தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சென்னை நுங்கம்பாக்கத்தில் செயல்படும் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் மேலாளர் வின்சென்ட்.
இவர் சென்னையில் உள்ள தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.
அந்த புகாரில்…
எங்கள் நிறுவனத்தில் 150 செக்யூரிட்டிஸ் வேலை செய்கிறார்கள்.
அவர்களை பல்வேறு நிறுவனங்களுக்கும், தனிப்பட்ட வீடுகளுக்கும் காவல் பணிக்கு அனுப்பி வருகிறோம்.
எங்கள் நிறுவனத்தில் இருந்து நடிகர் ஜெயம் ரவியின் வீட்டு பாதுகாப்புக்கு 2 காவலாளிகளை வேலைக்கு அனுப்பி வைத்தோம்.
அவர்களுக்கு தலா ரூ.35 ஆயிரம் வீதம் ரூ.70 ஆயிரம் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
அவர்கள் இருவருக்கும் கடந்த ஏப்ரல் மாதத்திற்குரிய சம்பள பணம் ரூ.70 ஆயிரத்தை கொடுக்காமல் அவர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டனர்.
பின்னர் அந்த 2 பேரில் ஒருவரை எங்களது நிறுவனத்துக்கு தெரிவிக்காமலேயே ஜெயம் ரவிக்கு தனிப்பட்ட முறையில் காவலாளியாக நியமித்து கொண்டனர்.
ஜெயம் ரவியின் மேலாளர் சேஷகிரி என்பவர்தான் இதற்கு காரணமாக உள்ளார். இதுதொடர்பாக சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகார் மனுவை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Jayam Ravi not pays security guards