ரஜினி-விஜய்க்கே கிடைக்காத அப்ளாஸ் அஜித்துக்கு மட்டும் எப்படி?

ரஜினி-விஜய்க்கே கிடைக்காத அப்ளாஸ் அஜித்துக்கு மட்டும் எப்படி?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

How Ajith getting more Applause than Rajini and Vijayதமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர்களில் தனக்கான ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் அஜித்.

இவரை தமிழக ரசிகர்கள் தல என்றே அழைக்கின்றனர்.

ரசிகர் மன்றமே வேண்டாம் என்று இவர் சொன்னாலும் இவருக்கான ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது.

எந்தவொரு ஹீரோவாக இருந்தாலும் தனக்கு முடி நரைத்துவிட்டால், அதில் கருப்பு டை அடித்துவிட்டுதான் படத்தில் நடிப்பார்கள். ஆனால் தன் வெள்ளைத் தாடி, மீசை, நரைத்த தல முடி என இயற்கையான தோற்றத்துடன் நடித்து வருகிறார் இவர்.

மேலும் படத்தின் சில காட்சிகளில் தன் வயது உட்பட உண்மையான தகவல்களை அனைத்தையும் சொல்லி நடித்திருக்கிறார் தல.

சினிமாவில் நடிப்பதை தவிர இவர் எதுவும் செய்யவில்லை. அதாவது பாடுவதோ, இயக்குவதோ, பாடல் எழுதுவதோ என எதையும் செய்யவில்லை.

தான் உண்டு தன் வேலையுண்டு என செய்து வருபவர்.

ஆனால் சினிமாவைத் தாண்டியும் நிஜ ஹீரோவாகவே மக்கள் மனதில் வலம் வருகிறார்.

பைக் ரேஸ் முதல், விமானம் ஓட்டவும் செய்கிறார். பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் ஒரே நடிகர் இவர் தான்.

மேலும் ஐஐடி மாணவர்களுக்கே விமான பயிற்சிகளில் (தக்ஷா) ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

இதனால் இவரின் பெருமை ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

அஜித் பெயரை எங்கேயாவது யாராவது சொன்னால் கூட ரஜினி, கமல், விஜய்க்கு கிடைக்காத கரவொலி சத்தம் இவருக்கு (சில நேரங்களில்) மட்டும் கிடைக்கிறது. அதற்கு என்ன காரணம் தெரியுமா..?

சினிமா உலகில் 1970-80களில் பிரபல நடிகர்கள் கையாண்ட் யுக்தியை இப்போதும் அஜித் கையாள்கிறார்.

அதாவது இப்போது உள்ளது போல் டிவியோ, சோஷியல் நெட்வொர்க் அப்போது இல்லை. எனவே நடிகர்களை நாம் காண வேண்டுமென்றால் தியேட்டருக்கு வந்தே ஆக வேண்டும்.

அப்போது தியேட்டரில் கூட்டல் அலை மோதும். போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத கூட்டம், அடிதடி எல்லாம் இருக்கும். எனவே படங்களும் 100 நாட்கள் ஓடியது. மக்களும் தங்கள் அபிமான நடிகர்களை திரையில் ரசித்து வந்தனர்.

அதை தான் அஜித், நயன்தாரா போன்றவர்கள் தற்போது செய்து வருகின்றனர்.

தன் பட பூஜை, இசை வெளியீட்டு நிகழ்ச்சி, புரோமோசன் நிகழ்ச்சிகளுக்கே எதற்கும் அஜித் வருவதில்லை. இதற்கு இவர் தரப்பில் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

சமூக பிரச்சினைகளுக்கும் குரல் கொடுப்பதில்லை. பேட்டி கொடுப்பதில்லை.

ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என எதிலும் அஜித்துக்கு அக்கவுண்ட் இல்லை. ரசிகர்களையும் அடிக்கடி சந்திப்பது இல்லை.

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நடிகர்கள் மற்ற நடிகர்களின் விழாக்களில் கலந்துக் கொள்கிறார்கள். அந்த பட பாடல்களை நேரில் ரிலீஸ் செய்கிறார்கள் அல்லது யூடிப்பில் வெளியிட்டு ஆதரவளிக்கிறார்கள்.

அதுபோல் விஜய்யும் சில நேரங்களில் மற்றவர்களை பாராட்டி பேசுகிறார். தன் பட இசை வெளியீட்டு விழாக்களில் ரசிகர்களை சந்திக்கிறார்.

இவர்களை எல்லாம் ரசிகர்கள் எப்படியாவது எங்கேயாவது சந்தித்து விடுகிறார்கள். அல்லது அவர்களின் பேச்சை டிவியில் பார்த்து ரசிக்கிறார்கள்.

ஆனால் இது எதையும் அஜித் செய்வது இல்லை. எனவே அவரை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அப்போது அவரின் படங்கள் ரிலீஸ் ஆகும்போது வேறு வழியின்றி தல தரிசனம் காண தியேட்டருக்கு கட்டுக்கடங்காத அளவில் விரைகிறார்கள்.

அதுபோல் அஜித் பற்றிய பேச்சுக்கள் பொது நிகழ்ச்சியில் எழும் போது ஆர்ப்பரிக்கிறார்கள்.

இதுவே டிஜிட்டல் உலகத்திலும் அஜித் செய்யும் ராஜதந்திரம் எனலாம்.

How Ajith getting more Applause than Rajini and Vijay

மீண்டும் கபாலி-பேட்ட தயாரிப்பாளர்களுடன் ரஜினி; 100 கோடி சம்பளம்?

மீண்டும் கபாலி-பேட்ட தயாரிப்பாளர்களுடன் ரஜினி; 100 கோடி சம்பளம்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

After Darbar Rajini likely to do films with Kabali and Petta Producerரஜினிகாந்த் நடித்து வரும் தர்பார் படம் அடுத்தாண்டு 2020 பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளது.

இப்படத்தை அடுத்து இரண்டு படங்களில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

தலைவர் 168வது படத்தை விஸ்வாசம் புகழ் சிவா இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினி நடித்த எந்திரன் (2010), பேட்ட (2019) ஆகிய படங்களை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இவை இரண்டும் வெளியாகி தமிழ் சினிமாவில் வசூல் சாதனை புரிந்தன.

சிவா படத்தை முடித்த பின்னர் அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம் ரஜினி.

இப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே ரஜினியின் கபாலி படத்தை தயாரித்து அதை உலகமே வியக்கும் அளவுக்கு விளம்பரம் செய்திருந்தவர் தாணு என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ. 250 கோடியில் இப்படம் உருவாகவுள்ளதாம். இதில் ரஜினி சம்பளம் மட்டும் 95-100 கோடியை தொடும் என்கிறார்கள்.

இது உண்மையானால் ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெயர் ரஜினிக்கு கிடைக்கும்.

After Darbar Rajini likely to do films with Kabali and Petta Producer

நயன்தாராவுக்காக ரஜினி பட டைட்டிலை பெற்ற ‘ரௌடி’ தயாரிப்பாளர்

நயன்தாராவுக்காக ரஜினி பட டைட்டிலை பெற்ற ‘ரௌடி’ தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Netrikann Nayanthara and Vignesh Shivan got Rajini movie title1981ஆம் ஆண்டில் ரஜினி மற்றும் கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா இணைந்து நடித்த ‘நெற்றிக்கண்’ என்ற படம் வெளிவந்தது.

எஸ்.பி. முத்துராமன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் இப்பட தலைப்பை தன் காதலி நயன்தாராவுக்காக கவிதாலயா நிறுவனத்திடம் வாங்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

இவர் தயாரிக்கவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க,
மிலண்ட் ராவ் என்பவர் இயக்குகிறார்.

மேலும் தன் புதிய நிறுவனத்திற்கு ரெளடி பிக்சர்ஸ் என பெயர் வைத்துள்ளார் விக்னேஷ்சிவன்.

கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்ய, கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.

இப்பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இன்றுமுதல் இதன் சூட்டிங்கை தொடங்கவுள்ளனர்.

Netrikann Nayanthara and Vignesh Shivan got Rajini movie title

கடுகளவு கர்வமில்லாதவர்.; இமயமளவு இதயமுள்ளவர்.. ரஜினிக்கு பார்த்திபன் நன்றி

கடுகளவு கர்வமில்லாதவர்.; இமயமளவு இதயமுள்ளவர்.. ரஜினிக்கு பார்த்திபன் நன்றி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthiban said thanks to Rajini for his wishes on Oththa Seruppuபார்த்திபன் இயக்கி அவர் ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’

இந்தப் படம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தை பாராட்டி நடிகர் ரஜினிகாந்த் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், ” தனது ஒவ்வொரு படத்திலும் தனித்துவத்தை காட்டும் பார்த்திபன் இந்த படத்தின் மூலம் உச்சத்தை தொட்டிருக்கிறார். இது தமிழ் திரையுலகில் புதுமையான, புரட்சியான, பாராட்டுக்குரிய முயற்சி. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

கேமிரா, எடிட்டிங், பேக்கிரவுண்ட் மியூசிக், பின்னணியில் ஒலிக்கும் குரல்கள் அனைத்தும் அற்புதம். படம் வெற்றி பெற என்னுடைய வாழத்துக்கள்”. என ரஜினி தெரிவித்துள்ளார்.

இந்த கடித நகலை ட்விட்டரில் பதிவிட்டு, அத்துடன் கடுகளவு கர்வமில்லாத, வெந்திய அளவு பந்தா இல்லாத, மிளகளவு மிகையில்லாத ஆனால் இமயமளவு இதயமுள்ள, GOLDEN GLOBE குணநலமுள்ள OSCARஐ தாண்டியும் உச்சம் தொட்ட சூப்பர் ஸ்டார் திரு. ரஜினி சாரின் வாழ்த்து” என பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

Parthiban said thanks to Rajini for his wishes on Oththa Seruppu

டபுள் ஹீரோயின்ஸ் படங்களை தயாரிக்கும் ‘பேட்ட’ டைரக்டர்

டபுள் ஹீரோயின்ஸ் படங்களை தயாரிக்கும் ‘பேட்ட’ டைரக்டர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik subbaraj producing 2 movies with Keerthy Suresh and Aishwarya Rajeshரஜினியின் பேட்ட படத்தை அடுத்து தனுஷ் நடித்து வரும் படத்தை லண்டனில் இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ்.

அதே சமயத்தில் இங்கு தமிழகத்தில் இவர் தயாரிக்கவுள்ள இரண்டு பட படப்பிடிப்பையும் துவங்கியுள்ளார்.

மேயாத மான், மெர்க்குரி உள்ளிட்ட படங்களை தயாரித்த தன் ஸ்டோன் பென்ச் என்ற நிறுவனம் மூலம் இப்படங்களை தயாரிக்கிறார்.

ஒரு படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க, மற்றொரு படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

கீர்த்தி நடிக்கும் படத்தை ஈஸ்வர் கார்த்திக் என்ற புதுமுகம் இயக்குகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கும் படத்தை ரதீந்தின் ஆர் பிரசாத் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.

இந்த இரண்டு பட சூட்டிங்கும் கொடைக்கானலில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

Karthik subbaraj producing 2 movies with Keerthy Suresh and Aishwarya Rajesh

ரசிகர்கள் பேனர் வைக்கக் கூடாது என கமல்-சூர்யா-விஜய் அறிவிப்பு

ரசிகர்கள் பேனர் வைக்கக் கூடாது என கமல்-சூர்யா-விஜய் அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Fans must ban flex banners says Kamal Vijay Suriyaசென்னையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சிக்கு வழக்கம்போல ரோடு முழுவதும் ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன.

அப்போது சாலை வழியே சென்றுக் கொண்டிருந்த 23வயது சுபஸ்ரீ மீது ஒரு பேனர் விழ, அவர் தன் டூவிலரில் இருந்து கீழே விழுந்தார்.

அந்த சமயம் பார்த்து ஒரு தண்ணீர் லாரி அவர் மீது ஏறிவிட அந்த நிமிடமே அவரின் உயிர் பறி போனது. இந்த சம்பவம் தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இதனையடுத்து பேனரை பிரிண்ட் செய்தவர், லாரியை ஓட்டியவர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆனால் சம்பந்தபட்ட அதிமுக பிரமுகர் இதுவரை கைது செய்யப்படவில்லை. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் சில அரசியல் கட்சிகள் இனி தங்கள் விழாக்களில் பேனர்களை வைக்கக் கூடாது என தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சினிமா உலகிலும் இது தொடர்பான அறிவிப்புகள் வந்த வண்ணம் உள்ளன.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் பேசும்போது.. நான் 30 வருடங்களுக்கு முன்பே கட் அவுட் பேனர்களை வைக்க கூடாது என என் ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

அதுபோல் பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் பேனர்கள் வைக்க கூடாது என விஜய்யும் தெரிவித்துள்ளார்.

காப்பான் பட பிரஸ் மீட்டில் கலந்துக் கொண்ட நடிகர் சூர்யாவும் ரசிகர்கள் பேனர்கள் வைக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

அதற்கு மாறாக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்யுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Fans must ban flex banners says Kamal Vijay Suriya

More Articles
Follows