தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளதாவது…
புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறையின் திட்டங்களான புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் தீபாவளி/ஓணம் பண்டிகை காலங்களில் இலவசமாக சர்க்கரை விநியோகம் செய்யப்படும்.
அதேபோல் புதுச்சேரியில் உள்ள அனைத்து உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் அரிசி, சமையல் எண்ணெய் மற்றும் பிற அத்தியாவசிய உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும்.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம், 2013-ன் கீழ் உணவு மானியம், புதுச்சேரியில் உள்ள அனைத்து வறுமைக் கோட்டிற்குக்கீழ் உள்ள/அந்தியோதயா அன்ன யோஜனா (BPL/AAY) உணவு பங்கீட்டு அட்டைதாரர்களுக்கும் பண்டிகை பொருட்கள் இலவசமாக விநியோகம் செய்யப்படும்.
இந்த திட்டங்களின் கீழ் பயனடைய ஆதார் அட்டை இல்லாதவர்கள் அல்லது அந்த நபருக்கு ஆதார் அட்டை வழங்கப்படும் வரை- புகைப்படம் ஒட்டப்பட்ட மாற்று ஆவணங்களை அளிப்பதற்கான குடிமைப்பொருள் வழங்கல் துறையின் முன்மொழிவிற்கும் துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Is Aadhaar card mandatory for to get food products from ration shop in Pondy