தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விஷால் ஆகியோருக்கு தமிழகத்தை போன்று தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் உள்ளனர்.
எனவே இவரது படங்கள் தயாராகும்போது தெலுங்கு சினிமாவை குறி வைத்தே தயாரிக்கப்படுகின்றன.
நடிகர் கார்த்திக்கு தோழா படத்திற்கு பிறகு தெலுங்கில் நல்ல மார்கெட் உருவாகியுள்ளது.
தற்போது பாண்டிராஜ் இயக்கும் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
இதனையடுத்து “நீடி நாடி ஓகே கதா” படத்தை இயக்கிய வேணு உடுகுலா அவர்களின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் கார்த்தியை சந்தித்து வேணு ஒரு கதை சொன்னாராம். அவரும் ஓகே சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.
எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகவுள்ளது.