நடிக்க வரமாட்டுறாரு.; செம லாஸ்… சிம்பு மீது ஞானவேல்ராஜா புகார்

நடிக்க வரமாட்டுறாரு.; செம லாஸ்… சிம்பு மீது ஞானவேல்ராஜா புகார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

 Gnanavel Raja complaint against Simbu on his call sheet issueநடிகர் சிம்பு மீது புகார் கொடுக்காத தயாரிப்பாளர்களை எண்ணிவிடலாம் போல. தினம் அவர் மீது புகார்கள் வருகின்றன.

பரபரப்பாக அறிவிக்கப்பட்ட மாநாடு படத்தை சிம்புவின் கால்ஷீட் சொதப்பலால் அவரை படத்தில் இருந்து நீக்கினார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

இந்த நிலையில் கன்னட படமான மப்டி படத்தின் ரீமேக்கில் சிம்பு, கௌதம் கார்த்திக் இருவரும் நடித்து வருகின்றனர். இப்படத்தை ஞானவேல்ராஜா தயாரித்து வருகிறார்.

கன்னட படத்தை இயக்கிய நார்தன் தான் தமிழிலும் இந்த படத்தை இயக்கினார். சிம்பு சிவ ராஜ்குமார் கதாபாத்திரத்திலும், கௌதம் கார்த்திக் ஸ்ரீமுரளி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தனர்.

இப்பட ஷூட்டிங்கிற்கும் சிம்பு செல்லாமல் இருந்துள்ளார்.

அப்படியே வந்தாலும் பாதிநாள் தான் சூட்டிங்கில் இருப்பாராம்.

தற்போது சிம்புவின் பிரச்சினையால் இந்த படமும் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இப்படம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் இணைத்து புகார் கடிதமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் அளித்துள்ளார் ஞானவேல் ராஜா.

Gnanavel Raja complaint against Simbu on his call sheet issue

ரஜினி வருவார்; அவருடன் நிற்பேன்; ‘ராங்கா’ பேசிய ராதாரவி பல்டி

ரஜினி வருவார்; அவருடன் நிற்பேன்; ‘ராங்கா’ பேசிய ராதாரவி பல்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

I will stand with Rajini in his Political party says Radharaviதன்னை பற்றிய பேச்சு எப்போதும் மீடியாவில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையாவது சர்ச்சையாக பேசுவார் ராதாரவி.

பல மேடைகளில் அரசியல்வாதி முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை பலரையும் கிண்டலடிப்பார்.

ரஜினியை பல மேடைகளிலும் கிண்டலடித்து பேசியிருக்கிறார்.

இந்த நிலையில் ரஜினியை புகழ்ந்து பேசியிருக்கிறார்.

முன்னாள் மேயரும், ரஜினியின் தீவிர ஆதரவாளருமான கராத்தே தியாகராஜனின் பிறந்த நாள் விழாவில் அதிமுக பிரமுகர் நடிகர் ராதாரவி கலந்துக் கொண்டு பேசினார்.

ரஜினி அரசியலுக்கு வருவார் என்று கராத்தே தியாகராஜன் சொல்லிக்கொண்டே இருக்கிறார். நானும் அதை நம்பிச் சொல்கிறேன்.

அவர் வந்தால் நான் பின்னால் இருப்பேன். ரஜினி சடக்கென்று பேசி ஒரு முடிவை எடுக்கமாட்டார். யோசிச்சுத்தான் எடுப்பார். ஆனால் இந்த முறை முடிவெடுப்பார்.

ரஜினி எப்படி வெல்வார்கள் என்று கேட்டார்கள்.? ஜெயிப்போம் அவ்வளவுதான். ஏனென்றால் பவர் இருக்கவேண்டும். மனிதாபிமானம் இருக்கவேண்டும். எதிர்க்கிற சக்தி வேண்டும். இது எல்லாம் இருந்தால் வெற்றி நிச்சயம்.

இவை எல்லாம் இணைந்துள்ளது. ஏனென்றால் வலுவான சக்தி ஒன்று சேரும்போது வலுவற்ற சக்தி தோற்கும்.” என பேசினார் ராதாரவி.

I will stand with Rajini in his Political party says Radharavi

எஜுகேஷன் சிஸ்டம் சரியில்ல; மாத்தனும்.. லதா ரஜினி அதிரடி

எஜுகேஷன் சிஸ்டம் சரியில்ல; மாத்தனும்.. லதா ரஜினி அதிரடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We must Change Education system says Latha Rajinikanthசென்னை அபிராமபுரத்தில் மழலையர் பள்ளியை லதா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.

இதன்பின் செய்தியாளர்கள் பேசும்போது கல்வி முறை குறித்து பேசினார்.

அப்போது… 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அறிவிப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர், ‘தேர்வு முறை மட்டுமல்ல, கல்வி முறையே முற்றிலும் மாற்றப்பட வேண்டும். தேர்வுகள் மூலம் குழந்தைகளின் திறனை அளவிட முடியாது. கல்வியாளர்களுடன் கலந்துரையாட வேண்டும்’ என லதா ரஜினி பதிலளித்தார்.

We must Change Education system says Latha Rajinikanth

உலத்திரைப்பட விழாவிற்கு தேர்வான பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” !

உலத்திரைப்பட விழாவிற்கு தேர்வான பார்த்திபனின் “ஒத்த செருப்பு சைஸ் 7” !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

otha seruppuதமிழ் சினிமா தாண்டி உலகம் முழுவதுமிலிருந்து பாராட்டு குவித்து வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு மேலும் ஒரு மகுடம் கிடைத்திருக்கிறது. திரை வரலாற்றில் முக்கியமானதொரு படைப்பாக, உலக சினிமாவை தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்த படைப்பாக, உருவாகி இருக்கும் “ஒத்த செருப்பு சைஸ் 7” பல்வேறு வகையிலும் சினிமா உலகத்தினருக்கு பாடமாக விளங்கி வருகிறது. மேலும் ஒரு படத்தை ரசிகனிடம் கொண்டு சேர்ப்பது எப்படி என்பதை இப்படம் மூலம் பாடமாக எடுத்திருக்கிறார் பார்த்திபன். திரையரங்கில் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டு வரும் “ஒத்த செருப்பு சைஸ் 7” படம் தற்போது IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்வாகியுள்ளது.

தயாரிப்பாளர், நடிகர், இயக்குநர் பார்த்திபன் இது குறித்து பகிர்ந்து கொண்டது…

தேர்வாளர்களின் அன்பால் நான் நெகிழ்ந்து போயிருக்கிறேன். அவர்கள் தந்த இந்த அடையாளம் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு உலகளவிலான கதவை திறந்து வைத்துள்ளது. இந்தப்படம் ஒரு மனிதன் மட்டுமே நடித்து இயக்கி தயாரித்த படம். ஒரு புது முயற்சி ஆனால் ஒரு மனிதனின் சாதனையாக அடையாளப்படுத்தப்படும் இப்படத்திற்கு பின்னால் சில பெரும்மனிதர்களின் உழைப்பும் அன்பும் அடங்கியிருக்கிறது. அளவில்லாத அன்பின் வழி இசையமைத்த சந்தோஷ் நாராயணின் பாடலும், சத்யாவின் பின்னணி இசையும் மனம் கவர்ந்த ராம்ஜியின் ஒளிப்பதிவும், ரசூல் பூக்குட்டியின் அசாத்திய ஒலிப்பதிவும் இப்படத்திற்கு பெரும்பலமாக அமைந்திருந்தது. இந்தப்படத்தை பராட்டி தங்கள் வாழ்த்துக்கள் மூலம் ரசிகர்களிடம் சேர்த்த இந்தியாவின் பெரும் நட்சத்திரங்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த அங்கீகாரம் எனக்கு மிகப்பெரும் சந்தோஷத்தை அளித்திருக்கிறது இந்திய திரைப்பட திருவிழாவிற்கு 26 படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமல்லாமல் அது இத்திரைப்பட திருவிழாவின் 50வது தங்க ஆண்டில் நடைபெற்றிருப்பது மேலும் கொண்டாட்டதிற்குரியது. இந்நேரத்தில் தமிழில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மற்றுமொரு படைப்பான லக்‌ஷ்மி ராம்கிருஷ்ணன் அவர்களின் ஹவுஸ் ஓனர் படத்திற்கும் எனது அன்பு வாழ்த்துக்கள். இந்த அங்கீகாரம் மேலும் பல புது முயற்சிகளுக்கும், சோதனை முயற்சிகளுக்கும் ஊக்கம் தந்திருக்கிறது என்றார்.

உலகத் திரைப்படத் திருவிழாவில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் !

உலகத் திரைப்படத் திருவிழாவில் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் !

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

House owner movie stillsலக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவான ஹவுஸ் ஓனர் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சினிமா உலகினரிடையே நல்லதொரு பாராட்டையும் வரவேற்பையும் பெற்றது. படத்தின் வெளியீட்டின் போது விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் ஏகோபித்த பாராட்டுக்களை பெற்று அனைவரையும் கவர்ந்தது. சென்னை வெள்ளத்தின் தாக்குதல் பின்னணியில் மாட்டிக்கொண்ட முதிய தம்பதியரின் காதலை, அழகோடும் அன்பாகவும் சொன்ன “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் நடிப்பு, இசை, ஒளிப்பதிவு என உருவாக்கத்திலும் சிறந்து விளங்கியது. மிகச் சிறந்ததொரு படைப்பாக பாராட்டப்பட்ட இப்படத்திற்கு தற்போது மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. IFFI 2019 உலகத் திரைப்பட திருவிழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதுமாக இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 26 திரைப்படங்களில் ஒன்றாக “ஹவுஸ் ஓனர்” திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மொத்தப் படக்குழுவும் படத்திற்கு கிடைத்த மிகப்பெரும் கௌரவத்தால் உற்சாகத்தில் உள்ளது.

இத்திரைப்பட விழாவிற்கு படம் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி இயக்குநர் லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன் கூறியதாவது….

இது முற்றிலும் நான் எதிர்பாராத ஒன்று. மிகுந்த ஆச்சர்யத்தையும் சந்தோஷத்தையும் ஒருங்கே அளித்திருக்கிறது. இந்த நேரத்தில் பட வெளியீட்டின் போதே படத்தை வெகுவாக பாராட்டிய பத்திரிகை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துகொள்கிறேன். எனது திரைப்படத்தின் மீதான காதலையும் அதன் மீதான என் ஆர்வத்தையும் இந்த அங்கீகாரம் பெரும் ஊக்கத்தை தந்து மேலும் மேலும் பயணிக்கும் தெம்பை தந்துள்ளது. இந்நேரத்தில் IFFI அமைப்பினருக்கு எனது மிகப்பெரும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த விழாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 25 திரைப்படங்களுக்கும், 15 குறும்படங்களுக்கும் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் தமிழில் தன் தனித்திறமையால் மிகப்பெரும் சாதனைப் படைப்பாக உருவாகியிருக்கும் பார்த்திபன் சாரின் “ஒத்த செருப்பு சைஸ் 7” படத்திற்கு இந்தியன் பனோரமாவில் அங்கீகாரம் கிடைத்திருப்பதில் மிகுந்த பெருமைகொள்கிறேன் என்றார்.

“ஹவுஸ் ஓனர்” திரைப்படம் சென்னை வெள்ளத்தின் பின்னணியில் முதிய தம்பதிகளின் காதல் நினைவுகளூடாக அன்பை சொல்லும் படமாக, லக்‌ஷ்மி ராமகிருஷ்ணண் இயக்கத்தில் உருவாகியிருந்தது. அவரது கணவர் ராமகிருஷ்ணன் இப்படத்தினை தயாரித்திருந்தார். கிஷோர், ஶ்ரீரஞ்சனி, பசங்க புகழ் கிஷோர், மற்றும் லவ்லின் சந்திரசேகர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இவ்வாண்டில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது

தன் மகனை நாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான். “டக்கு முக்கு டிக்கு தாளம்” இன்றோடு படபிடிப்பு முடிவடைகிறது.

தன் மகனை நாயகனாக களமிறக்கும் தங்கர் பச்சான். “டக்கு முக்கு டிக்கு தாளம்” இன்றோடு படபிடிப்பு முடிவடைகிறது.

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thangar bachanகிராமத்துப் பின்னணியையும் கிராமத்து வாழ்க்கையின் யதார்த்தையும் தனது திரைக்கதையின் மூலம் அழுத்தமாக பதிவு செய்த இயக்குநர் தங்கர் பச்சான், சென்னை நகரத்தை மையமாகக் கொண்டு நகைச்சுவைப் படத்தை இயக்குகிறார். அப்படத்திற்கு ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ (Takku Mukku Tikku Thalam) என்று பெயரிடப்பட்டுள்ளது. பல முன்னணி கதாநாயகர்களை மாறுபட்ட பாத்திரத்தில் காண்பித்த தங்கர் பச்சான் இப்படத்தின் மூலம் தனது மகன் விஜித் பச்சானைக் கதாநாயகனாக அறிமுகப்படுத்துகிறார். முதல் படத்திலேயே தன் மகனை நகைச்சுவைப் பாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.
இத்திரைப்படத்தில் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சென்னை நகரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படமென்பதால் சென்னை சுற்றிலுமுள்ள பல்வேறு பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது. 70 நாட்கள் ஆன நிலையில் இன்றுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைகிறது.

இப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள்.

விஜித் பச்சான் நாயகனாக நடிக்க, மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகிராம் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள்.

‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கவிருக்கிறார்கள்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:-

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – தங்கர் பச்சான்
இசை – தரண்குமார். ஒளிப்பதிவு – பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் படத்தொகுப்பு – சாபு ஜோசப்
கலை – சக்தி செல்வராஜ்,
நடனம் – தினேஷ், சண்டைப்பயிற்சி – ஸ்டன்ட் சில்வா தயாரிப்பு நிறுவனம் – பிஎஸ்என் என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்.

More Articles
Follows