தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் சங்க தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.
இந்த தேர்தலில் நாசரின் பாண்டவர் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில் சுவாமி சங்கரதாஸ் அணியினர் தமிழக கவர்னரை சந்தித்தனர்.
அதன்பின்னர் இந்த அணியின் அமைப்பாளர் ஐசரி கணேஷ் சொன்னதாவது…
‘விஷால் அணியினர் கவர்னரின் நேரத்தை வீண் செய்துவிட்டனர். அவர்கள் கவர்னரை சந்தித்ததால் நாங்களும் சந்தித்தோம்.
விஷால் மட்டும் நடிகர் சங்க பிளவுக்கு காரணம் இல்லை. ரமணா மற்றும் நந்தா ஆகியோரால்தான் பிரச்சினை ஏற்பட்டது.
அவருக்கு உடந்தையாக செயல்பட்ட நாசர், கார்த்தி ஆகியோரும் காரணம்.
மேலும் அவர் கூறியதாவது…
இந்த தேர்தலுக்கும் எனக்கும் தொடர்பு கிடையாது. இது தமிழக அரசு சம்மந்தப்பட்டது. இதில் நான் சம்மந்தப்பட்டு பேச ஒன்றுமில்லை என்று ஆளுநர் கூறினார்’.
இவ்வாறு அவர் கூறினார்.