ஜானு இல்லாமல் ராம் ஏது? ஷாரூக்கை பழிவாங்க ‘ஜவான்’ படத்தில் நடித்தேன் – விஜய்சேதுபதி

ஜானு இல்லாமல் ராம் ஏது? ஷாரூக்கை பழிவாங்க ‘ஜவான்’ படத்தில் நடித்தேன் – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் தயாரித்து நடித்துள்ள படம் ‘ஜவான்’. இதில் நயன்தாரா விஜய் சேதுபதி யோகிபாபு உள்ளிட்ட நடிகர்களும் தமிழ் தொழில்நுட்ப கலைஞர்களும் பணியாற்றி உள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில் சென்னையில் முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய்சேதுபதி பேசுகையில்…

”ஜவான் படத்தைப் பற்றி.. அட்லீ பற்றி.. நிறைய சொல்லலாம். இயக்குநர் அட்லீ ஒரு இயக்குநரை போல்.. படத்தில் உள்ள கதாபாத்திரங்களிடம் பேசுவது போல் அல்லாமல், கலைஞர்களை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களிடமிருந்து எப்படி நடிப்பை வாங்க வேண்டும். அவர்களுக்கான சௌகரியத்தையும், சுதந்திரத்தையும் எப்படி அளிக்க வேண்டும் என்பதில் கைதேர்ந்தவர்.

இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளுமுன் அட்லீயிடம் நிறைய விவாதிக்க வேண்டும் என சொன்னேன். ‘வாங்கண்ணே.. நாம பண்ணலாம். என்ன வேணும்னாலும் பண்ணுங்க’ என்றார். இதை நான் எதிர்பார்க்கவே இல்லை. படத்தில் என் கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்திருக்கிறார்.

நான் ஸ்கூலில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணைக் காதலித்தேன். அது அந்த பெண்ணிற்கு தெரியாது. இது வழக்கமானது. ஜானு இல்லாமல் ராம் ஏது? ஆனால் அந்தப் பெண் ஷாருக்கானின் ரசிகை. அவரை காதலித்தார். அதுக்கு பழி வாங்க இத்தனை வருஷமாயிருக்கு.

ஷாருக்கானை முதன்முதலாக சந்தித்தபோது அவர் என்னிடம் நீங்கள் நல்ல நடிகர். உங்கள் நடிப்பு நன்றாக இருக்கிறது என சொன்னார். அதனை நான் இயல்பாக எடுத்துக் கொண்டேன். ஆனால் மீண்டும் ஒரு முறை வேறு இடத்தில் சந்தித்த போதும் இதையே சொன்னார். அதற்காக இப்போது நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

யோகி பாபு – ஒவ்வொரு படத்திலும் அவருடைய பஞ்ச் டயலாக் பிரபலமாகும். அதன் பின்னணியில் அவருடைய கடின உழைப்பு இருக்கிறது. அது பெரும்பாலும் படப்பிடிப்பு தளத்தில் அவரே சொந்தமாக யோசித்து பேசுவார்.

படத்தின் பணியாற்றிய நடிகர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி” என்றார்.

I took revenge Without Jaanu No Ram says Vijaysethupathi

பாலிவுட்டுக்கு கூட்டிச் சென்ற அட்லிக்கு நன்றி.; ஜவான் விழாவில் ஷாருக்குடன் ஆட்டம் போட்ட அனிருத்

பாலிவுட்டுக்கு கூட்டிச் சென்ற அட்லிக்கு நன்றி.; ஜவான் விழாவில் ஷாருக்குடன் ஆட்டம் போட்ட அனிருத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் தயாராகி இருக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் அமைந்திருக்கும் கலை அரங்கில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் மற்றும் ரசிகர்களுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, யோகி பாபு, அனிருத், சான்யா மல்ஹோத்ரா, பிரியாமணி, பாடலாசிரியர் விவேக், சண்டை பயிற்சி இயக்குநர் அனல் அரசு, படத்தொகுப்பாளர் ரூபன், கலை இயக்குநர் முத்துராஜ், நடன இயக்குநர் ஷோபி, ‘ஜவான்’ படத்தை தமிழகம் மற்றும் கேரளாவில் வெளியிடும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்கு வருகை தந்திருந்த அனைவரையும் விநியோகஸ்தரான ஸ்ரீ கோகுலம் கோபாலன் வரவேற்றார்.

‘வந்த இடம் என் காடு…’ என்ற பாடலை பாடி ஆட்டம் போட்டார் அனிருத். கூடவே ஷாருக்கான் நடனமாடினார்.

அதன்பின்னர் இந்நிகழ்வில் இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில்…

” என் மீது நம்பிக்கை வைத்து எனக்கு வாய்ப்பளித்த ரெட் சில்லிஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்திற்கும், பூஜா தட்லானி மற்றும் கௌரி கான் ஆகியோருக்கும் நன்றி.

பாடலாசிரியர் விவேக் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் எழுதி இருக்கிறார். அவருடைய ஈடுபாட்டின் காரணமாக இந்த படத்தின் பாடல்கள் ஒரு ரீமேக் படத்தின் பாடல்கள் போலில்லாமல்.. அசல் தமிழ் படத்தின் பாடல்களைப் போல் எழுதியிருக்கிறார். இதனால் ஷாருக்கான் இவரது பாடல் வரிக்கு வாயசைத்து நடனமாடி இருக்கிறார்.

என்னுடைய சகோதரர்.. இயக்குநர் அட்லீக்கும் நன்றி. சென்னையிலிருந்து மும்பைக்கு இயக்குநர்கள் ரீமேக்கிற்காக சென்றிருக்கிறார்கள்.

ஆனால் சென்னையிலிருந்து புறப்பட்டு இந்தியாவின் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை சந்தித்து, கதை சொல்லி, அவரது தயாரிப்பில் படத்தை இயக்குவது என்பது சாதாரண விசயமல்ல. சவாலானது.

அதற்கு அவருக்கு நாம் அனைவரும் கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவிக்க வேண்டும். அவர் மட்டும் பணியாற்றாமல்.. அவரை நம்பி இருந்த எடிட்டர், கேமராமேன், டான்ஸ் மாஸ்டர், ஃபைட் மாஸ்டர்.. ஆர்ட் டைரக்டர் என எல்லோரையும் அழைத்துச் சென்று தன்னுடன் பணியாற்ற வைத்திருக்கிறார்.

அதிலும் 10 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக பணியாற்றி வரும் என்னை பாலிவுட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அனைவரும் கடினமாக உழைத்து ஜவானை உருவாக்கி இருக்கிறோம்.

ஷாருக்கான்- வாழ்க்கையில் சில விசயங்கள் நடக்குமா.. என எதிர்பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அதைவிட முதலில் இசையமைப்பாளராக வருவேனா..! என்பதே சந்தேகமாக இருந்தது.

தற்போது இசையமைப்பாளராகி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் அதுவும் ஷாருக்கான் படத்திற்கு இசையமைப்பதன் மூலம் அங்கு அறிமுகமாகிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

கிங்கான் ஷாருக்… நான் உங்களை மிஸ் செய்வேன். நீங்கள் தினமும் இரவில் ஃபேஸ் டைம் இணைப்பில் வருகை தந்து ஒரு மணி நேரம் பேசுவீர்கள். அந்த பேச்சை தற்போது மிஸ் செய்கிறேன்.

ஷாருக் கான் மிகவும் அன்பானவர். குடும்பத்தில் ஒருவராக பழகக் கூடியவர். ஒரு முறை லண்டனுக்கு சென்றிருந்தபோது.. அங்கு அவர் எனக்காக ஷாப்பிங் சென்று, அங்கிருந்து எனக்கு போன் செய்து.. என் உடை அளவை தெரிந்து கொண்டு, எனக்காக பிரத்தியேகமாக ஆடையை வாங்கி பரிசாக அளித்தார். அந்த அன்பு ஈடு இணையற்றது.

இந்த படத்தில் ஷாருக்- அட்லீ இணைந்திருப்பதால் இந்தப் படத்தை இந்தி திரைப்படமாக பார்க்காமல்.. இந்திய சினிமாவாக கண்டு ரசித்து ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ” என்றார்.

Anirudh performance with Shahrukh khan at Jawan pre release event

ஜிவி. பிரகாஷ் – ஐஸ்வர்யா இணைந்த ‘டியர்’ பட உரிமையை வாங்கிய ரோமியோ

ஜிவி. பிரகாஷ் – ஐஸ்வர்யா இணைந்த ‘டியர்’ பட உரிமையை வாங்கிய ரோமியோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nutmeg Productions தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் வெளியீட்டு உரிமையை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் கைப்பற்றியுள்ளது.

தமிழ் திரையுலகில் பல தரமான வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வழங்கியதுடன், பல ப்ளாக்பஸ்டர் படங்களை வெளியிட்டுள்ளது ரோமியோ பிக்சர்ஸ்.

நேர்கொண்ட பார்வை, வலிமை, நெஞ்சுக்கு நீதி, வீட்ல விஷேசம், டிரிக்கர், துணிவு, டைனோசர்ஸ் போன்ற ப்ளாக்பஸ்டர் படங்களை இந்நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் -ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.

Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் முதன் முறையாக இணைந்து நடிப்பதால், ‘டியர்’ படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருமளவில் அதிகரித்துள்ளது.

இப்படத்தில் ஜிவி பிரகாஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகினி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ‘ராப்’ ஐகான் அறிவு, ஏகாதசி, ஜிகேபி, விண்ணுலக கவி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

டியர் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது.

இப் படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

Romeo Pictures acquires the release rights DEAR

‘ஜெயிலர்’ பட வசூலில் பங்கு.; ரஜினியிடம் நேரில் கொடுத்த கலாநிதி மாறன்

‘ஜெயிலர்’ பட வசூலில் பங்கு.; ரஜினியிடம் நேரில் கொடுத்த கலாநிதி மாறன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது.

இந்த படம் வெளியான முதல் நாளே வசூலில் ரூ 90 கோடியை நெருங்கியது.

தற்போது படம் வெளியாகி 3 வாரங்களை கடந்துள்ளது. இன்றும் பல திரையரங்குகளில் ஜெயிலர் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

ரஜினியின் ஸ்டைல்.. மோகன்லால் மற்றும் சிவராஜ் குமாரின் மாஸ் ஆக்சன் காட்சிகள்… தமன்னா போட்ட காவலா ஆட்டம்.. விநாயகனின் வில்லத்தனம்.. யோகி பாபுவின் காமெடி என பல்வேறு அம்சங்கள் இந்த படத்தில் நிறைந்திருந்ததால் படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தது.

மேலும் அனிருத்தின் வெறித்தனமான பின்னணி இசை நெல்சனின் அருமையான திரைக்கதை ஆகியவையும் இந்த படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்தன.

இந்த நிலையில் இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த சன் பிக்சர்ஸ் நிறுவனர் கலாநிதிமாறன் JAILER பட வசூலில் ஒரு பங்கை ரஜினிக்கு செக்காக கொடுத்துள்ளார்.

அவர் கொடுத்த தொகை எவ்வளவு? என்ற விவரங்கள் வெளியாகவில்லை. ஆனால் இந்த தகவலை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Kalanithimaran met Rajini and handed over a cheque celebrating historic success of Jailer

சிவராஜ்குமார் உடன் ஒன்று.. மம்மூட்டியுடன் ஒன்று.; பிசியான ஜெயராம்

சிவராஜ்குமார் உடன் ஒன்று.. மம்மூட்டியுடன் ஒன்று.; பிசியான ஜெயராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சமீபகாலமாக தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் அதிக ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் மலையாள நடிகர் ஜெயராம்.

சில மாதங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன் 1 & 2 ஆகிய படங்களில் ஜெயராமின் நடிப்பு பெரிய அளவில் கவனம் பெற்றது.

தற்போது கன்னட பட உலகிலும் நுழைந்துள்ளார் ஜெயராம்.

ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் மாஸ் காட்டிய சிவராஜ்குமார் நடித்து வரும் ‘கோஸ்ட்’ படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ஜெயராம்.

மேலும் மலையாளத்தில் ‘ஆப்ரஹாம் ஒஸ்லர்’ என்கிற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார் ஜெயராம்.

இந்த படத்தில் மற்றொரு முக்கிய வேடத்தில் மம்மூட்டி நடிக்க உள்ளதாக தகவல்கள் வந்தன.

அதன்படி ஒரு புகைப்படத்தில் ‘ஆப்ரஹாம் ஒஸ்லர்’ பட சூட்டிங் கில் மம்முட்டி கலந்து கொண்ட படங்கள் வெளியாகி உள்ளது.

‘அஞ்சாம் பாதிரா’ பட இயக்குநர் மிதுன் மானுவேல் தாமஸ் தான் இப்படத்தை இயக்கி வருகிறார்.

தொடர் கொலைகளை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக ஜெயராம் இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Jayaram acting with Sivarajkumar and Mammotty

JAILER HD PRINT LEAK – மக்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

JAILER HD PRINT LEAK – மக்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இதுவரை உலக அளவில் இப்படம் ரூ.550 கோடிக்கும் அதிகமான வசூலை குவித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், படம் ஹெச்டி(HD) தரத்தில் இணையத்தில் கசிந்துள்ளது.

இது படக்குழுவினர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், திரையரங்க உரிமையாளர்கள் பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் ஹெச்டி லிங்க்கை (HD Link) யாரும் பகிரவேண்டாம் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Rajini’s ‘Jailer’ movie HD print leaked online

More Articles
Follows