தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்க நடவடிக்கை கோரிய
சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர்
துரைமுருகன் கிராமிய பாடல்களையும் பாடிக் காட்டினார்.
அப்போது அழகாக பாடும் நீங்கள் நாடகங்களில் நடித்து உண்டா என்ற சபாநாயகரின் கேள்விக்கு சிறு வயதில் நாடகங்களில் நடித்துள்ளதாக துரைமுருகன் தெரிவித்தார்.
ஷேக்ஸ்பியர் குறிப்பிட்டது போல் உலகமே நாடகமேடை என்றும் இங்கு அனைவரும் நடித்துக் கொண்டு இருக்கிறோம் என்றும் கூறிய துரைமுருகன், சபாநாயகரான நீங்களும் நடித்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று கூறியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அப்போது பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்,அவையில் துரைமுருகன் நவரசங்கள் வெளிப்படும் விதமாக பேசுவதாக ஜெயலலிதா பாராட்டியதைக் குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன் சினிமா துறைக்கு போயிருந்தால் ஜெயலலிதாவோடு நடிக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கும் என்றார்.
இதை கேட்ட தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் மேஜையை தட்டிசிரித்தனர்.