பாலியல் வன்முறைகளை தடுக்கும் ‘எக்ஸ் ஆர்மி’ மேன்.; மீண்டும் இணையும் ‘யோக்கியன்’ கூட்டணி

பாலியல் வன்முறைகளை தடுக்கும் ‘எக்ஸ் ஆர்மி’ மேன்.; மீண்டும் இணையும் ‘யோக்கியன்’ கூட்டணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

A Cube movies app பட நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரிக்கும் படம் “எக்ஸ் ஆர்மி”.

இதில் ஜெய் ஆகாஷ் எக்ஸ் மிலிட்ரி ஆபிசராக நடிக்கிறார். நாயகிகளாக அஷ்மிதா, அக்ஷாயா, இமான் அண்ணாச்சி, கராத்தே ராஜா பிரதான வில்லனாக தினேஷ் மேட்னே நடிக்கிறார்.

இவர்களுடன் மீசை ராஜேந்திரன், மைக்கேல் அகஸ்டின், ராஜ்மித்ரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்திற்கு ஜெய் ஆகாஷ் கதை திரைக்கதை அமைக்கிறார்.சாய் பிரபா மீனா இயக்குகிறார். இவர் ஜெய் ஆகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான யோக்கியன் படத்தை இயக்கியவர்.

ஜெய் ஆகாஷ் இயக்கிய படத்தில் சாய் பிரபா மீனா உதவி இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்.

எக்ஸ் ஆர்மி

ஆர்.ராம்குமார், சி. பி. சதீஷ் குமார் இணைந்து வழங்கும் இப்படத்தை ஏ.சி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் “ரூட்” என்ற படத்தை இயக்கி ஒளிப்பதிவு செய்தவர்.

ஜெய் விஜயம் படத்துக்கு இசை அமைத்த எஸ்.சதீஷ் குமார் இசை அமைக்கிறார். துர்காஸ் எடிட்டிங் செய்கிறார்.

புதுமையான ஸ்டன்ட் காட்சிகளை விஜய் ஜாகுவார் அமைக்கிறார். ஜோய் மதி நடனம் அமைக்கிறார்.

ராணுவத்தில் பணிபுரிந்து போரில் வீர காயத்துடன் ஓயுவு பெறும் இராணுவ வீரர் ஜெய் ஆகாஷ் நாட்டில் சிலர் பெண்களுக்கு எதிராக நடத்தும் வன்முறைகள், பாலியல் துன்புறுத்தல்களை கண்டு ஆவேசம் அடைகிறார்.

அதை தட்டி கேட்க முடிவு செய்து ஏற்கனவே ராணுவத்தில் பணியாற்றிய எக்ஸ் ஆர்மி மேன்கள், மற்றும் போரில் காயம் அடைந்து ஊனமுற்று இன்னும் தேச பக்தியுடன் இருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களை ஒரு படைபோல் திரட்டி பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் அக்கிரமக்காரர்களை தேடிப் பிடித்து ஜெய் ஆகாஷ் எப்படி பழிவாங்குகிறார் என்பதை ஆக்ஷன் அதிரடியுடன் இப்படம் சொல்கிறது.

எக்ஸ் ஆர்மி

எல்லையை காப்பாற்றியவர்கள் நாட்டுக்குள் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை தட்டி கேட்டு அவர்களை எப்படி காக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக்கரு.

இப்படத்தின் தொடக்க விழா பாடல் பதிவுடன் இன்று ஆகஸ்ட் 11ம் தேதி நடந்தது. இதில் ஹீரோ ஜெய் ஆகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, பெங்களுர், மும்பையில் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் இப்படம் திரைக்கு வருகிறது.

எக்ஸ் ஆர்மி

Jaiakash next movie titled Ex Army started with pooja

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்..; ரசிகர்களுடன் ‘ஜவான்’ குறித்து ஷாரூக் ஜாலி உரையாடல்

பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்..; ரசிகர்களுடன் ‘ஜவான்’ குறித்து ஷாரூக் ஜாலி உரையாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கானின் நடிப்பில் பரபரப்பை கிளப்பியிருக்கும், ஜவான் படத்திற்கான எதிர்பார்ப்பு, பார்வையாளர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

அதற்கான ஆதாரமாக சமீபத்திய #AskSRK அமர்வு, இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஷாருக்கான் தனது ரசிகர்களுடன் #AskSRK எனும் ஹேஸ்டேக்கில், ட்விட்டரில் தொடர்புகொள்வதால், அவருடன் ரசிகர்கள் உரையாடுவது, உண்மையில் ஒரு பெரிய விருந்தாக அமைந்துள்ளது.

மேலும் முன்னெப்போதும் இல்லாத அளவு ஷாருக்கானின் ஜவான் திரைப்பட எதிர்பார்ப்பு உட்சகட்டத்தை எட்டியுள்ளது. ஷாருக்கானிடம் படத்தின் கதையைக் கேட்பது முதல், அவரது கதாபாத்திரம் குறித்து கேட்பது வரை, நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் படம் குறித்த தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

#AskSRK டிவிட்டர் அமர்வில் SRK தனது ரசிகர்களுக்கு பதிலளிக்கத் தொடங்கியவுடன், ரசிகர்கள் தங்கள் கேள்வியுடன் வந்து, கிங்கானிடமிருந்து பல சுவாரஸ்யமான கேள்வி பதில்களால் இணையத்தை குதூகலமாக்கி வருகின்றனர்.

“ஜாவன்” திரைப்படத்திலிருந்து வெளிவந்த சுவாரஸ்யம்

இந்த அமர்வில், ரசிகரின் கேள்விக்கு மிக சுவாரஸ்யமிக்க புத்திசாலித்தனமான பதில் தந்தார் SRK, “இந்தப் படம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும்… அவர்களை எப்படி மதிக்க வேண்டும் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது என்பதில் வலுவான கருத்தைக் கொண்டுள்ளது. #ஜவான்” என்றார்.

ஜவான் என்னவிதமான ஜானர் படம் என்பது குறித்து SRK தந்த பதில்

SRK தந்த பதில், “ஜவான் ஒரு எமோஷனல் டிராமா….#ஜவான்”

ஜவான் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாப்பாத்திரம் குறித்து பகிர்ந்ததாவது…

இந்த அமர்வில் SRK, “@VijaySethuOffl ஒரு அற்புதமான மனிதர் மற்றும் நடிகர். உண்மையில் நடிப்பில் அவரது நுட்பமான நுணுக்கங்கள் மற்றும் அற்புதங்களை அனைவரும் படத்தில் பார்க்க வேண்டும். மிகச்சிறந்த அனுபவமாக இருக்கும். #ஜவான்” என்று பகிர்ந்துள்ளார்.

ஜவான் அதிரடி ப்ரிவ்யூ மற்றும் வசீகரிக்கும் கேரக்டர் போஸ்டர்களால் நாட்டையே வியப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், தற்போது, படத்தின் முதல் பாடலான ‘வந்தா எடம்’ வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அட்டகாசமான விஷுவல்கள் மற்றும் SRK அசத்தலான நடனம் என இந்தி (ஜிந்தா பந்தா), தமிழ் (வந்த எடம்) மற்றும் தெலுங்கு (தும்மே துலிபேலா) ஆகிய மொழிகளில் இந்த பாடல் நாடு முழுவதும் உள்ள மக்களின் இதயங்களை ஆள்கிறது.

ஜவான் திரைப்படத்தை ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் வழங்க, அட்லீ இயக்கியுள்ளார். கௌரி கான் தயாரித்துள்ளார். கௌரவ் வர்மா இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்,

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Shah Rukh reply to his fans at Social Media

முதன்முறையாக கமல் – விஜய் இணையும் படத்தின் ஹாட் அப்டேட் இதோ…

முதன்முறையாக கமல் – விஜய் இணையும் படத்தின் ஹாட் அப்டேட் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ்.

இவர் தீவிர கமல்ஹாசன் ரசிகர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

இதற்கு முன்பு கமல் நடித்த ‘விக்ரம்’ படத்தையும் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தையும் இவர் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது உருவாகி வரும் லியோ படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

‘லியோ’ படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அடுத்த பாகத்திற்கான சீன்ஸ் இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ‘லியோ’ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகர் கமல்ஹாசன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

’லியோ’ இரண்டாம் பாகத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் மற்றும் லலித்தின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கும் என கூறப்படுகிறது.

இந்த செய்தி உறுதியாகும் பட்சத்தில் கமல் மற்றும் விஜய் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இதுவாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் ‘லியோ’ படத்தை முடித்த பிறகு ரஜினியின் 171-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் எனவும் தகவல்கள் வந்துள்ளன. இது தொடர்பாக ஒரு பேட்டியில் “அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிடும்” எனவும் லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Kamal and Vijay joining hands together for first time

தியேட்டர்களில் மகா வசூல் செய்த ‘மாவீரன்’ ஓடிடி-யில் ரிலீசானது

தியேட்டர்களில் மகா வசூல் செய்த ‘மாவீரன்’ ஓடிடி-யில் ரிலீசானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் ‘மாவீரன்’.

இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி தமிழ், தெலுங்கு என 2 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாவீரன்’ திரைப்படம் இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இப்படம் தற்போது வரை ரூ.89 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரன்

Sivakarthikeyan’s Maaveeran to release on Amazon Prime

‘அடியே..’ வழக்கமான படமில்லை.; ஃப்யூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்சன் லவ் – ஜீ. வி. பிரகாஷ்

‘அடியே..’ வழக்கமான படமில்லை.; ஃப்யூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்சன் லவ் – ஜீ. வி. பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது நாயகன் ஜீ. வி. பிரகாஷ் குமார் பேசுகையில்….

‘ அடியே மிகவும் வித்தியாசமான படம். வழக்கமான படம் கிடையாது. ஃப்யூச்சர்ஸ்டிக் சயின்ஸ் ஃபிக்சன் லவ் ஸ்டோரி. இதுவே மிகப்பெரிய சவாலாக இருந்தது.

சென்னையில் பனிமழை பொழியும் என்பார். ஆனால் அதனை படக்குழு திரையில் நேர்த்தியாக செய்து காட்டியது.

படப்பிடிப்பு தளத்தில் வெங்கட் பிரபுவுடன் இசை தொடர்பாக விவாதிப்போம்.

நான் அண்மைக்காலமாக பணியாற்றியதில் சிறந்த பட தயாரிப்பு நிறுவனம் இதுதான் என்று உறுதியாக சொல்வேன். இந்த நாளில் இந்த தளத்தில் படப்பிடிப்பு நடக்கும் என்றால் அது உறுதியாக நடக்கும். அவர்கள் நேரத்தை வீணடிக்க மாட்டார்கள்.

நம் நேரத்தையும் வீணடிக்க மாட்டார்கள். நேரத்திற்கு மதிப்பளிப்பவர்கள். இதனால் இந்த நிறுவனத்துடன் தொடர்ந்து பணியாற்றுவேன் என உறுதியாக நம்புகிறேன்.

நடிப்பை பொறுத்தவரை கௌரி கிஷன், மதும்கேஷ் அற்புதமாக நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படம் குறித்து இயக்குநருக்கு ஒரு கற்பனையான காட்சி அமைப்பு இருந்தது. ஃபியூச்சரஸ்டிக்.. மல்டிவெர்ஸ்.. இதையெல்லாம் எழுதுவதற்கு எளிதாக இருக்கும். எப்படி காட்சிப்படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டேன்.

ஆனால் அதை எல்லாம் அவர்கள் நேர்த்தியாக காட்சிப்படுத்தி வியக்க வைத்திருக்கிறார்கள்.
ஜஸ்டின் பிரபாகரன் அருமையான இசை ஆல்பத்தை வழங்கி இருக்கிறார். இந்தப் படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும்.” என்றார்.

அடியே

Adiyae is not an usual movie says GV Prakash

உலக சினிமாவில் முதன்முறை.. கௌதம் மேனன் கோபித்துக் கொள்ளமாட்டார்…. – வெங்கட் பிரபு

உலக சினிமாவில் முதன்முறை.. கௌதம் மேனன் கோபித்துக் கொள்ளமாட்டார்…. – வெங்கட் பிரபு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் & கௌரி இணைந்து நடித்துள்ள படம் ‘அடியே’.

ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த படத்தில் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில்…

” உலக சினிமா வரலாற்றில் முதன்முறையாக நான் திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன். இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கதை சொல்லும் போதே மிகவும் பிடித்திருந்தது. வித்தியாசமாகவும் இருந்தது.

கௌதம் வாசுதேவ் மேனனாக நடித்திருக்கிறேன் என்று இன்னும் அவருக்கு தெரியாது. அவர் கோபித்துக் கொள்ள மாட்டார் என்பதால் அவராக நடித்திருக்கிறேன்.

இந்த கதாபாத்திரத்துக்கு பின்னணி குரல் கொடுத்தது இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் தான். அவர் ஒரு பல குரல் வித்தகர்.

இந்த திரைப்படத்தில் நான் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். ஒன்று விஞ்ஞானியாகவும், மற்றொன்று கெளதம் வாசுதேவ் மேனனாகவும் நடித்திருக்கிறேன். இரண்டுமே சிரமமான கதாபாத்திரங்கள் தான்.

இந்த திரைப்படத்தில் நான் விஜய் சார் படத்தை இயக்கி விட்டதாக கதையில் வரும். இந்த விளம்பரம் வெளியான பிறகு தான் எனக்கு விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

தயாரிப்பாளரை முதன்முதலாக அவரது வீட்டில் சந்திக்கும் போது எனக்கு தெய்வீக அனுபவம் தான் ஏற்பட்டது.

நான் இந்த படத்தில் நடிக்கும் போது ஜீ. வி. பிரகாசுடன் தான் நடித்தேன். இதற்காக படப்பிடிப்பு தளத்தில் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் அவரைப் பற்றிய பல புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன். நல்ல மனதுக்காரர். எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். அவர் ஜோதிட கலையிலும் வித்தகராக இருக்கிறார். எனக்கு அவர் சொன்ன ஜோதிடம் பலித்தது.

ஜீ.வி. பிரகாஷ் குமார் இந்த படத்தில் கடினமான எப்போதும் குழப்பத்தில் இருக்கக்கூடிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். காட்சியில் குழப்பமான மனநிலையில் நடித்து முடித்தவுடன்.. ஓய்வு கிடைக்கும் போது படப்பிடிப்பு தளத்திலேயே தொலைபேசி மூலம் இசை குறிப்புகள் குறித்து பேசுவார். பன்முக திறன் படைத்த கலைஞர்.

ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர்.. உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்.” என்றார்.

அடியே

Myself acted as director Gautammenon says Venkat Prabu

More Articles
Follows