ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ” படத்திற்காக தொடர்ந்துமூன்று நாட்கள் படப்பிடிப்பு

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ” படத்திற்காக தொடர்ந்துமூன்று நாட்கள் படப்பிடிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jithan Rameshஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ” படத்திற்காக

தொடர்ந்து மூன்று நாட்கள் படப்பிடிப்பு

கோவாவில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாகி உள்ளது

ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ” மிரட்சி ”

Take Ok Creations என்ற பட நிறுவனம் சார்பில் பி.ராஜன் தயாரிக்கும் படம் ” மிரட்சி ”

ஜித்தன் படத்தின் மூலம் அனைவரது கவனத்தை ஈர்த்த நடிகர் ஜித்தன் ரமேஷ் இந்த படத்தின் மூலம் சவாலான வில்லன் கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். பாலிவுட் நடிகை ஷ்ரத்தா தாஸ் மற்றும் கொல்கத்தாவை சேர்ந்த இனாசஹா இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மற்றும் அஜெய்கோஸ், சாய், சனா, நிக்கிதா அனில்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ரவி.V

எடிட்டர் – N.ஹரி

இசை – ஆனந்த்

பாடல்கள், வசனம் – N.ரமேஷ்

தயாரிப்பு – P.ராஜன்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – M.V.கிருஷ்ணா

படம் பற்றி இயக்குனர் M.V.கிருஷ்ணா கூறியதாவது..

முழுக்க முழுக்க திரில்லர் கதையாக உருவாக்கி இருக்கிறோம். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோவாவில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு திரைக்கதை உருவாக்கப் பட்டுள்ளது. ஜித்தன் ரமேஷ் இதுவரை நடித்திராத ஒரு நடிப்பை இந்த படத்தில் பார்க்கலாம்.

படத்தில் உள்ள ஒட்டுமொத்த நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரையும் வைத்து தொடர்ந்து 3 நாட்கள் ஒருமணிநேரம் இடைவேளை விட்டு படப்பிடிப்பை நடத்தி இந்த படத்திற்கான கிளைமாக்ஸ் காட்சிகளை படம்பிடித்தோம். தொடர்ந்து 3 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியது மிகவும் சவாலானதாக இருந்தது. மிகவும் சிரமப்பட்டு எடுத்த அந்தக்காட்சிகளை திரையில் பார்க்கும் போது மிக பிரமிப்பாக இருக்கும்.

இந்த அதி தீவிர திரில்லர் கதையை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது.இந்த மிரட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்து மிரளவைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க கோவா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது, விரைவில் படம் வெளியாக உள்ளது என்கிறார் இயக்குனர் M.V.கிருஷ்ணா.

கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜீவா !

கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தாக அவதாரமெடுக்கும் நடிகர் ஜீவா !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jiiva in 83கிரிக்கெட் இந்திய தேசத்தின் ஆத்மா. ஜாதி, மத பேதம் கடந்து, மொழி கடந்து, இந்தியர் அனைவரையும் உணர்வால் ஒன்றிணைப்பது கிரிக்கெட். கிரிக்கெட் இந்தியாவில் அனைவரும் போகிக்கும் தனி மதம். கிரிக்கெட் வீரர்கள் இங்கே கடவுள். கிரிக்கெட்டை விரும்பாத ஒரு ஜீவனைக்கூட நீங்கள் இந்தியாவில் காணமுடியாது. இங்கே கிரிக்கெட் வீரர்கள் இளைஞர்கள் பலரின் ஆதர்ஷம். கிரிக்கெட்டை இளைஞர்களிடம் சிறுவர்களிடம் கொண்டு போவதில் பல முன்னணி வீரர்கள் இந்தியாவின் அடையாளமாய் இருக்கிறார்கள். அப்படி தமிழகத்திற்கு ஒரு அடையாளமாய் இங்கே கிரிக்கெட்டை பரப்பிய ஆளுமைகளுல் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் மிக முக்கியமானவர். தனது தனித்த திறமையாலும், ஸ்டைலான ஆட்டத்தாலும் பலரையும் கவர்ந்தவர். 1983 உலககோப்பை வாங்கிய அணியில் பெரும் பங்கு வகித்தவர். இப்போது இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் கபில்தேவ் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து, உலககோப்பை வென்ற கதையை சொல்லும் “83” படத்தில் ஶ்ரீகாந்தாக அவதாரமெடுத்துள்ளார் நடிகர் ஜீவா.

நடிகர் ஜீவா பற்றி இயக்குநர் கபீர்கான் கூறியதாவது…

முதலில் இந்தப்படத்திற்காக கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தை பற்றி யோசித்தபோது அவரது துறுதுறுப்பும், சுறுசுறுப்பும் தான் மனதின் முன் வந்து நின்றது. அவர் தனி ஒரு பேட்டிங் ஸ்டைல் கொண்டிருந்தாலும், அவரது விளையாட்டையும் தாண்டி அவரது சுறுசுறுப்பான குணம் அவரை எல்லோரிடத்திலும் பிரபலமாக வைத்திருந்தது. 1983 உலககோப்பையை மையமாக வைத்து படத்தை உருவாக்க ஆரம்பித்த போது அணியில் பங்கு பெற்ற ஒவ்வொரு கிரிக்கெட் வீரரையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனமாக இருந்தோம். கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் கேரக்டரை செய்வதற்கு அவரைப்போலவே சுறுசுறுப்பும் திறமையும் நிறைந்த ஒருவரை தேடினோம். ஜீவாவின் சில படங்களை பார்த்தபோது இவர்தான் பொருத்தமானவர் என மொத்தக்குழுவும் சேர்ந்து முடிவு செய்தோம். அனைவரையும் கவர்ந்தவராக ஜீவா இருந்தார். மேலும் அவர் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பது படத்திற்கு இன்னும் பெரிய பலமாக இருந்தது. என்ன தான் அவர் கிரிக்கெட் வீரராக இருந்தாலும் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் அவர்களது பேட்டிங் ஸ்டைலை தன்னுள் கொண்டு வர, ஜீவா நிறைய பயிற்சி மேற்கொண்டார். படத்தில் அவரை ஜீவா தத்ரூபமாக பிரதிபலித்துள்ளார். படத்தை பார்க்கும் போது ரசிகர்களை கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்துவார் என்றார்.

தனது கதாப்பாத்திரம் குறித்து நடிகர் ஜீவா கூறியதாவது…

கிரிக்கெட் சிறுவயது முதலே எனக்கு மிகவும் விருப்பமான விளையாட்டு. 1983 படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் கதாப்பாத்திரம் என்னை தேடி வந்த போது நான் மகிழ்ச்சியில் வாயடைத்து போனேன். வாழ்வில் இரண்டு லட்சியங்கள் ஒருசேர நிறைவேறாது என்பது என் வாழ்வில் பொய்துவிட்டது. நடிகனாக ஆன பிறகு எனக்கு மிகப்பிடித்த கிரிகெட் வீரரை திரையில் பிரதிபலிப்பதை விட பெரிய மகிழ்ச்சி வேறென்ன இருந்து விட முடியும். கிரிக்கெட்டை தமிழக வீதிகள் தோறும் அறிமுகப்படுத்திய கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்த் அவர்களின் பாத்திரத்தை ஏற்று நடிப்பது என் வாழ்வின் வரம். என்னை இந்தகதாப்பாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்ததற்கு இயக்குநர் கபீர்கான் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் மிகப்பெரும் நன்றி . மேலும் இக்கதாப்பாத்திரத்திற்கு தயாரவதற்கு நிறைய அவகாசம் தந்து, என்னை சரியாக நடிக்க வைத்துள்ளார்கள். இந்தியாவின் மிகத் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவரான ரன்வீர் சிங்குடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். ரசிகர்கள் இப்படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை பார்க்க மிகுந்த ஆவலாக இருக்கிறேன். 4 தசாப்தமாக கிரிக்கட்டை விரும்பும் ரசிகர்களுக்கு இப்படம் பெருவிருந்தாக இருக்கும். 83 ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலககோப்பையை வென்ற போட்டியை பார்த்தவர்களுக்கு இப்படம் பல மலரும் நினைவுகளை உண்டாக்கும். அந்த காலகட்டத்தில் அதனை பார்த்து ரசிக்காதவர்களுக்கு இப்படம் தத்ரூபமாக அவர்கள் கண்முன் அந்த தருணத்தை கொண்டு வரும்.
மொத்தத்தில் இப்படம் இந்திய முழுதுமான கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்றார்.

“83” திரைப்படம் ஒரே நேரத்தில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் 2020 ஏப்ரல் 20 அன்று வெளியாகிறது.

விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது

விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay sethupathi fansமக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது அதில் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் குழந்தையின்மை அக்குபஞ்சர் ஆகிய பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்ய இருக்கிறது அதன் முதல் கட்டமாக ஒருவருக்கு , இன்றைய தினமே கண் சிகிச்சை இலவசமாக அளிக்க இருக்கிறது .

விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் வெளியானது

விஜய்சேதுபதி நடிக்கும் படத்தின் புதிய பர்ஸ்ட் லுக் வெளியானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Laabam first lookஎஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படம் லாபம். நம் நாட்டின் முதுகெலும்பான விவசாயத்திற்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் விஜய்சேதுபதி உடன் ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மேலும் கலையரசன் சாய் தன்ஷிகா உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஸ்ட்ராங்கான கண்டெண்டோடு கமர்சியல் கலந்து உருவாகி வரும் லாபம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று ஆனந்த விகடன் வழங்கும் விகடன் அவார்ட்ஸ் மேடையில் மிகப்பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ..

உணவு அரசியலும் கலகல கமர்சியலும் சேர்ந்து உருவாகி வரும் இப்படத்தில் புரட்சிகரமான விசயங்களும் பேசப்பட்டுள்ளது. இப்படத்தை 7சி எஸ் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனமும் விஜய்சேதுபதி புரோடக்‌ஷனும் இணைந்து தயாரிக்கின்றன. இமான் இசை அமைத்துள்ள இப்படத்தில் ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டதும் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் பேசியதாவது,

“இங்கு சுட்டவர்களும் குடிமக்கள் தான். சுடப்பட்டவர்களும் குடிமக்கள் தான்” என்றார்.

இறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” !

இறுதி கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவின் “மூக்குத்தி அம்மன்” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Mookuthi amman imagesஒரு படத்தின் பெயர் அறிவிப்பிலிருந்தே பெரும் ஆச்சர்யத்தை, எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் உண்டாக்குவது இன்றைய காலகட்டதில் கடினமான ஒன்று. “மூக்குத்தி அம்மன்” படத்தில் அம்மனாக நயன்தாரா, RJ பாலாஜியுடன் இணைந்து நடிக்கிறார். RJ பாலாஜி இயக்குநர் NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார் என்ற போது கோடம்பாக்கமே வியந்து பார்த்தது. தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் என ஒரு திரைப்படத்தில் பங்குபெறும் அனைவருக்கும் ஒரு படைப்பு படமாக்கப்படும்போதே அதிக மகிழ்ச்சி தரும் ஒன்றாக இருப்பது அதிசயமே. இவையனைத்தும் Dr.ஐசரி K கணேஷ் வேல்ஸ், ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” படத்தில் அரங்கேறியுள்ளது. பெயர் அறிவிக்கப்பட்ட குறுகிய காலத்தில் 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை அதிரடியாக முடித்திருக்கிறது படக்குழு.

நடிகர், இயக்குநர் RJ பாலாஜி படம் குறித்து கூறியதாவது…

Dr.ஐசரி K கணேஷ் போன்ற ஒரு தயாரிப்பாளர் நம் பக்கம் இருந்தால் எதுவும் சாத்தியமே. அவர் போன்ற ஒரு தயாரிப்பாளர் இருக்கும் போது நாம் படப்பிடிப்பில் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. நாம் கவலைகொள்ள வேண்டிய ஒரே விஷயம் நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் அளவில்லா சுதந்திரத்தை எப்படி வீணாக்காமல் பயன்படுத்துவது என்பது தான். அதைப் படக்குழு தெளிவாக உணர்ந்து வேலை செய்திருக்கிறோம். படத்தை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் உருவாக்குவது ஒன்று தான் எங்கள் குறிக்கோள். அவர்களின் எதிர்பார்ப்பை கண்டிப்பாக பூர்த்தி செய்வோம். மொத்த படக்குழுவும் படத்தின் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறது. நவம்பர் 29, 2019 அன்று படப்பிடிப்பை துவக்கி 44 நாட்களில் 90 சதவீத படப்பிடிப்பை முடித்திருக்கிறோம். இன்னும் ஒரே ஒரு வார சென்னை படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பையும் முடிக்கவுள்ளோம் என்றார்.

மேலும் படக்குழு பற்றி அவர் கூறியதாவது…

இயக்குநர் NJ சரவணன் இல்லையென்றால் இத்தனை சீக்கிரம் படப்பிடிப்பை முடித்திருக்க முடியாது. அவரது உழைப்பு அபாரமானது. நயன்தாரா இப்படத்திற்காக தந்திருக்கும் அர்ப்பணிப்பு வார்த்தைகளில் சொல்லிவிட முடியாது. இந்த கதாப்பாத்திரத்திற்காக அவர் விரதம் இருந்திருக்கிறார். தன் முழு ஆத்மாவையும் ஒருங்கினைத்து பணிபுரிந்திருக்கிறார். இப்படம் அவர் சினிமா வாழ்வில் வெகு முக்கியமான படமாக என்றென்றும் நிலைத்திருக்கும். மேலும் அவரது கதாப்பாத்திரம் படத்திற்கு பெரும் பலமாகவும் இருக்கும் என்றார்.

தயாரிப்பாளர் Dr.ஐசரி K கணேஷ் கூறியதாவது…

ஒரு மிகப்பெரிய நட்சத்திரத்தை வைத்துகொண்டு இப்படக்குழு இவ்வளவு சீக்கிரமாக முக்கால்வாசி படத்தை முடித்திருப்பது எனக்கு பெரும் ஆச்சர்யமே. RJ பாலாஜியும் அவரது குழுவும் ஒரு மிகப்பெரும் பணியை வெகு சுலபமாக முடித்திருக்கிறார்கள். அவர்கள் சினிமா மீது வைத்திருக்கும் காதலும், அவர்களது திறமையும் தான் இதற்கு காரணம். தயாரிப்பாளர் விரும்பும் இயக்குநராக பலகாலம் அவர் தமிழ் சினிமாவில் நிலைத்திருப்பார். கதையை சொல்லும் விதத்தில் மட்டுமல்லாது அதனை உருவாக்கும் நேர்த்தியிலும் தயாரிப்பாளருக்கு பிடித்தவராக இருக்கிறார் RJ பாலாஜி. நயன்தாரா இப்படத்திற்கு கொடுத்திருக்கும் உழைப்பு அற்புதமானது. அவர் விரதம் இருந்து வெகு பக்தியுடன் இந்தக்காதப்பாத்திரத்தை செய்திருக்கிறார். அவர் ஏன் தன் தொழிலில் தலை சிறந்தவர் என்பதற்கு இதுவே சான்று. இப்படம் அனைத்து தரப்பினரையும் கவரும் படைப்பாக இருக்கும் என்றார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் Dr.ஐசரி K கணேஷ் தயாரிக்கும் “மூக்குத்தி அம்மன்” திரைப்படத்தை RJ பாலாஜி NJ சரவணன் உடன் இணைந்து இயக்குகிறார். படத்தின் முதன்மை கதாபத்திரத்தில் அம்மனாக நயன் தாரா நடிக்கிறார். அவருடன் இணைந்து RJ பாலாஜி நடிக்கிறார். இவர்களுடன் மௌலி, ஊர்வசி மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள். “அவள்” படத்தின் இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். “தானா சேர்ந்த கூட்டம்” பட ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.

‘தர்பார்’ வசூலை தகர்க்க வாட்ஸ்அப்பில் ஆப்பு; போலீசில் லைகா புகார்

‘தர்பார்’ வசூலை தகர்க்க வாட்ஸ்அப்பில் ஆப்பு; போலீசில் லைகா புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Darbar scences goes viral in WhatsApp Lyca filed police caseலைகா தயாரிப்பில் ரஜினி முருகதாஸ் அனிருத் ஆகியோரது கூட்டணியில் உருவான தர்பார் படம் நேற்று முந்தைய தினம் ஜனவரி 9ல் ரிலீசானது.

இதில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி, யோகி பாபு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்நிலையில் தர்பார் பட வசூலை தகர்க்க சிலர் திட்டமிட்டூள்ளனர்.

தியேட்டரில் தர்பார் படம் பார்க்கும்போதே மொபைல் போனில் படம் பிடித்து அதை 3 பாகங்களாக பிரித்து வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளனர்.

மேலும் அத்துடன் ஒரு ஆடியோ பதிவையும் ஒருவர் பதிவு செய்துள்ளார்.

அதில்… தர்பார் படத்தை தியேட்டர்ல போய் யாரும் பார்க்க கூடாது. இந்த வீடியோவை எல்லாருக்கும் பகிருங்கள் என பேசியுள்ளான்.

இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த நிலையில் லைகா தயாரிப்பு தரப்பு சார்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர்கள் கே.ராஜன் மற்றும் டி.சிவா இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
தலைவர் ரஜினியின் தர்பார் படம் நல்ல வசூலை செய்து வருகிறது. யாராலும் கட்டுப்படுத்த முடியாத ஜல்லிக்கட்டு காளை தர்பார் படம்.

ஆனால் இது போல வாட்ஸ் அப்பில் பரப்பும் தீவிரவாதிகளை சும்மா விடக்கூடாது. அது கொலை குற்றவாளிகளுக்கு நிகரானவர்கள் அவர்கள்.

அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் அனுப்புபவர்களும், பார்ப்பவர்களையும் டிராக் செய்து வருகின்றனர்.

அதனால் மக்கள் யாரும் வாட்ஸ் அப்பில் பார்க்கவேண்டாம்” என அவர்கள் தெரிவித்தனர்.

Darbar scences goes viral in WhatsApp Lyca filed police case

More Articles
Follows