கீர்த்தி சுரேஷின் அம்மாவையும் கடத்த முயற்சித்த பாவனா கார் டிரைவர்

கீர்த்தி சுரேஷின் அம்மாவையும் கடத்த முயற்சித்த பாவனா கார் டிரைவர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

keerthy suresh and menaka sureshபிரபல நடிகையான பாவனா, ஒரு சில தினங்களுக்கு முன் அவரது கார் டிரைவரால் கடத்தப்பட்டு, பாலியல் தொல்லை செய்து, பின்னர் விடுவிக்கப்பட்டதையும் நாம் பார்த்தோம்.

இதுதொடர்பாக பாவனாவின் கார் டிரைவர் மற்றும் அவரது இரு நண்பர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பாவனாவுக்கு ஏற்பட்ட இச்செயலை கண்டித்து மலையாள திரையுலகினர் மற்றும் தமிழ் திரையுலகினரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் அப்பா ஒரு தொடர்பான ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது…

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே டிரைவர் தன் மனைவி மேனகா சுரேஷையும் கடத்த முயற்சி செய்தாராம்.

ஆனால் போலீசில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்.

அட்லி இயக்கும் விஜய் 61 படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள்

அட்லி இயக்கும் விஜய் 61 படத்தின் லேட்டஸ்ட் தகவல்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

actor vijayதெறி, பைரவா படங்களையடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தற்காலிமாக விஜய் 61 என்று பெயரிட்டுள்ளனர்.

இப்படத்தில் ஜோதிகாவுக்கு பதிலாக நித்யா மேனன் நடித்து வருகிறார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

அங்கு விஜய், நித்யா காட்சிகளை படமாக்கி வருகிறாராம் அட்லி.

பிப்ரவரி இறுதிவரை இந்த சூட்டிங் அங்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

டிடி-யா இது அம்மாடி…? ஆச்சரியத்தில் டைரக்டர் தனுஷ்

டிடி-யா இது அம்மாடி…? ஆச்சரியத்தில் டைரக்டர் தனுஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dhanush and Dhivya Dharshiniமுன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், முதன்முறையாக பவர் பாண்டி என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, நதியா, சாயாசிங், டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வித்யூலேகா ராமன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார்.

இப்படம் 2017 ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் டிடி (என்ற) திவ்யதர்ஷினியை புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது…

Dhanush ‏@dhanushkraja
Filmed @DhivyaDharshini cameo in #powerpaandi. She performed with so much ease and confidence. Very happy and surprised. Superb DD.

அஜித்துக்கு பெருமை சேர்க்கும் ரசிகர்கள்

அஜித்துக்கு பெருமை சேர்க்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

thala ajithநடிகர்களை உண்மையாக நேசிக்கும் ரசிகர்கள், அவர்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவ்வப்போது ரத்ததானம், அன்னதானம், கல்வி உதவிக் தொகை ஆகியவற்றை செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நம் நாட்டின் வளத்தை அழிக்கும், சீமைக்கருவேல மரங்களை பல பகுதிகளில் இளைஞர்களை வேரோடு வெட்டி சாய்த்து வருகின்றனர்.

இதை தற்போது அஜித் ரசிகர்களும் செய்து வருகின்றனர்.

மதுரையில் உள்ள வேலம்மாள் கல்லூரி அருகில் உள்ள பனையூர் என்ற பகுதியில் இப்பணியை அஜித் ரசிகர்கள் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

ரஜினி-அஜித்தை தொடர்ந்து விஜய்சேதுபதி-லாரன்ஸ்

ரஜினி-அஜித்தை தொடர்ந்து விஜய்சேதுபதி-லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanth Ajith Raghava Lawrence Vijaysethupathiரஜினிகாந்த் நடித்த மன்னன், சந்திரமுகி, அஜித் நடித்த அசல் உள்ளிட்ட படங்களை சிவாஜி புரொடக்ஷன்ஸ் சார்பாக பிரபு தயாரித்திருந்தார்.

இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களை தயாரிக்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படத்தை தயாரிக்க முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விஜய்சேதுபதி நடிக்க, அப்படத்தை ‘சேதுபதி’ இயக்குனர் அருண்குமார் இயக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம்.

அழகுக்கலை நிபுணர்கள் நினைத்தால் உலகமே அழகாகும் – சினேகா பேச்சு

அழகுக்கலை நிபுணர்கள் நினைத்தால் உலகமே அழகாகும் – சினேகா பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actress sneha “பெண்கள் இன்று வெளியே சென்று சாதிப்பது சவாலான ஒன்று தான்!” – வி கேர் பட்டமளிப்பு விழாவில் “புன்னகை இளவரசி” நடிகை சினேகா பேச்சு !

அழகுக்கலையிலும், அதுசம்பந்தப்பட்ட கற்பித்தலிலும் இன்று முன்னோடியாய் நிற்பது வி கேர் நிறுவனம்.

வி கேர் நிறுவனத்தின் “வி கேர்ஸ் குளோபல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்ஸ்” நடத்திய பட்டமளிப்பு விழாவில் நடிகை சினேகாவும், வி கேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். E. கரோலின் பிரபா ரெட்டியுடன் கலந்துகொண்டார்.

100க்கும் மேற்பட்ட பெண்கள் அழகுக்கலை சம்பந்தப்பட்ட படிப்பில் தேர்ச்சிபெற்றிருந்தனர். அவர்களுக்கு விழாவில் சான்றிதழும், பட்டமளிப்பும் நடைபெற்றது.

“வி கேர்ஸ் குளோபல் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் ஹோம் சயின்ஸ்” பட்டமளிப்பு விழாவில் புன்னகை இளவரசி நடிகை சினேகா பேசியது :-

இங்கே இருக்கும் அனைத்து அழகுக் கலை நிபுணர்களுக்கும் வணக்கம்.

“வி கேர் கரோலின் பிரபா அவர்களை எனக்கு 7 வருடங்களாகத் தெரியும். அவருடைய உழைப்பு மிகப்பெரியது. வி கேர் நிறுவனம் இன்று மிகப்பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது.

இந்நிறுவனத்தின் 10 வது வருட பட்டமளிப்பு விழாவில் பங்குபெறுவதில் மிக்க மகிழ்ச்சி. எல்லாத் துறைகளும் பெண்களுக்கு சவாலான துறை தான். எந்த துறைக்குச் சென்றாலும், பெண்கள் சவால்களை சமாளித்துத் தான் முன்னேற முடியும்.

இங்கே இருக்கும் பெண்கள் அனைவருக்கும் வி கேர் பிரபா அவர்கள் மிகப்பெரிய எடுத்துக்காட்டு ஆவார். அழகுக் கலை நிபுணர்கள் மருத்துவர்களுக்கு நிகரானவர்கள்.

அழகுக் கலை நிபுணர்கள் கையில் அதிக திறமை உள்ளது. அவர்கள் நினைத்தால் இந்த உலகத்தையே அழகாக மாற்ற முடியும்.

வி கேர் பிரபா மேடம் உங்களுக்கு கற்றுக்கொடுத்த அனைத்து விஷயங்களையும் நீங்கள் சரியான வழியில் பயன்படுத்த வேண்டும். சினிமா நடிகைகள் மட்டும் தான் அழகாக இருக்க முடியும் என்ற காலம் மாறிவிட்டது.

இப்போது நீங்கள் நினைத்தால் உலகத்தில் உள்ள அனைவரும் அழகாகலாம்.

நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களை சரியான வழியில் பயன்படுத்தி உதவிட வேண்டும்” என்றார் நடிகை சினேகா.

வி கேர் நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர். E. கரோலின் பிரபா ரெட்டி
இவ்விழாவில் பேசியதாவது ;

“வி கேர் நிறுவனம் துவங்கப்பட்டு 10 வருடம் ஆகிவிட்டது. இது வரை 2000 ஆண்டில் இருந்து நாங்கள் 15,000 மாணவர்களை உருவாக்கியுள்ளோம்.

வி கேர் நிறுவனம் இந்த அளவிற்கு பிரபலமாக என்னுடைய தங்கை டயானாவும் மிக முக்கியமான காரணம்.

நான் முதலில் ஆசிரியராகத் தான் பணியாற்றி வந்தேன். மாலை நான்கு மணிக்கெல்லாம் வீட்டிற்கு வருவது சுத்தமாக பிடிக்கவில்லை.

அதனால் நான் அப்போது அழகுக் கலை கோர்ஸ் படிக்கலாம் என முடிவு செய்தேன். வெளிநாட்டுக்குச் சென்று ஒரு பெண் படிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல.

அதை எல்லாம் தாண்டி எங்கள் வீட்டில் வெளிநாட்டுக்கு சென்று படிக்க அனுமதி தந்தார்கள். மீண்டும் இங்கே வந்த பிறகு இங்கே உள்ள நிபுணர்களிடம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டு இந்த வி கேர் நிறுவனத்தைத் துவங்கினேன்.

வி கேர் நிறுவனம் இன்று மிகப்பெரிய நிறுவனமாக உருவாகியுள்ளது. அன்று எங்களுக்கு இருந்தது போல் பிரச்சனைகள் இன்று உங்களுக்கு இல்லை.

இன்றைக்கு அழகுக் கலை பற்றி அனைவரிடமும் நல்ல புரிதல் உள்ளது. இங்கே மாணவிகளின் பெற்றோர்களும் வருகை தந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

சிலர் பெண்களுக்கு சரியாக படிப்பு வரவில்லை என்றால் அவர்களை அழகுக் கலை பற்றி படிக்க அனுப்பலாம் என்று சாதாரணமாக கூறுவார்கள். அது மிகவும் தவறானது. அழகுக் கலை என்பது இஞ்ஜினியரிங் , மருத்துவம் போன்ற தரம்வாய்ந்த ஒரு படிப்பாகும். அதை ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் தான் சரியாக கற்றுக்கொள்ள முடியும்.

வி கேரின் வெற்றிக்கு திறமையான பயிற்சி தருபவர்களும், ஆசிரியர்களும் தான் மிக முக்கிய காரணம்.

அவர்கள் கற்றுக்கொடுப்பதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். எங்களிடம் படித்த மாணவிகள் அனைவரும் பெரிய அளவில் சாதித்து வருகிறார்கள். அதைப் போல் இந்த வருடம் பட்டம் வாங்கும் நீங்களும் சாதிக்கவேண்டும்.

இங்கே நீங்கள் கற்றுக்கொண்டது கொஞ்சம் தான். மேலும் உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் கற்றுக்கொள்ள நிறைய உள்ளது என்பது தான் உண்மை. அனைவரும் வாழ்க்கையில் சாதிக்க என் வாழ்த்துக்கள் என்றார் வி கேர் கரோலின் பிரபா.

More Articles
Follows