தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி பாடகி கனிகா கபூர் லண்டனில் இருந்து இந்தியா (லக்னோ) வந்தார்.
இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால் 2 வாரங்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியது.
ஆனால் கனிகா இந்த உத்தரவை பின்பற்றாமல் சில நிகழ்ச்சிகளிலும், விருந்துகளிலும் கலந்து கொண்டார்.
இதனையறிந்த அரசு பாடகி கனிகா கபூருக்கு 4 முறை ரத்த சோதனை செய்தனர்.
இதில் கொரோனா தொற்றை உறுதி செய்யும் விதத்தில் பாசிட்டிவ் என சோதனை முடிவுகள் வெளிவந்தது.
இதனிடையே 5-வது மற்றும் 6-வது சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை (நெகட்டிவ்) என்று சோதனை முடிவுகள் வந்துள்ளது.
தற்போது கனிகா கபூர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
Kanika Kapoor tests negative after 5th Covid 19 test