அப்பா ஜெயராமைப் போல கமல்ஹாசனுடன் இணைந்த காளிதாஸ்

அப்பா ஜெயராமைப் போல கமல்ஹாசனுடன் இணைந்த காளிதாஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kalidas jayaram kamalதமிழில் கமல்ஹாசன் நடித்த ‘தெனாலி’, ‘பஞ்ச தந்திரம்’, ‘உத்தம வில்லன்’ ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார் மலையாள நடிகர் ஜெயராம்.

இவர்கள் இருவரும் ஏற்கெனவே 1989ல் வெளியான ‘சாணக்யன்’ என்ற மலையாள படத்திலும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ஜெயராம் மகன் காளிதாசும் கமலுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் ‘விக்ரம்’ படத்தில் காளிதாஸ் நடிக்கிறாராம். கமலின் மகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை கமல்ஹாசனே தன் சொந்த பேனரில் தயாரிக்கிறார்.

இப்படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோரும் கமலுடன் நடிக்கின்றனர்.

இவர்களின் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறார் லோகேஷ்.

Kalidas Jayaram is part of Kamal’s next movie

ஐஸ்வர்யா ராஜேஷ் போடும் ‘திட்டம் இரண்டு’ என்ன.? ஜூலை 30ல் விடை காணலாம்

ஐஸ்வர்யா ராஜேஷ் போடும் ‘திட்டம் இரண்டு’ என்ன.? ஜூலை 30ல் விடை காணலாம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

“நாம் விடை காண முயலும் மர்மங்கள் பல உள்ளன” – ரே பிராட்பர்ன்.

காவல் ஆய்வாளர் ஆதிரா சென்னைக்கு மாற்றலாகி வந்த போது, மாநகரத்தில் தனக்காக என்ன காத்திருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.

கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் குழந்தைப் பருவ நண்பனுக்கான அவரது தேடல், எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய மர்ம புதிராக மாறுகிறது.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கோகுல் ஆனந்த், சுபாஷ் செல்வம், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்த ‘திட்டம் இரண்டு’ படம் *சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.*

சென்னைக்கு பணி மாற்றம், பேருந்து பயணத்தில் சக பயணியின் மீது காதல் என ஆதிராவின் வாழ்க்கை நன்றாக சென்றுகொண்டு இருக்கிறது.

ஆனால், குழந்தைப் பருவ நண்பன் சூர்யா காணாமல் போனதாக வரும் ஒரு தொலைபேசி அழைப்பு அனைத்தையும் தலைகீழாக மாற்றுகிறது.

சூர்யாவின் கார் விபத்தை விசாரிக்கும் ஆதிரா, இதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதாக உணர்கிறார்.

இந்த வழக்கை ஆதிரா எப்படி கையாள்கிறார், இதில் அவர் வெற்றிபெற்றாரா என்பதே மீதி கதை.

*விக்னேஷ் கார்த்திக், இயக்குநர்:*

சமூகத்தில் உள்ள சில நிகழ்வுகளை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இந்த படம் காட்டுகிறது. அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

இப்படத்தை மக்களிடம் கொண்டு செல்ல மிகவும் ஆர்வமாக இருக்கிறேன். சோனி லிவ்வில் திட்டம் இரண்டு வெளியவதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி.

*ஐஸ்வர்யா ராஜேஷ், கதாநாயகி, திட்டம் இரண்டு:*

‘திட்டம் இரண்டு’ படத்தில் எனது கதாபாத்திரம் பல அடுக்குகளைக் கொண்டது. இந்தக் கதையின் சாராம்சம் என்னை வெகுவாக கவர்ந்தது.

நண்பனின் மறைவில் உள்ள ரகசியத்தை கண்டுபிடிக்க ஒருவர் எந்த எல்லைக்கு செல்வார் என்பதை இந்தப் படம் கூறும் விதம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது.

படத்தில் உள்ள திருப்பங்கள் பார்ப்பவர்களை ஆச்சர்யப்படுத்தும். சோனி லிவ் ஓடிடியில் இதுவே எனது முதல் படம். திட்டம் இரண்டின் வெளியீட்டுக்காக நான் ஆவலாக உள்ளேன்.

ஆஷிஷ் கோல்வால்கர், தலைவர், உள்ளடக்கம், சோனி என்டெர்டெயின்மென்ட் டெல்விஷன் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம்:*

திட்டம் இரண்டின் மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழ் ரசிகர்களை சோனி லிவ் மேலும் கவரும் என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த படத்தில் உள்ள விறுவிறுப்பு, மர்மம் மற்றும் திருப்பங்கள் பார்ப்பவர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்துவிடும். திட்டம் இரண்டு சோனி லிவ்வில் வெளியாவதில் பெருமை கொள்கிறோம்.

Aishwarya Rajesh in Thittam Irandu will release on July 30

ThittamIrandu

தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு செய்தவர்கள் மத்தியில் இலவச தடுப்பூசி முகாம் நடத்தி இலவசங்கள் வழங்கிய சிரிஷ்

தடுப்பூசி போட்டு விழிப்புணர்வு செய்தவர்கள் மத்தியில் இலவச தடுப்பூசி முகாம் நடத்தி இலவசங்கள் வழங்கிய சிரிஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மெட்ரோ’ படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் சிரிஷ்.

இவர் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு பல உதவிகள் புரிந்து வருகிறார்.

தற்போது கொரோனா தொற்று காலத்தில் பல பிரபலங்கள் “தடுப்பூசி போட்டுக் கொண்டோம்” என போட்டோ போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

ஆனால் இவரோ சென்னையில் இலவச தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்து வருகிறார்.

இதுகுறித்து அவர் பேசும்போது…

“பல்வேறு அமைப்புகளால் தடுப்பூசி முகாம்களை ஆரம்பித்து வைப்பதற்கு நான் அழைக்கப்பட்டேன்.

தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைக்கச் செல்வதற்குப் பதிலாக, மக்களை ஊக்குவிப்பதற்காக சொந்தமாக தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்தேன்.

நாங்கள் தடுப்பூசிகளைப் பெற்று பத்திரிகையாளர்களுக்கும் இலவச முகாமையும் ஏற்பாடு செய்தோம்.

மேலும் பொதுமக்களுக்காக நாங்கள் ஏற்பாடு செய்திருந்த முகாமுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு அரிசி, எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய மளிகைப் பொருட்களையும் கொடுத்தோம்”

இவ்வாறு சிரிஷ் தெரிவித்தார்.

கடந்த வாரம், ஜூலை 24ல் FEFSI (தென்னிந்தியாவின் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு) தொழிலாளர்களுக்கும தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actor Sirish arranged free vaccine camp for public

E7ECchKXEA0L256

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி

தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் சூப்பர் ஸ்டாரின் பேத்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது நடிகர் ராஜ்குமார் தான். இவர் ரஜினிக்கு நெருங்கிய நண்பர் ஆவார்.

சந்தன கடத்தல் வீரப்பன் இவரை கடத்தி காட்டிற்கு அடைத்து வைத்தது தங்களுக்கு நினைவிருக்கலாம். ராஜ்குமார் மற்றும் வீரப்பன் இருவருமே தற்போது உயிருடன் இல்லை.

ராஜ்குமாரின் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் ஆகியோர் கன்னட திரையுலகில் முன்னணி நடிகர்களாக உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது ராஜ்குமாரின் மகள் வழி பேத்தியான தன்யா ராம்குமார் என்பவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக இருக்கிறார்.

அவர் நடிக்கவுள்ள படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சில கன்னட திரைப்படங்களில் தன்யா நடித்துள்ளார்.

Rajkumar’s granddaughter to debut in Kollywood

கதைகளோடு காத்திருக்கும் இயக்குனரா நீங்கள்.? கரம் கொடுக்க வருகிறார் இளம் தயாரிப்பாளர் ரீதா

கதைகளோடு காத்திருக்கும் இயக்குனரா நீங்கள்.? கரம் கொடுக்க வருகிறார் இளம் தயாரிப்பாளர் ரீதா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒரு தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ரீதா ராமுடூ மலேசியா சினிமாவில் புகழ்பெற்றவர்.

இப்போது அவர் தனித்துவமான திரைப்படங்களைத் தயாரிக்க தமிழ் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார் ரீதா.

Mithran Global Sdn Bhd – ன் நிறுவனர் மற்றும் Amma Production Sdn Bhd – ன் இயக்குனர் ஆவார்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களை மலேசியாவில் வெளியிட்டு வந்த ரீதா.
தற்பொழுது படங்கள் தயாரிப்பதில் முழுக்கவனத்தை செலுத்தியுள்ளார்.

சமீபத்தில் அவர் தயாரித்த திரைப்படம் “அனல் விசால்” மலேசிய பிரபல திரைப்பட சேனலான ஆஸ்ட்ரோ வானவிலில் ஒளிபரப்பப்பட்டது. அனைவராலும் பாராட்டப்பட்டது.

தமிழ் சினிமா தயாரிப்பதில் ஆர்வம்கொண்டவர் நல்ல கதையம்சம் கொண்ட கதைகளை தேர்ந்தெடுத்து தயாரித்துவருகிறார். தற்பொழுது நேரடி தமிழ் படங்கள் இரண்டு தயாரிப்பில் உள்ளது.

2021 ஆம் ஆண்டில், ரீத்தா ஒரு சமையல் நிகழ்ச்சியை “பொங்குறோம் திங்குறோம்” என்று தயாரித்துள்ளார், முழு நிகழ்ச்சியும் இந்தியாவில் படமாக்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் வேடிக்கை, சிரிப்பு மற்றும் நகைச்சுவை ஆகியவற்றின் பல சாரங்கள் உள்ளன.

ரோபோ ஷங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். புகழ், ராமர், போன்ற பிரபல கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

முன்னணி நடிகர்களோடு இணைந்து தமிழ் சினிமாவில் தரமான தயாரிப்பாளராக வரவேண்டும் என்பதே தனது லட்சியம் என்று கூறுகிறார்

எனவே சினிமா மற்றும் ஊடகங்களில் தங்கள் கனவுகளை அடைய விடாமுயற்சியுள்ள திறமையான மற்றும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அவர் தூணாகப் போகிறார் என்பதில் சந்தேகமில்லை …!

A producer and film distributor in Malaysia, Reetha Ramudoo is now set to enter Kollywood as producer.

Founder- director of Mithran Global Sdn Bhd, and director of Amma Production Sdn Bhd, she has successfully distributed Tamil and Telugu movies such as Naa Peru Surya Naa Illu India, Bharat Ane Nenu, Mahanati, Vakeel Saab and others. Her Malaysian Telemovie “Anal Vizhal” was telecast on a leading Malaysian channel.

Reetha has recently stepped into Indian TV with an entertaining India -based fun cooking show, “Pongurom Thingurom” hosted by Robo Shankar.

The young entrepreneur, who values quality content, with good stories, is now prepping towards producing two movies in Kollywood, aiming to work with leading names of the industry. Details are touted to be announced soon.

500 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகை ஜெயந்தி காலமானார்

500 படங்களுக்கு மேல் நடித்த பிரபல நடிகை ஜெயந்தி காலமானார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த நடிகர் எம்.ஜி.ஆர் உடன் படகோட்டி, முகராசி மற்றும் ஜெமினி கணேசனுடன் புன்னகை, கண்ணா நலமா, இருகோடுகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை ஜெயந்தி.

மேலும் ‘எதிர்நீச்சல்’, ‘பாமா விஜயம்’, ‘வெள்ளி விழா’ உட்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் இவர்.

இவர் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தனது சிறந்த நடிப்புக்காக 7 முறைகள் கர்நாடக அரசு விருதுகளை பெற்றிருக்கிறார் இவர்.

இவரது மகனுடன் பெங்களூரில் வசித்து வந்துள்ளார் ஜெயந்தி.

கடந்த சில ஆண்டுகளாகவே ஆஸ்துமாவால் அவதிப்பட்டு வந்துள்ளார் ஜெயந்தி.

பல மூத்த கலைஞர்கள் சினிமாவில் நடித்து வந்தாலும் இவர் முதுமை காலங்களில் சினிமாவை விட்டு விலகியே இருந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் ஜெயந்தி மரணமடைந்துள்ளார்.

திரையுலகினர் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Veteran Actress Jayanthi, (76-years) popularly known as ‘Abhinaya Sharade’, passed away due to age-related ailments at Bengaluru. She was known for her notable contribution to the Kannada movies and acted in over 500 movies in Kannada, Telugu, Tamil, Malayalam and Hindi.

Veteran actress Jayanthi passed away

202107261009420776_veteran-actress-jayanthi-passes-away_SECVPF

More Articles
Follows