தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து வருபவர் நயன்தாரா.
முக்கியமாக தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகை இவர்தான்.
இவர் தனது நீண்ட நாள் காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை ஓரிரு மாதங்களுக்கு முன் மணந்தார்.
இவர்கள் இணைந்து ‘ரௌடி பிக்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகின்றனர்.
தற்போது மலையாளத்தில் ‘கோல்ட்’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
மேலும் அஹ்மத் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிக்கும் ஒரு படத்திலும் நடிக்கவுள்ளார்.
இவர் தனது 75-வது படத்தை நெருங்கும் வேளையில் விரைவில் நடிப்பிலிருந்து நழுவவுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு இந்த முடிவை அவர் எடுக்கிறார் என சொல்லப்படுகிறது.
மேலும் இல்லற வாழ்க்கை மற்றும் சினிமா தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
Here is reason why Nayanthara quits Cinema