துள்ளார்.

அதாவது ‘நரகாசூரன்’ படத்தை நேரடியாக OTT யில் ரிலீஸ் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

நடிகை மைனா நந்தினி வீட்டுல விசேஷம்… ரசிகர்கள் வாழ்த்து

நடிகை மைனா நந்தினி வீட்டுல விசேஷம்… ரசிகர்கள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

myna nandhiniடிவி சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளிடம் மிகப் பிரபலமானவர் நடிகை நந்தினி.

மேலும் சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி உள்ளிட்ட ஹிட் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

ஆனால் சின்னத்திரையை பொறுத்தவரை இவரை மைனா நந்தினி என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும்.

இவர் வெண்ணிலா கபடி குழு, நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தனது பிறந்தநாளை தன் வீட்டில் சிறப்பாக கொண்டாடியுள்ளார் மைனா நந்தினி.

மேலும் இவர் தற்போது கர்ப்பமாகியிருக்கிறார்.

அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். எனவே ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி

துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது வழக்கமான பரிசோதனை தான் என தெரிய வந்துள்ளது.

அவர் நேற்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் இதுவரை டிஸ்சார்ஜ் ஆகவில்லை என்பதால் அதிமுக தொண்டர்களிமையே இது பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்.க்கு சில மருத்துவ பரிசோதனைகள் எடுக்க வேண்டும் என்பதால் இன்று மே 25 மாலை வரை மருத்துவமனையிலேயே இருக்க வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரியவந்துள்ளது.

துணை முதல்வரை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உடல் நலம் விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Eps ops

சென்னையில் 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி; விதிமுறைகள் என்ன?

சென்னையில் 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி; விதிமுறைகள் என்ன?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

industrial estate in chennaiகொரோனா வைரசை கட்டுப்படுத்த கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இந்த நிலையில் சில தளர்வுகள் தற்போது வணிக நிறுவனங்களை திறக்க மாநில அரசுகள் அனுமதித்து வருகின்றன.

இந்த நிலையில் சென்னை, கிண்டி, அம்பத்தூர் உட்பட 17 தொழிற்பேட்டைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

25 சதவீத தொழிலாளர்களுடன் ஆலைகள் இயங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

முக கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் தொழிலாளர்களுக்கு பணிபுரிய அனுமதி இல்லை.

மேலும் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள் பணிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், தொழிலாளர்களுக்கு தினமும் தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல்வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிலாளர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் விடுப்பு அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமும் காலை மற்றும் மாலையில் தொழிற்சாலையை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்றும், தொழிலாளர்கள் பாதுகாப்பாக பணிபுரிவதை கண்காணிக்கவும், அரசின் வழிகாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

More Articles
Follows