தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்றக்கோரி அதிகாரிகளுக்கு கேயார் கோரிக்கை

தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்றக்கோரி அதிகாரிகளுக்கு கேயார் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திரைப்பட தயாரிப்பாளர்கள் தேர்தல் நடக்கும் இடத்தை மாற்ற வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு பட அதிபர் கேயார் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் விவரம் வருமாறு…

அனுப்புநர் :

கே.ஆர்
முன்னாள் தலைவர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்
நிறுவனர் மற்றும் அறங்காவலர்
தயாரிப்பாளர்கள் சங்க அறக்கட்டளை

பெறுநர்:

தேர்தல் அதிகாரிகள்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்,
பிலிம் சேம்பர் வளாகம்
605, அண்ணாசாலை
சென்னை -600006.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2023 – 2026 ம் ஆண்டுக்கான நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஏப்ரல் 30 ம் தேதி அடையாறில் உள்ள அன்னை சத்யா (ஸ்டுடியோ) கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அங்கு போதுமான இடவசதி இல்லை. கடந்த முறையும் அங்குதான் தேர்தல் நடைபெற்றது. வாக்களிக்க வந்தவர்களின் வாகனங்களை கூட அங்கு நிறுத்த முடியவில்லை.

எல்லோரும் நெருக்கியடித்து நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதில் “சின்ன தம்பி” உட்பட பல வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே பி பிலிம்ஸ் பாலு, உடல்நிலை பாதிக்கப்பட்டு மறுநாளே மருத்துவமனையில் அட்மிட் ஆகி கொரோனா தொற்று என கண்டறியப்பட்டு உயிரையே இழந்து விட்டார் என்பது வேதனையான உண்மை.

இப்போதும் அதே போல கொரோனா பரவும் காலம் ஆரம்பித்திருக்கிறது. அதைவிட கொடுமையான வெயில் காலமாக இருக்கிறது. இந்த முறை 1406 தயாரிப்பாளர்கள் வாக்காளர்களாக இருக்கின்றனர்.

குறைந்தது 1200 பேர் தேர்தலில் வாக்களிக்க வருவார்கள். அத்தனை பேரும் கார்களில் வந்து இறங்குவதற்கும், நிறுத்துவதற்குமான இட வசதி அங்கு இல்லை. அத்துடன் பிரபல நடிகர்களும் இயக்குனர்களும் வாக்களிக்க வரும்போது அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு ஏற்ற சூழலும் அங்கு இல்லை. ஒரே நேரத்தில் ஏராளமான வாகனங்கள் வருவதால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அதே அடையாறு பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான எம்ஜிஆர் திரைப்பட கல்லூரியில் போதுமான இட வசதி இருக்கிறது. எவ்வளவு கார்களை வேண்டுமானாலும் நிறுத்திக் கொள்ளலாம். சினிமாவுக்கு தொடர்புடைய ஒரு இடம் என்பதால் தொடர்ந்து எல்லாத் தேர்தல்களையும் அங்கேயே நடத்திக் கொள்ளலாம்.

தமிழக அரசும் திரைப்படத்துறைக்கு ஆதரவாக இருப்பதால் அனுமதி பெறுவதும் கஷ்டமாக இருக்காது.

தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் இருக்கும் நிலையில், தேர்தல் அதிகாரிகள் எல்லா சூழலையும் கவனத்தில் கொண்டு தேர்தல் நடத்தும் இடத்தை திரைப்பட கல்லூரி வளாகத்திற்கு மாற்றுவதே பொருத்தமானதாக இருக்கும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வரும் வாக்காளர்களில் 45 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் 70 வயதை கடந்தவர்கள் என்பதையும், ஏராளமான பெண்களும் வாக்களிக்க வருவார்கள் என்பதையும் தேர்தலை நடத்தும் அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

நான் ஏற்கனவே இந்த விஷயத்தை சங்க நிர்வாகத்திடம் தெரிவித்தும் அவர்கள் அதை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

ஒவ்வொரு தயாரிப்பாளரும் தனிநபர் அல்ல. அவரைச் சுற்றி 100 குடும்பங்கள் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய முடியாத நிலையில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பேற்பது.?

இப்படிக்கு,

(கே.ஆர்.)
உறுப்பினர் எண் : 0006

நாள்: 15.04.2023
சென்னை

Keyar request the authorities to change the venue of the Producers election

மரண மாஸ் அப்டேட் : விஜய் சேதுபதியின் 50 வது படம் குறித்த தகவல் இதோ!

மரண மாஸ் அப்டேட் : விஜய் சேதுபதியின் 50 வது படம் குறித்த தகவல் இதோ!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘குரங்கு பொம்மை’ படத்தின் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனுடன் விஜய் சேதுபதி புதிய திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இப்படத்திற்கு ‘மகாராஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது விஜய் சேதுபதியின் 50 வது படமாக உருவாக உள்ளது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

பழிவாங்கும் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தில், இரண்டு தோற்றத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

85 நாட்களில் படத்தை முடிக்க திட்டமிட்டு, இதுவரை 50 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம் என படக்குழு தெரிவித்துள்ளது.

Exciting updates on Vijay Sethupathi’s 50th movie is here!

மாதவனுக்கு விருந்து வைத்து அசத்திய இறுதிச்சுற்று இயக்குனர்

மாதவனுக்கு விருந்து வைத்து அசத்திய இறுதிச்சுற்று இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இறுதிச்சுற்று மற்றும் சூரரை போற்று பட இயக்குனர் சுதா கொங்காரா தனது சென்னை இல்லத்தில் மாதவனுக்கு ஒரு சிறப்பு மதிய உணவை வழங்கினார்.

மேலும் அவர் அதைப் பற்றிய படங்களை தன்னுடைய சமூக வலைத்தள பக்கமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

“வேங்கை அன்னம், வடியாலு, பொடி, சாம்பார், வத்த கொழம்பு, தயிர் சாதம், பெண்டாளம் பச்சடி என செய்த உணவுகளை பட்டியலிட்டார். மேலும் மாதவனுடன் இரண்டு தசாப்த கால நட்பு தொடர்ந்து வருவதாகவும் பதிவிட்டுள்ளார்.

Sudha Kongara and Madhavan celebrate a milestone with special mouth watering lunch

லோகேஷ் கனகராஜ்க்கு முன்பாக ரஜினியை இயக்கும் பிரபல இயக்குனர்

லோகேஷ் கனகராஜ்க்கு முன்பாக ரஜினியை இயக்கும் பிரபல இயக்குனர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் அல்லது செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் புதிய படத்திற்காக ரஜினியும் லோகேஷ் கனகராஜும் இணையவுள்ளதாக சொல்ல படுகிறது.

இதனிடையே தற்போது பிரபல டோலிவுட் இயக்குனர் கே.எஸ் ரவீந்திரா உடன் ரஜினி பேச்சுவார்த்தை நடத்தியதாக மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திட்டம் லோகேஷ் படத்திற்கு முன்பே தொடங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன.

ரவீந்திரா தெலுங்கில் ரவி தேஜாவின் ‘டான் சீனு’ மற்றும் பவன் கல்யாணின் ‘சர்தார் கப்பர் சிங்’, ஜூனியர் என்டிஆரின் ‘ஜெய் லவ குசா’ மற்றும் சிரஞ்சீவி நடித்த ‘வால்டர் வீரையா’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

Superstar Rajinikanth chooses this director before Lokesh Kanagaraj ?

‘அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்’ போஸ்டரை சாதி கொடுமையால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தினர் வெளியிட்டனர்.

‘அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்’ போஸ்டரை சாதி கொடுமையால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட குடும்பத்தினர் வெளியிட்டனர்.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

புதுமுகங்கள் நடிப்பில் ‘அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார்’ எனும் படம் தயாராகி வருகிறது,

இப்படத்தை மெரினா புரட்சி, முத்துநகர் படுகொலை போன்ற படங்களை தயாரித்த நாச்சியாள் பிலிம்ஸ் சார்பில் நாச்சியாள் சுகந்தி தயாரிக்கிறார்,

மெரினா புரட்சி முத்து நகர் படுகொலை போன்ற படங்களை இயக்கிய M.S. ராஜ் இப்படத்தை இயக்குகிறார்..

இப்படத்தைப் பற்றி இயக்குனர் எம் எஸ் ராஜ் கூறுகையில்…

அரசியல் சாசனம் அமல்படுத்தப்பட்டு 75 ஆம் ஆண்டு நெருங்கும் சூழலிலும் அட்டவணை சாதி மக்கள் சந்திக்கும் வன்கொடுமைகளையும் அரசாங்கங்களின் தோல்விகளையும் துணிச்சலுடன் அலசும் படமாக இந்த அம்பேத்கர் என்னுடன் பேசுகிறார் படம் இருக்கும்.

இதில் முழுக்க முழுக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு அன்பு சரத் இசை ராம் பிரபு படத்தொகுப்பு ஜாவேத் அஷ்ரப், சப்தம் ஜே எப் சேவியர் பாடல்கள் பாரதிக்கனல் , இணை தயாரிப்பு சாவண்ணா மகேந்திரன் மற்றும் ஆதிமூலப் பெருமாள்.

இப்படம் தஞ்சாவூர், ஏர்வாடி, மதுரை மற்றும் மும்பையில் படமாக்க பட்டுள்ளது..

நான் இதற்கு முன்பு இயக்கிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் பின்னணி அரசியலை சொல்லும் மெரினா புரட்சி என்ற ஆவணப்படம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் நடத்திய படுகொலையின் பின்னணியை சொல்லும் முத்துநகர் படுகொலை ஆவண படத்திற்க்கும் நீங்கள் பேராதரவு தந்தீர்கள்,
மெரினா புரட்சி நார்வே திரைப்பட விழா விருது, மற்றும் கொரிய தமிழ்ச் சங்க விருதுகளையும் வென்றது.

முத்துநகர் படுகொலை டெல்லி தாதா சாகிப் திரைப்பட விழா விருது, வேர்ல்ட் கார்னிவல் சிங்கப்பூர் விருது, நார்வே தமிழ் திரைப்பட விழா விருது மற்றும் பங்காளதேஸ் சினிமா கிங் சர்வதேச திரைப்பட விழா விருது என நான்கு விருதுகளை வென்றது உங்களுக்கு தெரியும்..

இந்த படத்தின் தலைப்பை
வேங்கை வயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வேங்கைவயல் பட்டியல் இனத்து மக்கள் மற்றும் ஜாதி சான்றிதழ் கிடைக்காததால் பத்தாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போராடி வரும் திருப்பத்தூர் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சாதிய வன்கொடுமையால் தற்கொலைக்கு தள்ளப்பட்ட உடன்குடியை சேர்ந்த தூய்மை பணியாளர் திரு சுடலை மாடனின் குடும்பத்தினர் இன்று வெளியிட்டனர்.

Victim released Ambedkar Ennudan Pesugiraar movie poster

ஆடுகளம் – அல்லு அர்ஜுன்.. வடசென்னை – மகேஷ்பாபு.. அசுரன் – ஜூனியர் என்டிஆர்.; வெற்றிமாறன் சுவாரசிய பதில்கள்

ஆடுகளம் – அல்லு அர்ஜுன்.. வடசென்னை – மகேஷ்பாபு.. அசுரன் – ஜூனியர் என்டிஆர்.; வெற்றிமாறன் சுவாரசிய பதில்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இளையராஜா இசையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ கடந்த மார்ச் 31ல் தமிழில் வெளியானது.

இதன் பின்னர் ‘விடுதலை பாகம் 1’ பட தெலுங்கு வெர்ஷன் சிறப்புக் காட்சி அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்பட்டது.

அப்போது வெற்றிமாறனிடம் கேள்விகள் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கும்போது.., “ஆடுகளம் படத்திற்குப் பிறகு, அல்லு அர்ஜுனைச் சந்தித்தேன்.

அவர் தமிழில் நடிக்க ஆர்வமாக இருந்தார். என்னிடம் கதை ஏதும் வைத்திருக்கிறீர்களா என்று கேட்டார்.

அப்போது ‘வடசென்னை’ படத்தில், அவருக்கான கதாபாத்திரம் குறித்து சொன்னேன். ஆனால், அது சரியாக அமையவில்லை.

அதன்பின்னர் மகேஷ் பாபுவையும் சந்தித்தேன். கதை சொன்னேன். ஆனால் அதுவும் ஒத்துவரவில்லை.

அசுரன் படத்திற்குப் பிறகு ஜூனியர் என்டிஆரைச் சந்தித்தேன். விரைவில் நிச்சயம் ஒரு படம் சேர்ந்து செய்வோம்.

நான் ஸ்டார் வேல்யூக்காகவோ படம் செய்ய மாட்டேன். கதைக்காகத்தான் படம்.

என் கதைக்கு ஜூனியர் என்.டி.ஆர். போன்ற ஸ்டார் தேவைப்படுகிறது. ஜூனியர் என்.டி.ஆருடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தார்.

Vetrimaaran talks about working with telugu actors

More Articles
Follows